India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லையப்பர் கோவிலுக்கு பரம்பரை வழிமுறை சாரா அறங்காவலர்கள் நியமனத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்களை கோயிலிலோ அல்லது இந்து சமய அறநிலையத்துறை, திருநெல்வேலி அலுவலகத்திலோ பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ, அஞ்சலிலோ அல்லது www.hrce.tn.gov.in இணையதளத்திலோ 30.09.2025 மாலை 5:00 மணிக்குள் சமர்ப்பிக்கலாம்.

திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம் சார்பில் செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி வள்ளியூர் கோட்ட அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறும். 16ஆம் தேதி நெல்லை நகர்புற கோட்ட அலுவலகத்திலும், 23ஆம் தேதி கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகத்திலும், 26 ஆம் தேதி நெல்லை கிராமப்புற கோட்ட அலுவலகத்திலும் பகல் 11 மணிக்கு முகாம்கள் நடைபெறும் என மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் வாழும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏற்படும் குப்பைகள் தேக்கம், பொது சுகாதாரம், குடிநீர் விநியோகம், வடிகால் வசதி, சாலை வசதி, தெரு விளக்கு வசதி ஆகியவற்றில் ஏற்படும் குறைகள் மற்றும் புகார்களை ஏற்கனவே நடைமுறையில் உள்ள 94899 30261 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தெரிவிக்கலாம். அல்லது 1800 425 4656 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். *நெல்லையை தூய்மையாக்க அனைவரும் ஷேர் செய்யுங்கள்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மாணவர்கள் மோதல் விவகாரத்தால் நேற்று முதல் பல்கலைக்கழகத்திற்கு கால வரையற்ற விடுமுறை வகுப்புகள் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் செப்.1ஆம் தேதி திங்கள்கிழமை முதல் பல்கலைக்கழகம் வழக்கமாக செயல்படும் என துணைவேந்தர் சந்திரசேகர் இன்று அறிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்ட சுகாதார அலுவலராக டாக்டர் கீதாராணி பணி செய்து வந்த நிலையில் அவர் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த இடத்திற்கு பொறுப்பு சுகாதார அலுவலராக முருகன் என்பவர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் புதிய சுகாதார அலுவலராக விஜயசங்கர் என்பவர் நியமிக்கப்பட்டார்.அவர் முறைப்படி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட சுகாதார அலுவலருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

நெல்லை மாவட்ட காவல்துறை குற்றங்களை கட்டுபடுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த <

நெல்லை மக்களே, நீங்கள் வசிகக்கும் இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், சாலை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து நீங்கள் வசிக்கும் பதியில் என்ன பிரச்னை என்பதை போட்டோவுடன் <

தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் (NHPC) உதவி ராஜ்யசபா அதிகாரி, ஜூனியர் இன்ஜினியர், கணக்காளர், மேற்பார்வையாளர், இந்தி மொழிபெயர்ப்பாளர் உள்ளிட்ட 248 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிப்ளமோ, B.E, CA படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். ரூ.27,000 முதல் ரூ.1,40,000 வரை சம்பளம் வழங்கப்படவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் <

திருநெல்வேலி மக்களே, உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு 17 வயதை கடந்து இருந்தால் உடனே VOTER IDக்கு அப்ளை பண்ணுங்க. <

நெல்லை பேட்டையில் டூவீலர் ஒர்க் ஷாப் கடை நடத்தி வருபவர் பாருக். இவருடைய கடைக்கு நேற்று இரவு ஒருவர் தன்னுடைய வாகனம் ஸ்டார்ட் ஆகவில்லை, அதனை சரி செய்ய வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு பாரூக், நான் மருத்துவமனைக்கு செல்லவதால் வர இயலாது எனக் கூறியுள்ளார். கோபமடைந்த அந்த நபர் அறிவாளை எடுத்து பாருக்கை வெட்டி உள்ளார். இதில் காயமடைந்த பாரூக் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.