India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்திய ரயில்வே துறையில் 8 பிரிவுகளின் கீழ் 312 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 12th முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், இதற்கு மாத சம்பளம் ரூ.19,900 முதல் ரூ.44,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.29-க்குள் இங்கு <

வேலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ளன. வேலூர்–நாகர்கோவில் ரூ.3,600, வேலூர்–நெல்லை ரூ.3,500 என வசூலிக்கப்படுகிறது. வழக்கத்தை விட அதிகமாக கட்டணம் உயர்த்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பாதிக்கப்படுவதாகவும், அரசு உடனடி கட்டுப்பாடு விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடுவதற்கு வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய சிறையில் இருந்து 25-க்கும் மேற்பட்ட கைதிகள் தற்போது வரை பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் பலர் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது. கைதிகளின் நன்னடத்தையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு 4 அல்லது 6 நாட்கள் பரோல் வழங்கப்படும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அளவில் பொது விநியோக திட்டத்தின் சார்பில் ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்கம் சேர்த்தல் திருத்தம் மேற்கொள்ள சிறப்பு குறை தீர்ப்பு முகாம் கடந்த 10-ம் தேதி நடந்தது. இந்த முகாமில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 209 மனுக்கள் பெறப்பட்டு மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர் மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பிளாக்கில் விற்பனை நடப்பது, குறிப்பிட்ட நேரத்தை தாண்டி விற்பனை, விலைக்கு மேல் ரூ.10 கேட்பது, மேலும் எந்த வித மோசடி செயல்கள் நடந்தாலும், அதுகுறித்து உடனடியாக 04151-294600 என்ற லஞ்ச ஒழிப்புத் துறை எண்ணிற்கு புகார் அளிக்கலாம். உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

1.முதலில் <
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

காட்பாடி அடுத்த P.C.K. நகர் பகுதியில் நேற்று (ஜன.11) இரவு லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 2 பேர் படுகாயமடைந்தனர். பலத்த காயமடைந்த இருவரையும் அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்துக்கு குறித்து காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வேலூர் மக்களே! பொங்கல் பண்டிக்கைக்கு வெளி ஊர்களில் இருந்து சொந்த ஊருக்கு அரசுப் பேருந்துகள் மூலம் செல்ல உள்ளீர்களா? இந்த எண்களை நோட் பண்ணி வச்சிக்கோங்க!
1. பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் – 1800 599 1500
2. Luggage தொலைந்து போனால் – 044-49076326
3. ஓட்டுநர் / நடத்துநர் குறித்த புகார் – 1800 599 1500
4. இந்த தகவல் மற்றவர்களுக்கு பயன்பெற SHARE பண்ணுங்க!

வேலூர் மக்களே! பொங்கல் பண்டிக்கைக்கு வெளி ஊர்களில் இருந்து சொந்த ஊருக்கு அரசுப் பேருந்துகள் மூலம் செல்ல உள்ளீர்களா? இந்த எண்களை நோட் பண்ணி வச்சிக்கோங்க!
1. பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் – 1800 599 1500
2. Luggage தொலைந்து போனால் – 044-49076326
3. ஓட்டுநர் / நடத்துநர் குறித்த புகார் – 1800 599 1500
4. இந்த தகவல் மற்றவர்களுக்கு பயன்பெற SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.