India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டத்தில் கோடை காலம் முடிந்த பிறகு வெயிலின் தாக்கம் குறைந்து கொண்டே வருகிறது. மார்ச் மாதம் முதல் தினமும் 100 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்தி வந்த நிலையில் தற்போது படிப்படியாக குறைந்து இன்று (ஜூன் 11) 98.8°F டிகிரியாக பதிவானது. மேலும் மாலை நேரத்தில் குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் மேன்மை பொருந்திய பணிகளுக்காக இந்திய அரசாங்கம் ஜனவரி 2025 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் (பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ) பெற https://awards. gov. in மற்றும் https://padmaawards. gov. in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கலெக்டர் சுப்புலெட்சுமி இன்று (ஜூன் 11) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு துணிநூல் துறை திறன் மேம்பாட்டு கழகம் வழிகாட்டுதலின்படி தென்னிந்திய பயிற்சி, ஆராய்ச்சி சங்கத்தின் (SITRA) மூலமாக 10 மற்றும் 12-ம் வகுப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு (ஆண்/பெண்) ஸ்பின்னிங், தொழில்நுட்ப ஜவுளிப் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. https://tntextiles.tn.gov.in/jobs/ இணையதள முகவரியில் பதிவு செய்து பயன்பெறுமாறு கலெக்டர் சுப்புலெட்சுமி இன்று தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (ஜுன் 10) எஸ்பி மணிவண்ணன் தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் கடந்த மாதம் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற குற்றங்கள் குறித்தும், நிலுவையிலுள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்கவும், சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் காவல்துறை, சிறைத்துறை, வனத்துறை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பெண்களின் முன்னேற்றத்துக்கும்,பெண்குலத்துக்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, நிர்வாகம், போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றி வரும் சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவில் விருது வழங்கப்பட்டு வருகிறது. 2024ஆம் ஆண்டுக்கான விருதுக்கு ஜூன் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் கலெக்டர் நேற்று கூறினார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளின் விவரங்கள் சேகரிக்கும் பணி தீவிரமடைந்துள்ள நிலையில் மாற்றுத்திறனாளிகள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து கணக்கெடுப்பில் பங்கேற்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை தொலைபேசி வாயிலாகவோ அல்லது நேரிலோ அணுகி அனைவரும் இக்கணக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என கலெக்டர் கூறியுள்ளார்.
குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் கிருத்திக் (13), அரசுப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்துவந்தார். நேற்று (ஜூன் 10) முதல்நாள் பள்ளிக்குச் சென்றார். வீட்டிற்கு வந்து புதிய புத்தகப்பை கேட்டார். இதற்கு அவரது பெற்றோர்கள் பிறகு வாங்கித் தருவதாக தெரிவித்தனர். இருப்பினும் விரக்தியடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குடியாத்தம் காந்திநகரில் உள்ள அரசு கல்லூரி அருகே கஞ்சா விற்பனை செய்வதாக டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று (ஜூன் 10) அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சூர்யா (26), தமிழரசன் (23) ஆகிய 2 பேரையும் போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஜுன் 10) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 10 லிட்டர் கள்ளச்சாராயம், 400 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள், 107 மதுபாட்டில்கள், 250 கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து ஒரே நாளில் 16 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழக கூட்டுறவுத் துறையில் பணியாற்றி வந்த இளநிலை ஆய்வாளர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் 62 பேருக்கு முதுநிலை ஆய்வாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர் துணை பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றிய கவிதா பதவி உயர்வு பெற்று வேலூர் மண்டலத்தில் முதுநிலை ஆய்வாளராகவும், ராணிப்பேட்டை துணை பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த வேலாயுதம், வெங்கடேஷ் ஆகியோர் பதவி உயர்வு பெற்றனர்.
Sorry, no posts matched your criteria.