Tirunelveli

News January 4, 2025

நெல்லை சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடக்கம் 

image

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகின்ற 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையொட்டி நெல்லை – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சேரன்மகாதேவி, அம்பை,தென்காசி, ராஜபாளையம், சிவகாசி உள்ளிட்டவைகள் வழியாக இந்த ரயில் இயக்கப்படுகின்றன. இதற்கான முன்பதிவு வருகின்ற ஜனவரி 5ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. *ஷேர்*

News January 4, 2025

பொங்கல் பரிசு டோக்கன் புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு எண் 

image

நெல்லை மாவட்டத்தில் நேற்று முதல் பொங்கல் பரிசுக்கான டோக்கன் வழங்கும்பணி நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட அளவிலும் வட்ட அளவிலும் கண்காணிக்க கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குறைகள் இருந்தால் பொதுமக்கள் கட்டுப்பாட்டு அறை எண் 9342471314 மற்றும் 1967 மற்றும் 1800 425 5901 என்ற எண்களுக்கு புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். *ஷேர்*

News January 3, 2025

தாமிரபரணி ஆற்றின் வழக்கில் நீதிபதிகள் கேள்வி

image

தாமிரபரணியில் கழிவு நீர் கலப்பதை தடுக்ககோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முத்தாலங்குறிச்சி காமராசு வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கில் இன்று சொரிமுத்து அய்யனார் கோவிலில் திருவிழா நாட்களில் பக்தர்கள் கோவில் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றை பயன்படுத்துவதால் கழிவு ஏற்படுகின்றது என தெரிவிக்கப்பட்டபோது, பக்தர்கள் கோவிலில் தங்காமல் தரிசனம் செய்துவிட்டு வீட்டிற்குச் செல்லலாமே என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

News January 3, 2025

அவதூறாக பேசிய நடத்துனருக்கு ரூ.15,000 அபராதம்

image

நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்தவர் வழக்கறிஞர் ஜிப்ரில் என்பவர் கடந்த 2023 ஆம் ஆண்டு சென்னையில் இருந்து திருநெல்வேலி வருவதற்காக அரசு விரைவு பேருந்தில் முன் பதிவு செய்து பயணம் செய்துள்ளார். அப்போது அவதூறாக பேசிய நடத்துனர் மீது வழக்கு தொடர்ந்த நிலையில் இன்று நடந்த விசாரணையில் நடத்துனருக்கு 15,000 அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

News January 3, 2025

நெல்லை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு மையங்கள் பட்டியல்

image

நெல்லை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வுக்கான அனைத்து முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதில் பிளஸ் 2 மையங்களை தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள யூசர் ஐடி பாஸ்வேர்டை பயன்படுத்தி தேர்வு மையங்களின் பெயர் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் இன்று (ஜன3) தெரிவித்துள்ளார்.

News January 3, 2025

2023ஆம் ஆண்டை விட 24இல் குறைவு – எஸ்பி 

image

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது. 2023ஆம் ஆண்டை விட 2024ஆம் ஆண்டில் கொலைகள், மோதல்கள் மிகவும் குறைந்துள்ளது என திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தகவல் அளித்துள்ளார். மேலும் சாலை விபத்துகளும் குறைந்துள்ளதாகும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் கிராமங்கள்,பள்ளி கல்லூரிகளில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

News January 3, 2025

நெல்லையில் போக்சோ வழக்கில் 100 பேர் கைது

image

நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான குற்றங்கள் தடுப்பு நடவடிக்கை கடுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

News January 3, 2025

இன்று முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன்

image

நெல்லையில் சுமார் 488874 அரசி அட்டை தாரர்களுக்கு இன்று முதல் பொங்கள் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தைப் பொங்கலுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சிறப்பு தொகுப்பு இந்தாண்டும் வழங்கப்படவுள்ளது. இதில் அரசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இடம்பெறும். இதனை முறையாக விநியோகம் செய்ய ரேஷன் அதிகாரிகள் இன்று முதல் வீடு வீடாக வந்து டோக்கன் விநியோகம் செய்யவுள்ளனர்

News January 2, 2025

2024இல் கொலை வழக்குகள் 21% குறைந்துள்ளது

image

2024ம் ஆண்டு நெல்லை மாவட்ட காவல்துறையின் செயல்பாடு குறித்த அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், 2024இல் பதிவான கொலை வழக்குகள் கடந்த 2023-ம் ஆண்டில் பதிவானகொலை வரக்குகளைவிட 21 % குறைவாக பதிவாகியுள்ளன.  கொலை வழக்குகளில் சம்பந்தபட்ட 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 69 எதிரிகள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.

News January 2, 2025

போக்குவரத்து விதிகளை மீறியதாக 405 வழக்குகள்

image

நெல்லை மாவட்டத்தில் புத்தாண்டு தினத்தன்று பொது இடங்களில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டுயவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அதில்  ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறியதாக 405 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது .

error: Content is protected !!