India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் வைத்து வரும் 22ஆம் தேதி நியாயமான தொகுதி மறு வரையறை சம்பந்தமான அனைத்து மாநில முதலமைச்சர்களும் பங்கேற்கும் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று(மார்ச் 21) சென்னை வந்தார். சென்னையில் அவரை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வரவேற்றார்.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் சில தினங்களுக்கு முன்பு பயங்கர தீ விபத்து ஏற்பட்டு பல கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அனல் மின் நிலையங்களில் ஏற்படும் தீ விபத்தை தடுக்கும் வகையில் தீ விபத்து பற்றி ஆய்வு மேற்கொள்ளவும், தடுப்பு நடவடிக்கைகள் பற்றி அறிக்கை சமர்ப்பிக்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை பொறியாளர் தலைமையில், குழு ஒன்று அமைத்து உத்தரவிட்டுள்ளது.
தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று(மார்ச் 21) கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், குமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் மட்டும் நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வரும் 25ஆம் தேதி சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல். SHARE IT.
கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று(மார்ச் 20) நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் – தூத்துக்குடி மாவட்டத்தில் தென்னை விவசாயிகளின் நலன் கருதி தென்னை மரங்களிலிருந்து பதநீர் இறக்க விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். share it.
ஒவ்வொரு நாளும் இணைய வங்கி சேவையை(ONLINE BANKING) பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தூத்துக்குடி மாவட்ட காவல்துறை இதற்கான விழிப்புணர்வை வெளியிட்டுள்ளது. இணைய வங்கி சேவையை பயன்படுத்திய பிறகு ‘logout’ செய்த பின்னரே வெளியேறவும். மேலும் சைபர் குற்றப் புகார்களுக்கு 1930 (or) cybercrime.gov.in ஆகிவயற்றில் தொடர்புகொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்த பிரபல ரவுடியை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர். சுந்தரவேல்புரத்தை சேர்ந்தவர் ஹைகோர்ட் மகாராஜா. இவர் கடந்த ஆண்டு நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது போலீசார் மீது மிளகாய் பொடி தூவி தப்பினார். இந்நிலையில், கிண்டியில் பதுங்கியிருந்த மகாராஜாவை போலீசார் இன்று(மார்ச் 21) சுத்துப்போட்ட நிலையில், அவர் தப்பி ஓடவே துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
“தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு 604 சைபர் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதில் ரூபாய் 12 லட்சம் முடக்கப்பட்டும், ரூபாய் 48 லட்சம் நீதிமன்ற உத்தரவின்படி மீட்கப்பட்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று தெரிவித்துள்ளார்.
இன்று தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை பொது விவாதத்தின் போது சாத்தான்குளம் தாலுகா, எழுவரைமுக்கி ஊராட்சி பகுதியில் சிப்காட் அமைக்கப்படுமா என்கிற கேள்விக்கு, பதில் அளித்த அமைச்சர் டிஆர்பி ராஜா, “தூத்துக்குடியில் 10 சிப்காட் அமைக்கும் திட்டம் அரசுக்கு உள்ளதாகவும், அதில் 7 அறிவிக்கப்பட்டு தற்போது 4 முடிந்துள்ளதாகவும், 3 சிப்காட் பணிகள் நடைபெற்று வருகிறது” என தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு -நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலைக்குள் உள்ள தளவாடப் பொருட்களை உடனடியாக அகற்றிட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது பொருட்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து அகற்றப்படும் பொருட்கள் குஜராத்தில் உள்ள டாமன் – டையூ பகுதிக்குக் கொண்டு செல்லப்படும் என தூத்துக்குடி ஆட்சியர் இளம்பகவத் இன்று (20.03.2025) தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.