Tirunelveli

News March 18, 2026

நெல்லை அருகே தாய்-மகன் கைது

image

மானூர் அருகே ராமையன்பட்டி கண்டியப்பேரி கலாம்நகரைச் சேர்ந்தவர் ரமேஷ்(30). கடந்த 14-ம் தேதி மேய்ச்சலுக்கு சென்ற இவரது ஆடு திருடு போனது. இது குறித்த புகாரின் பேரில் மானூர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அதே ஊரைச் சேர்ந்த சாந்தி(53), அவருடைய மகன் சுவாமிநாதன்(31) ஆகியோர் ஆடு திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

News March 18, 2026

திருநெல்வேலி: குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

image

திருநெல்வேலி மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் முறப்பநாடு பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்ற 23 வயது இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் உத்தரவின் அடிப்படையில் சிறையில் அடைப்பு.

News March 18, 2026

திருநெல்வேலி: குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

image

திருநெல்வேலி மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் முறப்பநாடு பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்ற 23 வயது இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் உத்தரவின் அடிப்படையில் சிறையில் அடைப்பு.

News March 18, 2026

திருநெல்வேலி: குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

image

திருநெல்வேலி மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் முறப்பநாடு பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்ற 23 வயது இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் உத்தரவின் அடிப்படையில் சிறையில் அடைப்பு.

News March 18, 2026

இரவு ரோந்து காவல் ஆய்வாளர்கள் பெயர்கள் அறிவிப்பு

image

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் கீழ் உள்ள உட்கோட்டங்களில், இன்று( மார்ச்.17) இரவு, ரோந்து பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் பெயர்கள் தரப்பட்டு உள்ளன. அதன்படி திருநெல்வேலி ஊரக உட்கோட்டத்தில் சசிகுமார், நாங்குநேரி உட்கோட்டத்தில் நேவிஸ் அந்தோணி ரோஸி, வள்ளியூர் உட்கோட்டத்தில் மாரிமுத்து, சேரன்மகாதேவி உட்கோட்டத்தில் கவிதா, அம்பாசமுத்திரம் உட்கோட்டத்தில் லட்சுமி பிரபா ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபடுவர்.

News March 17, 2026

திருநெல்வேலி: 8690 கொலைகள் – பகீர் தகவலை கூறிய தமிழிசை

image

நெல்லை, வண்ணாரப்பேட்டையில் பாஜக மூத்த நிர்வாகி தமிழிசை சௌந்தரராஜன் இன்று அளித்த பேட்டியில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை ஆனால் அந்த கவலையில்லாமல் முதல்வர் ரீல்ஸ் விளையாடுகிறார். பெண்களுக்கு பாதுகாப்பு தராத ஸ்டாலின் அரசு வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். ஸ்டாலின் முதல்வராக வந்த பிறகு 8690 கொலைகள் தமிழகத்தில் நடந்துள்ளது; 59% போக்சோ வழக்குகள் அதிகரித்துள்ளது என்றார்.

News March 17, 2026

திருநெல்வேலி: தவறான எண்ணுக்கு பணம் அனுப்பினால்?

image

டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் தான் தற்போது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணம் அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!

News March 17, 2026

திருநெல்வேலி: தவறான எண்ணுக்கு பணம் அனுப்பினால்?

image

டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் தான் தற்போது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணம் அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!

News March 17, 2026

நெல்லை: VOTERID-க்கு வந்த UPDATE!

image

நெல்லை மக்களே, உங்க VOTERID பழசாவும், உங்க போன்ல இருக்கிறது ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTERID புத்தம் புதசா மாத்த வழி இருக்கு .

1.இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்க மொபைல் எண் பதிவு பண்ணுங்க.

2. 1-ஐ தேர்ந்தெடுங்க..

3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க

உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க..

News March 17, 2026

BREAKING நெல்லை: 4 பேர் உடல் கருகி பலி – அதிர்ச்சி தகவல்

image

திசையன்விளை பெட்டைக்குளத்தில் இன்று காலை 4 பேர் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் சென்னை நந்தம்பாக்கம் பெரியார் நகரை சேர்ந்த முகமது ரபி, அவரது மனைவி செய்யது நஸ்ரின் பாத்திமா மற்றும் அவர்களது 2 குழந்தைகள் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் கடன் தொல்லையால் தற்கொலையா? அல்லது விபத்தா: என விசாரணை நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!