India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று(ஜன.6) வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது, பகுஜன் சமாஜ் மாநில செயலாளர் தேவேந்திரன் நெல்லை மாவட்டத்தில் 5 தொகுதிகள் இருந்தபோதிலும் தனி தொகுதிகள் எதுவும் இல்லை எனவே தனி தொகுதிகளை உருவாக்க வேண்டும் என்றார். பதிலளித்த கலெக்டர் கார்த்திகேயன், தொகுதி மறு சீரமைப்பின்போது இது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என தெரிவித்தார்.
நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களில் 69 சதவீதம் பேரின் ஆதாரங்கள் வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்பட்டுள்ளது. புதிதாக சேரும் வாக்காளர்களின் ஆதாரங்கள் பெறப்பட்டு வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று (ஜன.6) தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கருப்பு துப்பட்டா அணிந்த பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்றிரவு(ஜன.6) வெளியிட்ட அறிக்கையில், ‘தோழமைக்கு அழகு அல்ல, கருப்பில் இருந்து பிறந்த கருப்பு சிவப்புக்கு கருப்பு வெறுப்பாகி போனதா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
நெல்லை அரசு மருத்துவமனையில், கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கடந்த 2024 இறுதி வரை மொத்தம் 59 உறுப்புகளும், 42 திசுக்களுக்கு தானமாக பெறப்பட்டுள்ளது. மேலும், உடல் உறுப்புகளை தானம் பெறுவதில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாநில அளவில் 3வது இடத்தில் இருப்பதாகவும் மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரேவதி பாலன் நேற்று(ஜன.6) பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
#நெல்லையில் இன்று(ஜனவரி 7) காலை 10.30 மணிக்கு திருநெல்வேலி மாநகராட்சி பிரதான அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. #நெல்லை மத்திய மாவட்டம் மற்றும் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் காலை 10 மணிக்கு வண்ணாரப்பேட்டையில் ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தை சேர்ந்த 14வயது மாணவர் தனியார் பள்ளி ஒன்றில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று(ஜன.6) இரவில் மாணவரின் தாய் வெளியே சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த மாணவர் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது தாயார் திரும்பி வந்து பார்த்தபோது மாணவர் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சந்திப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் சலவைக்கு போடப்பட்ட பேண்டில் இருந்த 64 ஆயிரம் ரூபாயை சலவை தொழிலாளி உரிமையாளரிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் மறதியால் இது போன்று பணம் மற்றும் விலை உயர்ந்தப் பொருட்களை துணியில் வைத்து விடுகின்றனர். எனக்கு அந்த பொருட்கள் மீது ஆசை இல்லை. ஏன்னென்றால் அவை உரிமையாளருக்கு சொந்தமானது எனக் கூறிய சலவை தொழிலாளிக்கு பாராட்டு.
நெல்லை மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.7 கோடி வரை முடக்கி வைக்கப்பட்டதாக மாவட்ட எஸ்பி சிலம்பரசன் இன்று தெரிவித்துள்ளார். சமீபகாலமாக மொபைல் செயலிகள் மூலமாகவும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளது. இதுபோன்ற சூழலில் மாவட்ட காவல்துறையின் இந்த நடவடிக்கை மக்களுக்கு ஆறுதலை தந்துள்ளது.
நெல்லை மாவட்ட போலீஸ் எஸ்பி சிலம்பரசன் இன்று ஜன 6)கூறியதாவது, நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் நடக்கவிருந்த 17 கொலைகள் காவல்துறையினர் துரித மற்றும் முன்னெச்சரிக்கைகளால் தடுக்கப்பட்டுள்ளது. 85 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த,ஆண்டில் மட்டும் 10 ஆண்டுக்கு மேல் தலைமறைவாக இருந்த நபர்கள் உட்பட 2249 பிடியாணைகள் மீது நடவடிக்கை மேற்கொண்டு எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் ஆர்என். ரவி தனது உரையை புறக்கணித்து சென்றார். எனவே பல்வேறு அரசியல் தலைவர்கள் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் ஆளுநரையும் கள்ளக்கூட்டணி வைத்திருப்பதாக அதிமுக பாஜக கட்சிகளை கண்டித்தும் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நாளை(ஜன.6) வண்ணாரப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் இன்று அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.