India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா நேற்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி, வீரவநல்லூர், அரிகேசநல்லூர் ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையில் வாழைகள் சாய்ந்துள்ளன. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களின் நலன் கருதி இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவிலில், ஆற்று வெள்ளத்தை தாக்குப்பிடிக்கும் வகையில் அமைக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் குறித்து நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., முதுகலை தொல்லியல் 2ம் ஆண்டு மாணவிகள் சமீபத்தில் ஆய்வு செய்தனர். அதில், அந்த காலத்திலேயே அதாவது சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆற்று வெள்ளத்தை தாங்கும் அளவிலான தொழில்நுட்பத்துடன் கோவில் கட்டப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
நெல்லையப்பர் கோயிலில் இன்று(ஜனவரி 5) காலை 8:30 மணிக்கு மகா ம்ருத்யுஞ் மந்திர ஜெப வேள்வி நடக்கிறது. #தாழையூர்த்து அமேகா அரங்கில் மூட்டா 2ஆம் நாள் மாநாடு காலை 10 மணி முதல் நடைபெறுகிறது. #மார்கழி 3வது சனிக்கிழமையை முன்னிட்டு நவ கைலாய கோயில்களுக்கு காலை முதல் சிறப்பு பஸ்கள் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.
சென்னை வேளாண் இயக்குநர் பா.முருகேஷ் நேற்று(ஜன.4) திருநெல்வேலி மாவட்ட அரசு விதை பண்ணை கரையிருப்பில் ஆய்வு மேற்கொண்டார். கரையிருப்பு மாநில அரசு விதை பண்ணையில், நெல் ரகங்களில் வல்லுநர் விதையிலிருந்து ஆதார விதைப்பண்ணை அமைத்து மாவட்டம் முழுவதும் விவசாயிகளுக்கு ஆதார விதை வழங்கப்பட்டு வருகிறது. விதைப்பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் நெல் ரகங்களின் மகசூல் உயர்த்துவதற்கு ஆலோசனை வழங்கினார்.
பொங்கல் பண்டிகையொட்டி நெல்லை – தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி ஜன.12,19,26 தேதிகளில் நெல்லையிலிருந்து பகல் 3.30 மணிக்கும், ஜன.13,20,27 தேதிகளில் தாம்பரத்திலிருந்து பகல் 3.30 மணிக்கும் இந்த ரயில் புறப்படுகிறது. நெல்லையிலிருந்து அம்பை, தென்காசி, ராஜபாளையம், விருதுநகர், மதுரை, திருச்சி, விழுப்புரம் தடத்தில் இயக்கப்படுகிறது. இன்று(ஜன.5) காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது.
நெல்லை நெல்லையப்பர் கோவிலில் ஆருத்ரா தரிசன திருவிழா இன்று காலை கொடியேற்றுடன் தொடங்கியது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் மற்றும் திரு நடன காட்சி சிவபெருமான் நடனமாடிய ஐந்து சபைகளில் ஒன்றான தாமிர சபையில் ஜன.13 அன்று நடைபெற உள்ளது.
நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குனர் மரிய சகாய ஆண்டனி செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார் அதில் கூறியிருப்பதாவது: நெல்லை மாவட்டத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வரும் 10ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது, இதில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
நெல்லை நெல்லையப்பர் கோவிலில் ஆருத்ரா தரிசன திருவிழா இன்று காலை கொடியேற்றுடன் தொடங்கியது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் மற்றும் திரு நடன காட்சி சிவபெருமான் நடனமாடிய ஐந்து சபைகளில் ஒன்றான தாமிர சபையில் ஜன.13 அன்று நடைபெற உள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர் என் ரவியை நெல்லை மாவட்டம் ராதாபுரம் எம்எல்ஏ தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நேற்று நேரில் சந்தித்தார்.தொடங்கு ஆங்கில புத்தாண்டின் முதல் பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் ஆளுநர் ரவியை வருமாறு பேரவையின் உரையாற்ற அழைப்பு விடுத்துள்ளார்.
மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வெங்கடேசன் விடுதுள்ள அறிக்கை அரசு மானிய விலையில் வழங்கப்படும் யூரியாவை விவசாயம் அல்லாமல் பிற தேவைகளுக்கு பயன்படுத்தினால் 7 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும். முறையற்ற முகவர்களிடம் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான உரங்களை வாங்க கூடாது தரமற்ற போலியான உரங்களை விற்பனை செய்யக் கூடாது. விதிகள் மீறப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.