India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்திய வருமான வரித்துறையில் MTS, Stenographer, Tax Assistant Post பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 10th, 12th, ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.18,000 முதல் 81,100 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <

வேலூரில், போலீசார் வாகனங்களை சோதனை செய்யும்போது லைசென்ஸ் கையில் இல்லை என்ற கவலை வேண்டாம்.<

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். ஷேர் பண்ணுங்க!

வேலூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க!

வேலூர் மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் சுப்புலட்சுமி கோரிக்கை விடுத்துள்ளார். அதில், போகி பண்டிகையின் போது பழைய டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், டியூப், காகிதம் மற்றும் ரசாயனம் கலந்த பொருட்களை எரிப்பதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பணியாற்றி வந்த டிஎஸ்பிக்கள் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி வேலூர் மாவட்டம் காட்பாடியில் டிஎஸ்பியாக பணியாற்றிய பழனி, ராணிப்பேட்டை மாவட்ட குற்றப்பிரிவுக்கு டிஎஸ்பியாகபணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், கடலூர் சேத்தியாத்தோப்பில் பணியாற்றிய விஜயகுமார் காட்பாடிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

வேலூர் தனியார் பல்கலைக்கழகத்தில் நேற்று ‘வெற்றி நமதே’ வழிகாட்டும் நிகழ்ச்சி அண்ணா அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பல்கலைக்கழக துணைத்தலைவர் சங்கர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு பொதுத்தேர்வுக்கு தயாராகும் முறை மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

வேலூரில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு <

தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு டிஇஓ பதவி உயர்வு வழங்க பரிந்துரைகளை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் மாவட்டக் கல்வி அலுவலர் பதவிக்கு விருப்பம் தெரிவித்துள்ள தலைமையாசிரியர்கள் சார்பான 01.01.2021 முதல் 31.12.2025 வரையிலான மந்தண அறிக்கைகளை தவறாமல் அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் திறனை மேம்படுத்தவும், கல்வி உதவித் தொகை வழங்கவும், திறனறி தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி நேற்று வேலூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 356 மாணவ- மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். இதில் 23 மையங்களில் நடந்த தேர்வை மொத்தம் 5 ஆயிரத்து 132 பேர் எழுதினர். 224 பேர் தேர்வு எழுத வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.