India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாளை விநாயகர் சதுர்த்தியை கொண்டாட நெல்லை மக்களே உங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வெளியூரில் இருந்து புறபட்டு இருப்பீர்கள்! சொந்த ஊர்க்கு புறபட்ட உங்களுக்கு ஆம்னி பேருந்தின் கட்டண உயர்வு அதர்ச்சியை கொடுக்கிறதா? ஆம்னி பேருந்தின் கட்டணம் அதிகம் வசூலித்தால் 9043379664 எண்ணில் ஆதாரத்துடன் புகாரளியுங்க… (குறிப்பு: நீங்கள் சொந்த ஊரில் இருந்து வெளியூர் திரும்பும் போது இந்த எண் பயன்படும்) SHARE பண்ணுங்க!

நெல்லை மக்களே! நாளை விநாயகர்சதுர்த்தி அன்று செய்ய வேண்டியவை
1. வீட்டை சுத்தம் செய்யுங்க.
2. விநாயகர் சிலையை நிறுவுங்க.
3. பூ,மாவிலையால் அலங்காரம்.
4. ஓம் ஸ்ரீ கணேஷாய நமஹ – மந்திரத்தை 108 முறை சொல்லுங்க.
5. கொழுக்கட்டை, சுண்டல் முதலிய நைவேதியம்.
6. தீபம், கற்பூரம் காட்டி ஆரத்தி
குடும்பத்துடன் சென்று மணி மூர்த்தீஸ்வரர் உச்சிஷ்ட விநாயகர் மற்றும் பாக்கிய விநாயகர் கோவில் சென்று தரிசனம் செய்யுங்க. ஷேர்

தூத்துக்குடி பாலசுப்ரமணியன் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். நெல்லையப்பர் கோவிலின் மர மண்டபத்தில் உள்ள கடைகள் கோவிலின் பழமையான கட்டமைப்புக்கு அச்சுறுத்தல் எனவும், மதுரை மீனாட்சியம்மன் கோவில் தீ விபத்து உதாரணமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். கடைகளை அகற்றவும், கோவிலை நினைவுச்சின்னமாக அறிவிக்கவும் கோரினார். நீதிபதிகள் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.

விநாயகர் சதுர்த்தி விழா விடுமுறை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க மைசூரில் இருந்து இன்று இரவு 8.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06241) நாளை காலை 10 .50 மணிக்கு நெல்லை வரும் மறு மார்க்கத்தில் நெல்லையிலிருந்து நாளை 27ஆம் தேதி பிற்பகல் 3 .40 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமை காலை 5 50 மணிக்கு மைசூரை சென்றடையும். இந்த ரயிலுக்கு முன்பதிவு நடைபெறுகிறது என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

நெல்லை மக்களே; தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

▶️திருநெல்வேலி- பழைய பேருந்து நிலையம் வேந்தன்குளம், எண்: 0462-2320044
▶️திருநெல்வேலி- புதிய பேருந்து நிலையம், திருநெல்வேலி சந்திப்பு, எண்: 0462-2554468
▶️திருநெல்வேலி – பாளையங்கோட்டை மெயின் ரோடு, என்ஜிஓ காலனி, பாளையங்கோட்டை
எண்: 7845050787
▶️மேலக்கடையன்னலூர் – பண்போலிரோடு, மேலக்கடையநல்லூர், எண்: 9443783113
பேருந்துகளின் வருகை குறித்த கேள்விகளுக்கு பயன்படுத்தி கொள்ளவும் *ஷேர் பண்ணுங்க

▶️இன்று காலை 10.30 மணிக்கு மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
▶️மேலப்பாளையம் மண்டலம் 54 வது வார்டு பகுதியில் புதிய சாலை அமைக்கும் இடையே அப்துல் வஹாப் எம்எல்ஏ தொடங்கி வைக்கிறார்.
▶️காலை 8 15 மணிக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்க விழா பாளையங்கோட்டை செவன் டாலர் பள்ளியில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெறுகிறது.

100 ஆண்டுகளுக்கு முந்தைய நெல்லை சீமை என்பது, தற்போதைய நெல்லை, தென்காசி, நாகர்கோவில் பகுதிகளை உள்ளடக்கியது. இந்த புகைப்படங்கள் 1925 ஆண்டு முதல் எடுக்கப்பட்டவை என கண்டறியப்பட்டவை. இன்று சுற்றுலா தலமாக வலம் வரும் பல இடங்களை அன்று, கூட்ட நெரிசலில் சிக்காமல் தப்பியன. இந்த புகைப்படங்களில் நெல்லை பேருந்து நிலையம், குற்றாலம், நெல்லையப்பர் கோவில் மற்றும் தெரு, திருவள்ளுவர் பாலம் உள்ளன. *ஷேர் பண்ணுங்க

நெல்லை மாவட்ட அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் வரும் 28ஆம் தேதி பிற்பகல் 4 மணியளவில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. எரிவாயு பதிவு செய்தல் உள்ளிட்ட குறைகளை நுகர்வோர் நேரில் தெரிவித்து பயனடையலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (ஆக.25) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.