Tiruppur

News June 22, 2024

திருப்பூர்: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு 

image

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற 28ஆம் தேதி காலை 10:30 மணி அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொள்ள உள்ளதால், விவசாயிகள் மனுக்கள் கொடுத்து தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News June 22, 2024

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த எம்பி

image

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் – மூலனூர் ரோட்டில் உள்ள பொன்னுச்சாமி கவுண்டர் திருமண மண்டபத்தில் இந்தியா கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே. இ.பிரகாஷ் நிர்வாகிகளை சந்தித்து நேற்று நன்றி தெரிவித்தார். இதில் திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் இல.பத்மநாபன், நகர செயலாளர் சபரி முருகானந்தம், ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

News June 21, 2024

2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 3 பேர் படுகாயம்

image

திருப்பூர் மாவட்டம், முத்தூர் அருகே செங்கோடம்பாளையம் பிரிவு பகுதி உள்ளது. இதில் இன்று மாலை 5 மணியளவில் மாருதி ஜென் காரும், ஹூண்டாய் காரும் எதிர்பாரதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 கார்களில் வந்த 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News June 21, 2024

விதி மீறிய அரசு பேருந்துகளுக்கு அபராதம்

image

காங்கேயத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார்கள் போனது. இதையடுத்து நேற்று காங்கேயம் மோட்டார் வாகன ஆய்வாளர் தலைமையில் நடத்தப்பட்ட சோதனைகள் விதிமீறிய அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு ரூ.12000 வரை அபராதம் விதிக்கப்பட்டது.

News June 21, 2024

நீதிமன்றத்தில் யோகா தினம் : யோகா செய்து அசத்திய நீதிபதிகள்

image

காங்கேயம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் காங்கேயம் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பாக சர்வதேச யோகா தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது

வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான, சந்தானகிருஷ்ணசாமி துவக்கி வைத்தார். இதில் மாவட்ட உரிமையியல் நீதிபதி மாலதி, குற்றவியல் நீதித்துறை நடுவர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் யோகா செய்து அசத்தினர்.

News June 21, 2024

திருப்பூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு 

image

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 79 பணியிடங்கள் மாவட்ட நல சங்கத்தின் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வருகிற ஜூலை மாதம் 3-ந் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் நேற்று தெரிவித்துள்ளார்.

News June 20, 2024

தாராபுரம் பகுதிக்கு எம்.பி. வருகை

image

திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தாராபுரம் மற்றும் காங்கேயம் சட்டமன்ற தொகுதிகளில் ஈரோடு நாடாளுமன்ற திமுக உறுப்பினர் கே.இ. பிரகாஷ் நாளை இப்பகுதிகளில் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிகள் கலந்து கொள்கிறார். பொதுமக்களை சந்திக்கும் போது திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் இன்று தெரிவித்துள்ளார்.

News June 20, 2024

திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

image

நெல்லையில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டது. இச்சம்பவத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டனர். சாதி மறுப்பு திருமணம் செய்து வைப்பதாக கூறி சாதிய கலவரத்தை தூண்டும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News June 20, 2024

போலி வருமான வரித்துறை அதிகாரிகள் கைது 

image

ஊதியூர், சாய்ராம் நகரை சேர்ந்தவர் ஜனார்த்தன். இவர் திருப்பூரில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். கடந்த 15 ஆம் தேதி இவரது வீட்டிற்குள் வருமான வரித்துறை அதிகாரிகள் எனக் கூறி  8 பேர் சோதனையிட்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இது குறித்து போலீசார் விசரணை நடத்தியதில் உதயம் பத்திரிக்கை நிருபர் நவீன்பிரசாத்(38), மாதேஷ்வரன்(36), மகேந்திரன்(31), சுபாஸ் சந்திரபோஸ்(32) ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

News June 20, 2024

உடுமலையில் இன்று ஜமாபந்தி

image

உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தலின் படி நடப்பு ஆண்டுக்கான ஜமாபந்தி நிகழ்வு வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமையில் இன்று(ஜூன்.20) காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. முதல் நாளில் உடுமலை வட்டத்தில் உள்ள கிராம மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கி பயன்பெறுமாறு வட்டாட்சியர் சுந்தரம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!