India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அறுபடை வீடு முருகன் கோயில்களுக்கு இலவச ஆன்மீக பயணமாக மூத்த குடிமக்களை அழைத்து செல்லும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க நவ 15 ஆம் தேதி கடைசி நாளாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. விண்ணப்பங்களை வேலூர் மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது hrce.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று வேலூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் இன்று (நவம்பர் 9) பொது விநியோக திட்டத்தின் சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெறுகிறது. இதில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டைக்கு மனு செய்தல், செல்போன் எண் பதிவு செய்தல், குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம் செய்தல் போன்றவை மேற்கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (நவம்பர் 8) நடத்திய சோதனையில் 82 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக 4 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகட்டுவதற்கு கூட்டுறவு துறையின் மூலம் வழங்கப்படும் கடனுதவிகளை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் வீடு வேண்டி விண்ணப்பித்திருந்த மாற்றுத்திறனாளிகள், கரிகிரியில் உள்ள 50 வீடுகள் மற்றும் பேர்ணாம்பட்டு பத்தலபள்ளி 75 வீடுகள் உள்ளன. உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தெரிவித்தார்.
அரசு தேர்வுகள் துறையால் அனைத்து வகை பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1 மாணவர்களுக்கு தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு கடந்த மாதம் 19ம் தேதி நடந்தது. வேலூர் மாவட்டத்தில் 17 மையங்களில் நடந்த தேர்வில் 4220 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த தேர்வுக்கான தற்காலிக விடைக்குறியீடு www.dge.tn.gov.in என்ற அரசு தேர்வுகள் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் நாளை ( நவ 9 ) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், ஆகியவை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி இன்று (நவம்பர் 8) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் நேற்று (நவ.7) வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். இதில், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக திருவண்ணாமலை சேர்ந்த ராமராஜன், ரசூல், வேல் ஆகிய 3 பேரை கைது செய்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
வேலூர் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளத்தில் நவ 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்களுக்கு 110 சதுர அடிக்கு குறையாமல் சொந்த இடம் அல்லது வாடகை இடம் இருக்க வேண்டும். மருந்தகம் அமைக்கும் தொழில் முனைவோருக்கு அரசு மானியம் 3 லட்சம் 2 தவணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நேற்று (நவம்பர் 7) நடத்திய சோதனையில் 115 மது பாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய 2 பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக 3 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
பொன்னையில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன் பாலாற்றின் குறுக்கே 10 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக மகிமண்டலம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை கொண்டுவரப்பட உள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகின்ற நிதியாண்டில் நீதி ஒதுக்கப்பட்டு விரைவில் பணிகள் துவங்கப்படும் என்றார்.
Sorry, no posts matched your criteria.