Tirunelveli

News January 6, 2025

நெல்லை மாவட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை விபரம்

image

நெல்லை மாவட்ட போலீஸ் எஸ்பி சிலம்பரசன் இன்று (ஜன 6) கூறியதாவது, நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 13 கொலை வழக்குகளில் 23 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கொலை முயற்சி வழக்கில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஆறு குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இரண்டு கொள்ளை வழக்குகளிலும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

News January 6, 2025

நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேட்டி

image

கொலை முயற்சி வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளதாகவும்,கொலை வழக்குகளில் 106 எதிரிகள் கைது செய்யப்பட்டு 69 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், 2024-ல்ஜாதி ரீதியான கொலைகள் எதுவும் நடக்கவில்லை என்றும்,17 கொலைகள் காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் தடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் இன்று (ஜன.06) தெரிவித்தார்.

News January 6, 2025

மாவட்டத்தில் அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதி இதுதான்

image

நெல்லை மாவட்டத்தில் அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதியாக நெல்லை சட்டமன்ற தொகுதி உள்ளது. இங்கு 3 லட்சத்து 2715 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 616 பேர் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 16 பேர் இதர வாக்காளர்கள் 83 பேர் உள்ளனர் என கலெக்டர் கார்த்திகேயன் இன்று தெரிவித்தார்.

News January 6, 2025

நெல்லை மாவட்டத்தில் 1490 வாக்குச்சாவடிகள்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 1490 வாக்குச்சாவடிகள் உள்ளதாக இன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை தொகுதியில் 311 வாக்குச்சாவடிகள், அம்பாசமுத்திரத்தில் 294 வாக்குச்சாவடிகள் உள்ளன. பாளையங்கோட்டை தொகுதியில் 270 வாக்குச்சாவடிகளும், நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் 306 வாக்குச்சாவடிகளும், ராதாபுரத்தில் 309 வாக்குச்சாவடிகளும் இடம் பெற்றுள்ளன.

News January 6, 2025

நெல்லை மாவட்ட பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த உத்தரவு

image

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உத்தரவின்படி அனைத்து பள்ளிகளிலும் பள்ளிகளின் கல்வி செயல்பாடுகள், மாணவர்களின் சிறப்பு அம்சங்கள் எடுத்துரைத்து பள்ளி ஆண்டு விழா நடத்திட வேண்டும் என 14 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத் பள்ளிகளில் இந்த விழா நடத்த அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் தெரிவித்தார்.

News January 6, 2025

பொங்கல் சிறப்பு பஸ்: நெல்லையில் முன்பதிவு ஆர்வம்

image

பொங்கல் பண்டிகைக்காக நெல்லையில் இருந்து பிற பகுதிகளுக்கும் சென்னையில் இருந்து நெல்லை உள்ளிட்ட பகுதிகளுக்கும் 10ம் தேதி முதல் 14,104 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கான முன்பதிவு நெல்லை புதிய பஸ் நிலையத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு போக்குவரத்துக் கழக அலுவலகங்களில் நடைபெறுகிறது. ஏராளமான பயணிகள் இப்போதே போட்டி போட்டு தாங்கள் செல்லும் ஊர்களுக்கு முன்பதிவு செய்து வருகின்றனர்.

News January 6, 2025

நெல்லையில் இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்

image

காலை 10.30 மணிக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. வண்ணாரப்பேட்டை செல்ல பாண்டியன் சிலை முன் காலை 10:30 மணிக்கு தேமுதிக சார்பில் பொங்கல் பரிசுத்தொகுப்பு ஆயிரம் ரூபாய் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் திருவாதிரை மூன்றாம் நாள் நிகழ்ச்சி இரவு 6 மணிக்கு சுவாமி வீதி உலா நடைபெறுகிறது.

News January 6, 2025

நெல்லை: பாதயாத்திரை சென்ற சிறுவன் கார் மோதி பலி!

image

தென்காசி மாவட்டம் கடையம் காமராஜ் நகரை சேர்ந்த சிறுவனான கலைச்செல்வம் அப்பகுதியை சேர்ந்தவர்களோடு திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை புறப்பட்டார். இந்த குழு நேற்று முன்தினம் நெல்லை அபிஷேகபட்டி பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது இவர்கள் மீது ஒரு கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. காயமடைந்த 3 பேரையும் உடன் வந்தவர்கள் மீட்டு பாளை GH-க்கு அனுப்பி வைத்தனர். இதில் கலைச்செல்வன் நேற்று(ஜன.5) இறந்தார்.

News January 5, 2025

நெல்லை அருகே விபத்து; இருவர் மரணம் 

image

கேரள மாநிலம் கொல்லம் சடையமங்கலம் பகுதியில் நேற்று இரவு சபரிமலைக்கு சென்று விட்டு திரும்பிய கார் மீது சொகுசு பேருந்து மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதியை சேர்ந்த சரவணன், சண்முகராஜா என தகவல்.2 குழந்தை உட்பட சிலர் காயங்களுடன் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News January 5, 2025

தாமிரபரணி குறித்து கலெக்டர் உருக்கமான வேண்டுகோள்!

image

பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் நேற்று(ஜனவரி 4) நடைபெற்ற நீர்வள மேலாண்மை திறன் மேம்பாட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் பேசினார். அப்போது, தாமிரபரணி வற்றாத ஜீவநதியாக திகழ்கிறது. ஊர் இழுத்தால்தான் தேர் நிலைக்கு வரும். தனி ஒருவரால் தேர் இழுக்க முடியாது. அதுபோன்றுதான் நாம் அனைவரும் ஒன்றுபட்டு பொறுப்புடன் கடமையாற்றி வந்தால் தாமிரபரணியை பாதுகாக்க முடியும் என்றார்.

error: Content is protected !!