India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மாநகரில் இன்று (14.12.2024) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள், மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.

திருப்பூர் அருகே பயன்பாட்டில் இல்லாத பாறைக்குளியில், குப்பைகள் கொட்டுவது குறித்து, ஆட்சியர் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க, பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் பொங்குபாளையம் ஊராட்சியில் உள்ள, பயன்பாட்டில் இல்லாத பாறைக்குழிகளில், குப்பைகளை கொட்டுவதை தடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், கோமாரி நோய் தடுப்பூசி, டிசம்பர் 16 -ஆம் தேதி முதல், ஜனவரி 20-ஆம் தேதி வரை செலுத்தப்படும் என அறிவித்தார். இந்த வாய்ப்பை அனைத்து கால்நடை வளர்ப்போரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவரை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக, வாரத்தின் சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் வழக்கத்தைவிட கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நடப்பு வாரம் இன்றும், நாளையும், 60 சிறப்பு பஸ்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் இருந்து 30 பஸ்களும், புதிய பஸ் ஸ்டாண்ட், மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து தலா 15 மற்றும் 10 பஸ்களும் என 60 சிறப்பு பஸ்கள் இயங்கும்.

திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு பகுதியில் 20மி.மீ ,தெற்கு பகுதியில் 21 மி.மீ, தாராபுரத்தில் 32 மி.மீ, உப்பாறு அணை பகுதியில் 52 மி.மீ, காங்கேயம் அடுத்த வட்டமலை கரை ஓடை பகுதியில் 36.20 மி.மீ, வெள்ளகோவிலில் 20 மி.மீ, திருமூர்த்தி அணை பகுதியில் 30 மி.மீ என மாவட்டம் முழுவதும் 491.90 மி.மீ என மாவட்ட முழுவதும் சராசரியாக 24.60 மி.மீ மழை பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளான உடுமலை, மடத்துக்குளம், காங்கேயம், தாராபுரம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்களைத் தடுத்திடும் வகையில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் தோட்டக்களுடன் கூடிய துப்பாக்கியுடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். ஊரகப்பகுதியில் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்ற நிலையில், மாவட்ட எஸ்.பி உத்தரவை அடுத்து துப்பாக்கியுடன் ரோந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

1.திருப்பூர் மாவட்டத்தில் கார்த்திகை தீபத்திருநாள் அனைத்து கோயில்களில் நடைபெற்றது.
2.அமராவதி ஆற்றில் வெள்ளம் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு
3.மழையால் இடிந்த வீட்டின் ஓடுகள்!
4.காட்டாற்று வெள்ளத்தால் பூஜைகள் நிறுத்தம்
5.மலைவாழ் மக்களின் கடைகள் அடித்துச் சென்ற வெள்ளம்

திருப்பூர் மாநகரில் இன்று (13.12.2024) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே நேற்று அதிகாலை 4 மணி முதல் இன்றுவரை தொடர்ந்து மழை பெய்து வருவதால், அமராவதி ஆற்றில் அதிகப்படியான வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொழுமம் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இதனை எடுத்து இன்று காலை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், வெள்ள பாதிப்பு உள்ள பகுதிகளில் நேரில் ஆய்வு செய்தார்.

திருப்பூர், தாராபுரம் அமராவதி ஆற்றங்கரை ஓரத்தில் இன்று காலை அதிகாலையில் இருந்து காட்டாற்று வெள்ளத்தால் ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள அமராவதி ஆற்றங்கரை ஓரத்தில் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு சென்றது. இதனை அறிந்த அமைச்சர் கயல்விழி செல்வராஜ், நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றார். மேலும் அப்பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட வீடு சென்று ஆய்வு நடத்தி வருகின்றார்.
Sorry, no posts matched your criteria.