India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று வெளியிட்ட அறிக்கையில் மதுரை திருப்பரங்குன்றம் விஷயத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடாமல் அரசியல் செய்யாமல், முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட வேண்டும். இவ்விவகாரத்தில் ஜனநாயக சக்திகளோடு எஸ்டிபிஐ கட்சி என்றைக்கும் நிற்கும். சிறுபான்மை சமூக மக்களின் வழிபாட்டு உரிமையையும் மீட்டெடுக்கிற வகையில் குரல் கொடுக்கும் துணை நிற்கும் என கூறியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நாளை நெல்லை வருகிறார். இதை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாநகர் மாவட்ட மற்றும் அருகே உள்ள மாவட்டங்கள் சேர்ந்த சுமார் 1000 போலீசார் போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் மற்றும் பாதுகாப்பு வழியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.இதற்காக வெளி மாவட்ட போலீசார் இன்று நெல்லை வந்தனர்.
முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகை தந்து காலை 11.45 கங்கைகொண்டான் சிப்கார்டில் உற்பத்தியினை தொடங்கி வைக்கிறார். 12.10க்கு கங்கைகொண்டான் சிப்காட்டில் அடிக்கல் நாட்டுதல், பிற்பகல் 1.1 வண்ணார்பேட்டை அரசு சுற்றுலா மாளிகை, மாலை 4. பாளையங்கோட்டையில் சீர்மிகு நகர் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தல், மாலை 5 மணிக்கு பாளையில் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளைய (6/2/25) நிகழ்ச்சிகள்.
காலை 11.15 சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வருகை
காலை 11.45 கங்கைகொண்டான் sipcot வளாகத்தில் நடைபெறும் Tp power solor நிறுவனத்தின் உற்பத்தியினை தொடங்கி வைத்து பார்வையிடுதல் .
பகல் 12.10 கங்கைகொண்டான் sipcot வளாகத்தில் விக்ரம் சோலார் நிறுவனத்திற்கான அடிக்கல் நாட்டுதல்
மாலை 4 மணி காந்தி மார்க்கெட் நிகழ்ச்சி
நெல்லை ராஜகோபாலபுரம் தேசிய நெடுஞ்சாலை அருகே மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு நடத்தினர். இந்நிலையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் மற்றும் மாநகராட்சியின் ஆய்வு தொடர்கிறது. காவல்துறையிடம் புகார் பெறப்பட்டு வருவதாகவும் சரியான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நெல்லையில் மதுரை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை ரெட்டியார்பட்டி அருகே மீண்டும் மருத்துவ கழிவு கொட்டப்பட்டுள்ளது. காலாவதியான மாத்திரைகள், டானிக்கள் அதிகளவு கொட்டப்பட்டுள்ளது. அதை தீ வைத்து எரிக்கவும் முயற்சி செய்யப்பட்ட நிலையில் பாதி எரிந்த நிலையில் உள்ளது. மருத்துவக் கழிவுகளை கொட்டியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் கழிவுகளை உடனே அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
நெல்லை மாவட்டம் முக்கூடல், சுத்தமல்லி பகுதியில் கேரளா மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மதுரை- குமரி நான்கு வழிச்சாலை ரெட்டியார்பட்டியில் மீண்டும் காலாவதியான மாத்திரை, டானிக், ஆயின்மென்ட் உள்ளிட்ட மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை கொட்டிய நபர்கள் அதனை தீ வைத்து எரித்து அழிக்கவும் முயற்சி செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலைத் தீர்ப்பதற்காக தாழையூத்தில் தொடங்கி கொங்கந்தான் பாறை வரை மேற்கு புறவழிச் சாலை அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டப் பணிக்காக நிலங்கள் ஆர்ஜீதம் செய்யும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இதன் முதற்கட்ட பணிகளை தமிழக முதலமைச்சர் நெல்லையில் நடைபெறும் விழாவில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். 180 கோடியில் மேற்கு புறவழிச்சாலை அமைய உள்ளது.
பிரபல எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் இன்று (பிப்-5) சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், 3 ஆண்டுகளாக நெல்லை புத்தகக் கண்காட்சியை ஒரு ‘மாடல்’ புத்தகக் கண்காட்சியாக நடத்திய மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அந்த பொறுப்பில் இருந்து விடைபெறுகிறார். அவருடைய தமிழ்ப்பணியை நெல்லை மக்கள் என்றும் நினைப்பார்கள் என தெரிவித்துள்ளார். ஆட்சியர் கார்த்திகேயன் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வரும் 6, 7 ஆகிய தினங்களில் நெல்லை வருகிறார், கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்திற்கு வருகை தருகிறார். அவர் வருகையை முன்னிட்டு கங்கைகொண்டான் பகுதியில் வரும் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை மூன்று நாட்கள் கங்கைகொண்டான் மற்றும் தாழையூத்து அதன் சுற்றுவட்டார பகுதியில் ட்ரோன்கள் பறக்க தடை. விதிக்கப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் நேற்று ( பிப்.4 ) தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.