Vellore

News January 7, 2026

வேலூர் மாவட்டத்தில் எருது விடும் விழா விண்ணப்பிக்க தகவல்

image

வேலூர் மாவட்டத்தில் 2026-ம் ஆண்டு எருது விடும் விழா நடத்த அனுமதி கோரும் விண்ணப்பங்கள் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ளன. இங்கு <>க்ளிக்<<>> செய்து முகவரியின் Event Registration -ல் இணைப்பில் கண்டுள்ள உரிய ஆவணங்களுடன் பதிவு செய்யப்பட வேண்டும். சரியான ஆவணங்களை பதிவேற்றம் செய்யாவிட்டால் மனு தள்ளுபடி செய்யப்படும் என கலெக்டர் சுப்புலட்சுமி  தெரிவித்துள்ளார்.

News January 6, 2026

வேலூர்: தீராத நோய்களை தீர்க்கும்.. பெருமாள் கோயில்!

image

வேலூர் அருகே காட்பாடியில் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. வேலூரில் அமைந்துள்ள பழமையான கோயில்களில் இந்த கோயிலும் ஒன்றாகும். இந்த கோயிலை சுற்றி அதிகமான மூலிகைகள் இருப்பதால் நோய் தீர்க்கும் மகிமையும் இருக்கிறது. இந்த கோயிலுக்கு வந்து பெருமாளை தரிசித்தால் திருமண தடை நீங்கும், வியாபாரம் விருத்தியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News January 6, 2026

வேலூரில் டிராக்டர் வாங்க 80% மானியம்!

image

வேலூரில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு இங்கு <>க்ளிக் செய்யலாம்<<>> அல்லது வேளாண் துறை அலுவலகத்தை அணுகி தெரிந்துகொள்ளலாம். SHARE NOW!

News January 6, 2026

வேலூர்: டிகிரி முடித்தால் SBI வங்கி வேலை! APPLY

image

வேலூர் மாவட்ட மக்களே…, SBI வங்கியில் காலியாக உள்ள 55 சிறப்பு அலுவலர்களுக்கான காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பிக்க வரும் ஜன.10ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் மறக்காம SHARE பண்ணுங்க!

News January 6, 2026

JUST IN: வேலூரில் மழை கொட்டப் போகுது!

image

வேலூர் மாவட்ட மக்களே.., வருகிற ஜன.11ஆம் தேதி நமது மாவட்டத்திற்கு கனமழை பெய்யக் கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மஞ்சல் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், பொதுமக்கள் கவனமாகவும் முன்னெச்சரிக்கையுடனும் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 6, 2026

வேலூர்: பயணிகளுக்கு முக்கிய தகவல்!

image

வேலூர் மக்களே பண்டிகை காலம் வருவதால் பலரும் ரயிலில் பயணம் செய்ய திட்டமிட்டு இருப்பீர்கள். ரயிலில் பயணம் செய்யும் போது laptop, phone, luggage போன்றவற்றை தவறவிட்டால் பதற்றம் வேண்டாம். <>இங்கே கிளிக் <<>>செய்து இந்த appஐ டவுன்லோட் செய்யுங்கள். அதில் நீங்கள் பயணித்த ரயில் எண், எந்த நிலையத்தில் இறங்குநீர்கள் போன்ற அடிப்படை விவரத்தை பதிவிட்டால் போதும். சிம்பிள், உங்கள் பொருள் வந்து சேரும். SHARE IT

News January 6, 2026

வேலூரில் கொடூரக் கொலை! ஒருவர் சரண்

image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியைச் சேர்ந்தவர் டேனி வளனரசு(19).வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில், கடந்த டிச.31ஆம் தேதி டேனி வளனரசு அடித்துக் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் ஆந்திரா, சித்தப்பாறை மலையடிவாரத்தில் கிடைக்கப்பட்டது. இதுகுறித்த விசாரணையில் கிஷோர் கண்ணன் எனும் மாணவர் ஏற்கனவே கைதான நிலையில், நேற்று(ஜன.5) மற்றோரு நபரான பார்த்த சாரதியும் சரணடைந்தார்.

News January 6, 2026

வேலூர்: பொங்கல் பரிசு வரலையா..? உடனே CALL!

image

வேலூர் மாவட்ட மக்களே.., பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 6, 2026

வேலூர்: சக நண்பனை துடிதுடித்து கொன்ற கொடூரம்

image

வேலூரில் கல்லூரி மாணவன் சக நண்பர்களால் கொலை செய்யப்பட்டு ஆந்திராவில் உள்ள காட்டில் சடலத்தை வீசினர். இந்த வழக்கில் கிஷோா் கண்ணனை சனிக்கிழமை இரவு போலீசார் கைது செய்தனர். மேலும், இவ்வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த மற்றொரு மாணவரான பாா்த்தசாரதி, வேலூா் நீதித்துறை நடுவா் (எண்.1) மன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தாா். அவரை வரும் 19-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சத்யகுமாா் உத்தரவிட்டாா்.

News January 6, 2026

வேலூரில் பெறப்பட்ட 23,936 விண்ணப்பங்கள்

image

வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீக்கம் மற்றும் திருத்தம் மேற்கொள்ள சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் உள்ள 1,457 வாக்குச்சாவடிகளில் 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் மொத்தம் 23,936 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!