Tuticorin

News February 26, 2026

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையங்கள் திறப்பு

image

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம், சாயர்புரம், காயல்பட்டினம், ஏரல், திருச்செந்தூர் கோவில் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பேருந்து நிலையங்கள் திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார். இதில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். *ஷேர் பண்ணுங்க.

News February 26, 2026

தூத்துக்குடி: மழை நேரத்தில் கரண்ட் இல்லையா?

image

தூத்துக்குடி மக்களே; தற்போது மழை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு பகுதியில் மின் விநியோகத்தில் பிரச்சனை எழும். அதனை சரி செய்ய லைன்மேனை நேரில் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் உடனடியாக லைன் மேன் வருவார். இதை உடனே எல்லோருக்கும் SHARE பண்ணுங்க!

News February 26, 2026

தூத்துக்குடி: மாணவர்கள் & பெற்றோர்கள் கவனத்திற்கு!

image

தூத்துக்குடி மாவட்டத்தில் உயர் கல்வி படிப்பதற்கு பொருளாதாரம் தடையாக இருக்கும் மாணவ மாணவிகள் கல்வி கடன் மூலம் பயின்று முன்னேற்றமடைய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கும் சிறப்பு முகாம் நாளை வெள்ளிக்கிழமை நடக்கிறது என மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க; உதவட்டும்.

News February 26, 2026

அமைச்சர் சொத்து குவிப்பு வழக்கு ஓத்திவைப்பு

image

தற்போது அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து வழக்கு தூத்துக்குடியில் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில் வழக்கை மார்ச்.3 க்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

News February 26, 2026

அமைச்சர் சொத்து குவிப்பு வழக்கு ஓத்திவைப்பு

image

தற்போது அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து வழக்கு தூத்துக்குடியில் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில் வழக்கை மார்ச்.3 க்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

News February 26, 2026

அமைச்சர் சொத்து குவிப்பு வழக்கு ஓத்திவைப்பு

image

தற்போது அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து வழக்கு தூத்துக்குடியில் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில் வழக்கை மார்ச்.3 க்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

News February 26, 2026

அமைச்சர் சொத்து குவிப்பு வழக்கு ஓத்திவைப்பு

image

தற்போது அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து வழக்கு தூத்துக்குடியில் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில் வழக்கை மார்ச்.3 க்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

News February 25, 2026

BREAKING தூத்துக்குடியில் விஷவாயு தாக்கி ஒருவர் பலி

image

தூத்துக்குடி ஆதிபராசக்தி நகர் பகுதியில் பாதாள சாக்கடை குழியில் உள்ள மோட்டரை செல்போனில் படம் எடுக்கும் போது நெல்லை மாவட்டம் பருத்தி குளம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்ற தூய்மை பணியாளர் விஷ வாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சங்கர் என்ற மற்றொரு தூய்மை பணியாளர் மயங்கிய நிலையில் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News February 25, 2026

ஸ்ரீவைகுண்டம்: நல்லகண்ணு மறைவால் பள்ளிக்கு விடுமுறை

image

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றங்கரையை பூர்வீகமாகக் கொண்ட நல்லகண்ணு இன்று உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரு பள்ளிகளுக்கும் நாளைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 25, 2026

தூத்துக்குடியில் பிப்ரவரி 27ல் கல்விக் கடன் முகாம்

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்ததாவது, பொருளாதார சிக்கலால் உயர்கல்வி தொடர முடியாத மாணவர்களுக்கு உதவ, வங்கியாளர்கள் இணைந்து கல்விக் கடன் வழங்கும் முகாம் பிப்.27 ம் தேதி, காலை 10 மணிக்கு விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும். மாணவர்கள் தேவையான ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம். இம்முகாம் உயர்கல்விக்கான சிறந்த வாய்ப்பாகும்.

error: Content is protected !!