Tuticorin

News February 27, 2026

தூத்துக்குடியில் விருப்ப மனு தாக்கல் செய்த அமைச்சர்

image

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான ஆட்சியில், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட சமுகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் மற்றும் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.

News February 27, 2026

தூத்துக்குடி: வாக்காளர்கள் கவனத்திற்கு!

image

தூத்துக்குடி மக்களே; வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

News February 27, 2026

தூத்துக்குடி: குண்டாஸில் கைதான 19 வயது இளைஞர்கள்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட சீனி முகம்மது நியாஸ் (19), சந்தோஷ்குமார் (19) ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.மதன் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட போலீசார் இருவரையும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

News February 27, 2026

தூத்துக்குடி: 1ம் வகுப்பு மாணவி மீது தாக்குதல்

image

தூத்துக்குடி ஜார்ஜ் சாலை பகுதியைச் சேர்ந்த ஜாய்ஸ் (45), தெற்கு புதுத்தெருவிலுள்ள நடுநிலைப் பள்ளி ஆசிரியர். கடந்த 19ம் தேதி, பாடம் சரியாகப் படிக்கவில்லை என கூறி முதலாம் வகுப்பு மாணவியை பிரம்பால் தாக்கியதாக புகார் எழுந்தது. மாணவியின் கையில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 26, 2026

தூத்துக்குடி: நடு வழியில் பெட்ரோல் தீர்ந்து விட்டால்.. NO TENSION

image

தூத்துக்குடி மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <>’Fuel@Call’<<>> என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 26, 2026

JUST IN தூத்துக்குடி மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பு

image

அய்யா வைகுண்டரின் 194-வது பிறந்த விழா மார்ச்.4 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்கு பதிலாக மார்ச்.14 அன்று அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். SHARE IT

News February 26, 2026

தூத்துக்குடி : சிலிண்டர் வாங்குவோருக்கு HAPPY நியூஸ்…!

image

தூத்துக்குடி மக்களே, உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை தாண்டி அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது. Indane: 75888 88824, HP Gas: 92222 01122, Bharat Gas: 1800 22 4344. இந்த எண்களில் Gpay, Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பில் பணத்தை செலுத்துங்க.இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேட்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News February 26, 2026

தூத்துக்குடி மாவட்டத்தில் 980 வாக்கு சாவடிகள்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் ஆறு சட்டமன்ற தொகுதிகளையும் சேர்த்து 980 வாக்கு சாவடி மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி விளாத்திகுளத்தில் 274, தூத்துக்குடியில் 360, திருச்செந்தூரில் 307, ஸ்ரீவைகுண்டம் 293, ஓட்டப்பிடாரம் 315, கோவில்பட்டி 315 என அமைக்கப்பட உள்ளது என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 26, 2026

தூத்துக்குடி விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 390 விவசாயிகள் மாவட்டம் முழுவதும் உள்ளனர். இதில் 76 ஆயிரத்து 669 விவசாயிகள் தனித்துவ விவசாய அடையாள எண் பெற்றுள்ளனர். மீதம் 36 ஆயிரத்து 721 விவசாயிகள் அடையாள அட்டை பெறாமல் உள்ளனர். எனவே எஞ்சியுள்ளவர்கள் அந்தந்த வட்டார வேளாண்மை அலுவலகத்தில் சென்று அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என வேளாண் இணை இயக்குனர் கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.

News February 26, 2026

கோவில் நிலங்கள் பொது ஏலம் விட அறிவிப்பு

image

குலசேகரன்பட்டினம் காஞ்சி விஜய கட்சி கொண்ட பாண்டீஸ்வரர், எழுவரைமுக்கி ஐயப்ப நயினார் சாஸ்தா திருக்கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் பொது ஏலம் வரும் மார்ச் மாதம் 5-ம் தேதி காலை 11:30 மணிக்கு ஏலமிடப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 2000 ரூபாய் வைப்பு தொகை செலுத்தி வரை ஓலையாக செலுத்தலாம் என குலசை செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!