India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லையிலிருந்து சென்னை செல்லும் வந்தே பாரத் ரயிலில் பயணிப்பவர்களுக்கு உணவும் தயாரித்து வழங்கப்படுகிறது. இந்த உணவு தயாரிக்கும் அறை நெல்லை ரயில் நிலையம் அருகே உள்ள பாலபாக்கிய நகர் பகுதியில் உள்ளது. அங்கு சமையலறை பகுதியில் இன்று காலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அப்போது கொதிக்கும் எண்ணெய் சட்டி கொட்டியதில் 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

நெல்லை மக்களே, தமிழக நீதிமன்றங்களில் ASSISTANT PROGRAMMER பணியிடங்களுக்கு 41 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் துறையில் டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். வரும் செப்.9க்குள் உயர்நீதிமன்ற இணையதள பக்கத்தில் <

நெல்லை டவுன், நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா
நாளை காலை 6 மணிக்கு சுவாமி சன்னதியில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இது கருவூர் சித்தர் சாபம் கொடுத்தது, பின்னர் அவருக்கு காட்சி கொடுத்து சுவாமி சாபவிமோசனம் பெற்ற வரலாற்று தொடர்புடைய திருவிழா ஆகும். அந்த நிகழ்ச்சி பத்தாம் திருநாளான செப்.1ம் தேதி அன்று மானூரில் அதிகாலை நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் செய்து வருகிறார்.

திசையன்விளை அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு மாணவன் புத்தகப்பையில் கத்தி மறைத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மற்றொரு மாணவனின் மிரட்டலால் பயந்து முன்னெச்சரிக்கையாக கத்தி வைத்திருந்ததாக விசாரணையில் தெரியவந்தது. ஆசிரியர் மூலம் தகவல் அறிந்த தலைமை ஆசிரியர் போலீசுக்கு தெரிவித்தார். போலீசார் மாணவனிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்து எச்சரித்து விடுவித்தனர்.

தூத்துக்குடியைச் சேர்ந்த ஐ டி ஊழியர் கவின்(27) என்பவர் கடந்த 27ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சுர்ஜித் மற்றும் அவர்கள் தந்தை எஸ்ஐ சரவணன் கைது செய்யப்பட்டுள்ளனர். சிபிசிஐடி போலீஸ் விசாரித்து வரும் நிலையில் கொலை செய்த நாள் அன்று சுர்ஜித் செல்போனுக்கு வந்த அழைப்பு எண்களை சிபிசிஐடி போலீசார் கண்காணித்தனர். அதன்படி அவரது 2 உறவினர் மற்றும் நண்பரை விசாரிக்க சம்மன் அனுப்பினர்.

நெல்லை இளைஞர்களே; பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள 750 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டிகிரி முடித்த 20 – 30 வயதிற்க்குட்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணபிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 04.09.2025. மேலும் விவரங்களுக்கு <

பாப்பாக்குடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்களை கண்காணிக்கும் வகையில் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமிராக்கள் காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 18ம் தேதி இரவு போலீசார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது காசி தர்மம் பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்கள் சேதமடைந்தும், ஒரு கேமிரா காணாமல் போயிருந்தது, விசாரணை நடத்தி அதே பகுதியில் உள்ள 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் மற்றும் திருச்சிராப்பள்ளி – தாம்பரம் இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் சேவைகள் அடுத்த மூன்று மாதங்களுக்கு, அதாவது நவம்பர் 2025 வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு இந்த சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில்: பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும் வீரதீர செயல் புரிந்து சிறப்பாக பங்காற்றும் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24 மாநில அரசின் விருது ஒரு லட்சம் மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கப்படும் இதற்கு awards:tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.

நெல்லை மக்களே நீங்கள் வாடகை வீடுகளில் குடியீருக்கீங்களா..? 3 மாதத்துக்கு முன்னாடியே வீட்டு ஓனர் வீட்டு வாடகையை உயர்த்துவது (அ) முன்னறிவிப்பின்றி உங்களை தீடீரென்று வீட்டை காலி செய்ய சொன்னால் என்ன செய்வது என்று யோசீக்கிறீர்களா..? இனி இதை பண்ணுங்க… உங்களுக்காகவே (TNRRLA, 2017) என்ற சட்டத்தின் கீழ் நெல்லை வாடகை தீர்வாளர் அதிகாரியிடம் 9445000476, 9445000478, 9445000477 புகாரளியுங்க.SHARE பண்ணுங்க..
Sorry, no posts matched your criteria.