Tiruppur

News December 30, 2024

திருப்பூர் எஸ்பி அதிரடி மாற்றம்

image

தமிழக போலீஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும், திருப்பூர் மாநகர தெற்கு துணை போலீஸ் கமிஷனர் யாதவ் கிரீஸ் அசோக் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

News December 30, 2024

திருப்பூர் அருகே விபத்து: ஒருவர் பலி

image

திருப்பூர், தாராபுரம் அருகே பழனி முருகன் கோயிலுக்குப் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதிய விபத்தில் ராமன் (54) என்பவர் பலியானார். மேலும், 5 பேர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News December 30, 2024

அவிநாசியில் கொலை: மனைவி + 5 பேர் குண்டாஸில் கைது

image

அவினாசி தாமரை கார்டன் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ், நிதி நிறுவன அதிபர். இவரது மனைவி விஜயலட்சுமி. கடந்த 1-ந் தேதி அதிகாலை நேரம் கோவை – சேலம் ஆறு வழிச்சாலை அருகே நடை பயிற்சி சென்ற ரமேசை மர்ம கும்பல் வெட்டிக்கொன்றது. இந்த வழக்கில் அவருடைய மனைவி உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் இவர்கள் 6 பேர் மீது குண்டர் சட்டத்தில் மீண்டும் கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.

News December 30, 2024

திமுக தகவல் தொழில்நுட்ப கூட்டத்தில் திருப்பூர் எம்.எல்.ஏ.

image

திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் ‘வெல்வோம் 200 படைப்போம் வரலாறு’ என்ற முழக்கத்துடன் கோவையில் நடைபெற்றது. இதில் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வராஜ் திருப்பூர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளுடன் கலந்து கொண்டிருந்தார். அவருக்கு அமைச்சர் டிஆர்பி ராஜா கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

News December 30, 2024

வங்கதேச இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்க தீர்மானம்

image

வங்கதேசத்திலிருந்து இந்தியாவில் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் இறக்குமதி கடந்த 3 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவின் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ள சூழலில் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தில் அனைத்து உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் வங்கதேச இறக்குமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

News December 29, 2024

தாராபுரத்தில் நாளை அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

image

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், திமுக அரசுக்கு எதிராக தாராபுரத்தில் அதிமுக சார்பில் கடந்த 27ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தேதி மாற்றி அறிவிக்கப்பட்டு, நாளை (டிச.30) நடைபெறும் என திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் இன்று தெரிவித்துள்ளார். அதிமுக நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

News December 29, 2024

‘ஜல் ஜீவன்’ திட்டத்தில் 17,171 வீடுகள் பாக்கி

image

திருப்பூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் ‘ஜல் ஜீவன் திட்டத்தில், 675 குக்கிராமங்களுக்கு, 17,171 வீடுகளுக்கு, குடிநீர் இணைப்பு வழங்கப்பட வேண்டியுள்ளது. நிலுவை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்’ என்று, மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் துறைவாரியான அதிகாரிகளுடன், கலந்தாய்வு கண்காணிப்புக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

News December 29, 2024

திருப்பூரில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நிதி வசூல் இயக்கம்

image

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மாநகரம் முழுவதும், காட்சி வளர்ச்சி நிதி வசூல் இயக்கம், இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. வெள்ளியங்காடு, தென்னம்பாளையம் உள்ளிட்ட மாநகரக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், கட்சியின் மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமையில் கட்சியினர், பொதுமக்களை சந்தித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொள்கைகளை விளக்கி, உண்டியல் வசூல் மேற்கொண்டு வருகின்றனர்.

News December 29, 2024

திருப்பூரில் பைனான்ஸ் உரிமையாளர் மீது வழக்கு 

image

திருப்பூர் டும்பைலட் மைதானம் பகுதியில், பிரகாஷ் என்பவர்,  பைனான்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் சண்முகசுந்தரம் என்பவர், பத்திரத்தை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளார். இந்நிலையில் கடனை அசலும் வட்டியுடன் திருப்பி செலுத்திய நிலையில், பத்திரத்தை திருப்பி தராமல் அதனை கிரயம் செய்துள்ளார். இது குறித்து புகாரின் பேரில் பிரகாஷ் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

News December 29, 2024

திருப்பூரில் ராட்சத பலூன் பறக்கவிட்டு விழிப்புணர்வு

image

கன்னியாகுமரியில் 133 அடி உயரமுள்ள திருவள்ளூர் சிலை அமைக்கப்பட்டு, 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில், 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை, நாளை (30ஆம் தேதி) முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை தமிழக அரசு கொண்டாட உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வெள்ளி விழா குறித்த வாசகங்களுடன், திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில், ராட்சத பலூன் பறக்க விடப்பட்டுள்ளது.

error: Content is protected !!