Tirunelveli

News January 8, 2025

களக்காடு வனப்பகுதியில் 280 கேமராக்கள்

image

களக்காடு வனப்பகுதியில் ஆண்டு தோறும் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கணக்கெடுப்பு பணியை முன்னிட்டு நேற்று வனப்பணியாளர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது .இந்த ஆண்டில் களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட களக்காடு திருகுறுங்குடி கோதையாறு வனப்பகுதியில் 140 இடங்களில் 280 கேமராக்கள் பொருத்தப்படுகிறது. 130 வனத்துறை ஊழியர்கள் இதில் ஈடுபட உள்ளனர்.

News January 8, 2025

நெல்லை: கலைத் திருவிழா போட்டியில் 83 மாணவர்கள் சாதனை

image

பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட கலைத் திருவிழா போட்டியில் மாநில அளவில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 83 மாணவ மாணவிகள் மாநில பரிசுகளை வென்று சாதனை படைத்துள்ளனர் என முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் தெரிவித்தார். 14 போட்டிகளில் முதலிடம் 7 போட்டிகளில் இரண்டாம் இடம், 9 போட்டிகளில் மூன்றாம் இடத்தில் வந்துள்ளனர் எனவும் அவர் கூறினார்.

News January 8, 2025

நெல்லையில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(ஜன.8) காலை 10:30 மணிக்கு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் மாவட்ட போலீஸ் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. #காலை 10 மணிக்கு பாளையங்கோட்டை சதக்கத்துல்லா கல்லூரியில் பொங்கல் விழா பட்டிமன்றம் நடைபெறுகிறது.#மாலை 6 மணிக்கு டைம்ஸ் நாளிதழ் அலுவலகத்தில் முன்னாள் எம்எல்ஏ வாழை ராஜா பிறந்தநாள் வாழ்த்து அரங்கம் நடக்கிறது.

News January 8, 2025

பாளையங்கோட்டை அருகே பஸ் கவிழ்ந்து விபத்து!

image

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை டக்கரம்மாள்புரம் அடுத்த நாகர்கோவில் பைபாஸ் ரோடு, இதயஜோதி நர்சிங் கல்லூரி அருகே இன்று(ஜனவரி 8) காலை தனியார் பஸ் ஒன்று திடீரென கவிழ்ந்து பயங்கர விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்தில் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.

News January 8, 2025

வண்ணார்பேட்டையில் ESI குறைதீர்க்கும் முகாம்!

image

நெல்லை ESI துணை இயக்குநர் மற்றும் குறைதீர்க்கும் அலுவலர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், நெல்லை துணை மண்டலம் சார்பில் ESI திட்டத்தில் உள்ள பயனீட்டாளர்களுக்கு குறைகளை நிவர்த்தி செய்ய இந்த மாதத்திற்கான குறைத்தீர்க்கும் முகாம் இன்று(ஜன.8) மாலை 4 மணிக்கு வண்ணார்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் பயனாளிகள் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம் என்றுள்ளனர். SHARE IT.

News January 7, 2025

நெல்லை 5336 ரவுடிகள் மீது நடவடிக்கை 

image

திருநெல்வேலி மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது என்றும், 2024 ஆம் ஆண்டில் 5336 ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் இன்று தகவல் தெரிவித்துள்ளார். இதில் 23 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 2023ஆம் ஆண்டை விட 2024ஆம் ஆண்டில் கொலை வழக்கு 21 சதவீதம் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

News January 7, 2025

8 பெட்டியில் இருந்து 16 பெட்டிகளாக மாற்றம்

image

திருநெல்வேலி – சென்னை எழும்பூர் (20666/65) வந்தே பாரத் ரயில் 8 பெட்டிகளில் இருந்து 16 பெட்டிகளாக வருகிற 11.01.2025 முதல் மாற்றப்படுகிறது. எனவே கூடுதல் இருக்கைகள் அதே வண்டியில் காண்பிக்கப்படும். WL ஆக நீங்கள் முன்பதிவு செய்தாலும் CNF ஆகிவிடும். எனவே தேவை உள்ளவர்கள் பயன்படுத்தி கொள்ளவும். Without Food option கொடுத்தால் டிக்கெட் விலை 300 வரை குறையும் என தெற்கு ரயில்வே இன்று தெரிவித்துள்ளது.

News January 7, 2025

ராக்கெட் ராஜாவின் கூட்டாளி கைது

image

கோவை ரத்தினபுரி போலீசார் நேற்று முந்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 8 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ள தூத்துக்குடியை சேர்ந்த பிரபல ரவுடியான ராஜ்குமார் கோவையில் மெத்தபெட்டமின் விற்றபோது கைது செய்யப்பட்டார். இவர் திசையன்விளையை சேர்ந்த ராக்கெட் ராஜாவின் கூட்டாளி என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 7, 2025

தமிழக காவல்துறைக்கு நெல்லை முபாரக் கண்டனம்

image

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் எதிர்கட்சிகள் விவசாயிகள் நடத்தும் போராட்டங்களுக்கு போக்குவரத்து நெரிசல், சட்ட ஒழுங்கு பிரச்சனை என காரணத்தை கூறி அனுமதி மறுக்கும் காவல்துறை மாநில முழுவதும் திமுகவின் போராட்டங்களுக்கு ஒரே இரவில் மேடை அமைத்து போராட்டம் நடத்த அனுமதி அளித்தது எப்படி? காவல்துறையின் இத்தகைய பாரபட்சம் கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.

News January 7, 2025

தட்டுப்பாடின்றி உரங்கள் வழங்க எம்பி கோரிக்கை 

image

டெல்லியில் மத்திய அரசின் சார்பில் தேசிய அளவில் உரம் மற்றும் ரசாயன செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது .இதில் பங்கேற்ற நெல்லை மக்களவைத் தொகுதி உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் தமிழ்நாடு விவசாயிகளின் தேவைகளை உடனடியாக நிறைவேற்ற கோரி பேசினார் .தொடர்ந்து தமிழக விவசாயிகளுக்கு உர மானியத்தை அதிகரிப்பதோடு தட்டுப்பாடின்றி உரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

error: Content is protected !!