India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோடை காலத்து கடுமையான வெயிலை மழை வந்து தணித்து வருகிறது. அந்த வகையில் நேற்று (ஜூன் 5) வேலூரில் அதிகபட்சமாக 40.10 மிமீ மழை பதிவானது. மோர்தனா 34.20 மிமீ மழையும், பேர்ணாம்பட்டு 2.60 மிமீ, கே.வி. குப்பம் 3 மிமீ, காட்பாடி 15.20 மிமீ மழையும் பதிவானது. மாவட்டம் முழுவதுமாக 140.80 மிமீ மழைப்பொழிவு பதிவாகியிருக்கிறது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் இந்தாண்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் 2,75,000 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நேற்று (ஜூன் 5) வேலூரில் நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் மாநகராட்சி ஆணையர் ஜானகி மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இவ்வியக்கம் விவசாயிகள் மரம் நடுவதற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை இலவசமாக வழங்கி வருகிறது.
வேலூரில் உள்ள பெரியார் பூங்காவை தனியார் நிறுவனம் பராமரித்து வந்தது. பின்னர் பல காரணங்களால் தனியார் நிறுவனம் பூங்கா பராமரிப்பு பணியை சில ஆண்டு நிறுத்தியது. இதனால் பூங்காவை மாநகராட்சி, மத்திய தொல்லியல் துறையிடம் நேற்று (ஜூன் 5) ஒப்படைத்தது. இன்னும் 2 மாதத்திற்குள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூரில் திரைப்பட நடிகரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.வி.சேகர் இன்று (ஜூன் 5) அளித்த பேட்டியில் தமிழ்நாடு பாஜக அண்ணாமலை தலைமையில் ஒரு பூஜ்ஜியம்தான் என்பது நிரூபணமாகியுள்ளது. ஒரு பந்தயத்தில் ஓடுகின்ற ஆறு குதிரையில் எந்த குதிரை வெற்றி பெறும், எந்த குதிரை நொண்டியடிக்கும் என்று நமக்கு நன்றாகத் தெரியும். அதேபோல, தமிழ்நாடு பாஜக என்ற குதிரை ஏற்கனவே கவிழ்ந்துவிட்டது என்றார்.
வேலூர் மாவட்டத்தில் உயர்கல்வி பயில விரும்பும் நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு, திசு பண்முகக் கடினமாதல், நடுக்கு வாதம், இரத்த அழிவுச்சோகை, இரத்த உறையாமை உட்பட 21 வகையான மாற்றுதிறனாளி மாணவ/ மாணவியர் விருப்பபாட பிரிவில் 5 விழுக்காடு ஒதுக்கீட்டினை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று ஜூன் 5 வெளியிட்டுள்ள செய்தி குரூப்பில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது. சில இடங்களில் மழை பெய்து வருவதும் குறிப்பிட்டத்தக்கது.
2024 மக்களவைத் தேர்தல்:
திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்- 5,68,692 வாக்குகள்
பாஜக – புதிய நீதிக் கட்சி வேட்பாளர் ஏ. சி. சண்முகம்- 3,25,990 வாக்குகள்
அதிமுக வேட்பாளர் பசுபதி- 1,17,682 வாக்குகள்
நாதக வேட்பாளர் மகேஸ் ஆனந்த்- 53,284 வாக்குகள்
வேலூர் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வேலூர் உட்பட 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று(ஜூன் 5) மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது. சில இடங்களில் மழை பெய்து வருவதும் குறிப்பிட்டத்தக்கது.
மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் பல இடங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் மது வகைகளை வாங்கிச்சென்றனர். இதனால் வேலூர் மாவட்டத்தில் ஒரேநாளில் ரூ.4.80 கோடிக்கு மது விற்பனை நடந்ததாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் 5 லட்சத்து 68 ஆயிரத்து 692 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பசுபதி 1 லட்சத்து 17 ஆயிரத்து 682 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்துள்ளார். இவர் உட்பட வேலூரில் போட்டியிட்ட 29 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.