India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2025 புத்தாண்டு கொண்டாட்டம் நாளை மாலை முதல் தொடங்குகிறது. இதை முன்னிட்டு சில உணவகங்களில் அனுமதி பெற்று இரவு நேர சிறப்பு உணவு விருது நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நெல்லை மாநகர் பகுதியில் 1000 போலீசாரும் மாவட்ட பகுதியில் 1000 போலீசார் என மொத்தம் 2000 போலீசாரை புத்தாண்டு பாதுகாப்பிற்கு ஈடுபடுத்தப்பட உள்ளனர். நாளை இரவு முதல் விடிய விடிய போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட உள்ளனர்.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் புதுமைப்பெண் விரிவாக்க திட்டத்தை இன்று (டிச.30) தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் துவங்கி வைத்தார். அதனை தொடர்ந்து பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் நேரு, மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு மாணவிகளுக்கு வங்கி பரிவர்த்தனை அட்டைகளை வழங்கினர்.
நெல்லை மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையின் காரணமாக ஊத்து பகுதியில் 34 மில்லி மீட்டர் ,நாலு மூக்கு பகுதியில் 30 ,மில்லி மீட்டர் காக்காச்சியில் 21 மில்லி மீட்டர்,களக்காட்டில் ஒரு மில்லி மீட்டர் மழை ஆக மொத்தமாக மாவட்டத்தில் 112.80 மில்லி மீட்டர் மழை பதிவாக இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி மாநகர காவல்துறையில் தலைமை இடத்து போலீஸ் துணை கமிஷனர் ஆக பணியாற்றும் அனிதா இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். இவர் மதுரை மாநகர காவல் துறை மதுரை வடக்கு துணை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதுபோல் தமிழகத்தில் பல்வேறு ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நேற்று பல்வேறு ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டனர். ஒரு சிலருக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டது. அந்த வகையில், நெல்லை மாநகர காவல்துறை ஆணையராக இருந்த ரூபேஷ் குமார் மீனா இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக, திருவல்லிக்கேணி துணை ஆணையர் சந்தோஷ் ஹடி மணி பதவி உயர்வு பெற்று நெல்லை புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பு அலுவலராக சந்தீப் நந்தூரி உள்ளார். அவர் ஏற்கனவே திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று (டிச.29) ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சந்தீப் நந்தூரி தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தின் நிர்வாக இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் TNPSC G-4 இலவச வகுப்பு வரும் 2-1-2025 (வியாழக்கிழமை) காலை 10:30 மணிக்கு தொடங்கப்பட உள்ளது. வகுப்பில் இணைய விரும்பும் மாணவர்கள் Google Link ஐ பயன்படுத்தி தங்கள் வருகையை கட்டாயம் பதிவு செய்யுமாறு வேலை வாய்ப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.Google Linkhttps://docs.google.com/forms/d/e/1FAIpQLSdfiBOiLkSVc-by8rInBIOrBCgptaNZwc8FUkq3dDBm7w3f_g/viewform.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகை முன்னிட்டு திருநெல்வேலி மாநகரத்தில் நாளை (டிச.30) காலை 6 மணி முதல் நாளை மறுநாள் (டிச.31) மாலை 6 மணி ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி ட்ரோன்கள் பறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாநகர காவல்துறையினர் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் ஜனவரி மாதம் 9 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு சுழற்சி முறையில் வினியோகம் மேற்கொள்ள ரேஷன் கார்டுகள் பிரிக்கப்பட்டு கணக்கிடப்பட்டு தெருவாரியாக பராமரிக்கப்பட வேண்டும். ரேஷன்கார்டுதாரர் பரிசு தொகுப்பு பெற வேண்டிய நாள் மற்றும் நேரம் குறிப்பிட்டு டோக்கன்களை விற்பனையாளர்கள் அட்டைதாரர்களின் இல்லங்களுக்கு சென்று வழங்கப்பட வேண்டும் என கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
களக்காட்டில் உள்ள வட்டார தாழ்த்தப்பட்டோர் சீர்திருத்த சங்கத்தில் பெண்களுக்கான சுயதொழில் குறித்த கைவினைப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி 20 நாட்கள் நடைபெற்றது. மதுரை மண்டல கதர் கிராம தொழில்கள் ஆணையம் சார்பில் நடைபெற்ற இம்முகாமில் மரக்கழிவுகளில் இருந்து கைவினைப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி பெற்ற 20 பெண்களுக்கு நேற்று சான்றிதழ் வழங்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.