Vellore

News January 2, 2026

வேலூர் உழவர் சந்தைகளில் 127 கோடிக்கு வர்த்தகம்

image

வேலூர் மாவட்டத்தில் வேலூர் டோல்கேட், காகிதப்பட்டறை, காட்பாடி, குடியாத்தம், பள்ளிக்கொண்டா, பேரணாம்பட்டு ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தைகள் இயங்கி வருகிறது. இதில் கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை உழவர் சந்தைகள் மூலம் 32 ஆயிரத்து 985 டன் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை விற்பனையாகி உள்ளது. இதன் மதிப்பு ரூ.127 கோடியே 78 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News January 2, 2026

வேலூர் உழவர் சந்தைகளில் 127 கோடிக்கு வர்த்தகம்

image

வேலூர் மாவட்டத்தில் வேலூர் டோல்கேட், காகிதப்பட்டறை, காட்பாடி, குடியாத்தம், பள்ளிக்கொண்டா, பேரணாம்பட்டு ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தைகள் இயங்கி வருகிறது. இதில் கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை உழவர் சந்தைகள் மூலம் 32 ஆயிரத்து 985 டன் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை விற்பனையாகி உள்ளது. இதன் மதிப்பு ரூ.127 கோடியே 78 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News January 2, 2026

வேலூரில் 58 வாகனங்கள் மீது வழக்கு பதிவு

image

வேலூர் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 24 இடங்களில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 33 வழக்குகளும், நான்கு சக்கர வாகனம் ஓட்டும் போது சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 12 வழக்குகளும் இதர விதிகளை மீறியதாக மொத்தம் 58 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 2, 2026

வேலூரில் 58 வாகனங்கள் மீது வழக்கு பதிவு

image

வேலூர் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 24 இடங்களில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 33 வழக்குகளும், நான்கு சக்கர வாகனம் ஓட்டும் போது சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 12 வழக்குகளும் இதர விதிகளை மீறியதாக மொத்தம் 58 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 2, 2026

வேலூரில் மின்தடை – இதில் உங்க ஏரியா இருக்கா?

image

வேலூர்: வடுகந்தாங்கல், காரணம்பட்டு, மேல்பாடி, மோடிக்குப்பம் உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் நாளை (ஜன.3), பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அதன் காரணமாக, கே.வி.குப்பம், மேல்மாயில், வடுகந்தாங்கல், அம்முண்டி, திருவலம், காரணம்பட்டு, மேல்பாடி, வள்ளிமலை, எருக்கம்பட்டு, வெப்பாலை, வீரந்தாங்கல் உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW!

News January 2, 2026

வேலூர்: பெண்ணிடம் ரூ.1 கோடி மோசடி!

image

குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த பானுமதி (55), ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர் பாஸ்கரன் (65) என்பவரிடம், கீழ்யாச்சூர் பகுதியில் 1.41 ஏக்கர் நிலத்தை வாங்குவதற்காக, ஒரு கோடி ரூபாயை கடந்த மே மாதம் வழங்கியுள்ளார். ஆனால், பாஸ்கரன் நிலத்தை அவருக்கு விற்காமல், வேறு ஒருவருக்கு விற்று விட்டு, பானுமதியிடம் வாங்கிய பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றி வந்தார். இதுகுறித்த புகாரில் பாஸ்கரனை போலீசார் கைது செய்தனர்.

News January 2, 2026

வேலூர்: 3 மாத குழந்தை பரிதாப பலி!

image

பேரணாம்பட்டு அருகே உள்ள கீழ்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன், அஸ்வினி தம்பதி. இவர்களது 3 மாத குழந்தை யஸ்வந்த். நேற்று இவர்களின் குழந்தை இறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அஸ்வினி மேல்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது பால் குடித்ததில் மூச்சுத் திணறி குழந்தை இறந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மேல்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News January 2, 2026

வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி நேற்று இரவு (ஜன.01) இரவு இன்று காலை வரை ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News January 2, 2026

வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி நேற்று இரவு (ஜன.01) இரவு இன்று காலை வரை ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News January 1, 2026

வேலூர்: ரூ.50 கட்டினால் ரூ.1 லட்சம் கிடைக்கும்

image

வேலூர், போஸ்ட் ஆபிஸில் உள்ள RD திட்டத்தில் தினமும் ரூ.50 என்ற அடிப்படையில் மாதம் ரூ.1,500 கட்டினால், 5 ஆண்டு முடிவில் 6.7% வட்டியுடன் 1,07,050 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். இதே போல் 100 ரூபாய் என்ற வீதத்தில் சேமித்தால் 2,12,972 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். எதிர்காலத்தில் இந்த தொகை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டத்தில் இணைய அருகில் உள்ள போஸ்ட் ஆபிஸ் அலுவலகத்தை அனுகவும். (SHARE)

error: Content is protected !!