India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி வரலாற்று கூடத்தில் உள்ள, வள்ளுவர் மரச்சிலையுடன், காங்கேயம் எம்எல்ஏ-வும், செய்தித்துறை அமைச்சருமான மு.பெ சாமிநாதன் புகைபடம் எடுத்து கொண்டார். மேலும் இச்சிலை கடல் நடுவில் அமைக்கப்பட்ட 133 அடி உயர திருவள்ளுவர் கிரானைட் சிலையின் தலைமை வடிவமைப்பாளர் டாக்டர் வி. கணபதி ஸ்தபதியால், 2006-ஆம் ஆண்டு, வரலாற்று கூடத்தில் நிறுவப்பட்டது என, நினைவு கூர்ந்தார்.
திருப்பூரில் புதுமை பெண் விரிவாக்க திட்டத்தின் தொடக்க விழா குமரன் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதன் மூலமாக திருப்பூர் மாவட்டத்தில் 52 கல்லூரிகளில் பயிலும் 1,687 மாணவிகள் பயனடைய உள்ளனர். இந்தத் திட்டத்தின் முதல்கட்டமாக 3,403 மாணவிகள், இரண்டாவது கட்டமாக 3,762 மாணவிகள், மூன்றாவது கட்டமாக 3,486 மாணவிகள் என 68 கல்லூரிகளில் பயிலும் 10,651 மாணவிகள் ஏற்கெனவே பயனடைந்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, தாராபுரம் ஆகிய இடங்களில் பல நூறு ஏக்கர் பரப்பளவிலும், பொங்கலூர், பல்லடம், அவிநாசி உள்ளிட்ட இடங்களில் பரவலாகவும் தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய நிலவரப்படி, கிலோவுக்கு 58 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இது, விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு தேங்காய் விலை உச்சத்தை அடைந்துள்ளது.
திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது வழங்கப்படவுள்ளது. இந்த விருதுக்கான விண்ணப்ப விவரங்கள் தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தலா 2 நகல்களாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பிப்ரவரி 10-க்குள் சமர்பிக்க வேண்டும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு கண்டனம் தெரிவித்து கவன ஈர்ப்பு போராட்டமாக மெழுகுவர்த்தியை திமுகவைச் சேர்ந்த கனிமொழி எம்பிக்கு அனுப்ப திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜனதா மகளிரணியினர் முடிவு செய்தனர். அதன்படி நேற்று திருப்பூர் தலைமை தபால் நிலையத்தில் தபால் அனுப்ப சென்ற மகளிர் அணி நிர்வாகிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தபால் நிலையம் முன்பும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்திற்கு, கண்டனம் தெரிவித்து, பாஜக சார்பில், போராட்டங்கள் நடத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, திமுக எம்பி கனிமொழிக்கு, மெழுகுவர்த்தி அனுப்பும் போராட்டத்தில், திருப்பூர் வடக்கு மாவட்ட, பாஜக மகளிர் அணியினர் ஈடுபட்டனர். திருப்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள, தபால் நிலையத்திலிருந்து, கனிமொழிக்கு மெழுகுவர்த்திகளை தபாலில் அனுப்பினர்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, கொங்கு மெயின் ரோடு, இ எஸ் ஐ மருத்துவமனை அருகே உள்ள, டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பகுதி பொதுமக்கள் பலமுறை போராட்டங்களில் ஈடுபட்டனர். இருப்பினும் டாஸ்மாக் கடை அகற்றப்படாத சூழ்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம் தலைமையில், கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், இன்று நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள், இலவச வீட்டு மனை பட்டா, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கையில் தொடர்பாக, 317 மனுக்கள் அளித்திருப்பதாக, மாவட்ட நிர்வாகம் சார்பில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி கழகத்தின் சார்பில் மூத்தோர் பிரிவு பெண்கள் கபடி போட்டிகள் சேலத்தில் ஜனவரி 17ஆம் தேதி முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதில், கலந்துகொள்ளும் திருப்பூர் மாவட்ட பெண்கள் அணிக்கான வீராங்கனைகள் தேர்வு மாவட்ட கபடி கழக அலுவலக மைதானத்தில் உள்ள செயற்கை ஆடுகளத்தில் ஜனவரி 4ஆம் தேதி நடைபெறவுள்ளது என திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கும் ரேஷன் கடைகளில் தேவை எனில் போலீஸ் பாதுகாப்பு கேட்டு பெற வேண்டும் என கூட்டுறவுத்துறை பதிவாளர் சுப்பையின் அறிவுறுத்தியுள்ளார். கூட்டுறவு இணைப்பதிவாளர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பொங்கல் பரிசுத் தொகப்பு வழங்குவதற்கான டோக்கன் வரும் ஒன்பதாம் தேதி முதல் முறையாக தெரு வாரியாக பிரிக்கப்பட்டு வழங்க வேண்டும் என நேற்று தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.