India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில்: மாவட்டத்தில் கடந்த ஆண்டு தேசிய சைபர் கிரைம் போர்டல் மூலம் 1107 புகார்கள் பெறப்பட்டுள்ளது. இதில் 646 மனு ரசீதுகள் வழங்கப்பட்டுள்ளன. 40 குற்றங்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பணம் மோசடி செய்ய பயன்படுத்தப்பட்ட 190 வங்கி கணக்குகளில் இருந்து ரூ.7 கோடி முடக்கப்பட்டுள்ளது. ரூ.36 லட்சம் மீட்கப்பட்டுள்ளது என்றனர்.
உச்சநீதிமன்றத்தில் மாஞ்சோலை மக்களுக்கு கூடுதல் மறுவாழ்வு திட்டங்கள் வேண்டி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மக்கள் தரப்பு வாதங்களைக் கேட்ட பின்னர், தமிழ்நாடு அரசின் பதிலுக்காக வழக்கு விசாரணை பிப்ரவரி 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் மறுவாழ்வு திட்டம் குறித்து கூடுதல் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கு தொழில் பள்ளிகள் (ஐடிஐ) தொடங்கவும் தொடர் அங்கீகாரம் பெறவும் புதிய தொழில் பிரிவுகளில் கூடுதல் அலகுகளை இணைக்கவும் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை பழைய பேட்டையில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிர் கலை கல்லூரியில் கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் வரும் ஜனவரி 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இந்த போட்டியில் பங்கேற்குமாறு கலெக்டர் கார்த்திகேயன் நேற்று வெளியிட்டுள்ள தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கு தொழில் பள்ளிகள் (ஐடிஐ) தொடங்கவும் தொடர் அங்கீகாரம் பெறவும் புதிய தொழில் பிரிவுகளில் கூடுதல் அலகுகளை இணைக்கவும் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. ஆட்சியர் அலுவலகத்தில் 40 துறைகள் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கார்த்திகேயன் தலைமையில் இன்று மாலை 3 மணி அளவில் நடைபெறுகிறது.2.மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ராமகிருஷ்ணன் தலைமையில் காலை 10.00 மணி அளவில் சமத்துவ பொங்கல் விழா இன்று நடைபெறுகிறது.3.பாளை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் காலை 10 மணி அளவில் சமத்துவ பொங்கல் விழா இன்று நடைபெறுகிறது. *ஷேர்*
நெல்லை மக்களவைத் தொகுதி உறுப்பினர் ராபர்ட் புரூஸ் இன்று(ஜன.10) பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. #காலை 9.45 மணிக்கு மாநகராட்சி பொங்கல் திருவிழாவில் பங்கேற்கிறார். #பிற்பகல் 3 மணிக்கு அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்கிறார். #மாலை 5 மணிக்கு பல் மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்கிறார்.
நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசனின் மூத்த சகோதரர் இல.கோபாலன் இன்று உயிரிழந்தார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற குழு தலைவர் நெல்லை தொகுதி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அவரது இல்லத்துக்கு சென்று குடும்பத்தினரை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்தார். இதில் பாஜக மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அரசு அலுவலர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சொசைட்டி மைதானத்தில் பெண்களுக்கான மாபெரும் மின்னொளி கபாடி போட்டி தொடர் நடைபெற உள்ளது. ஜனவரி 14 முதல் 17 வரை நடைபெற உள்ள இந்த அகில இந்த போட்டியில் பல்வேறு மாநில வீராங்கனைகள் கலந்துக் கொள்கின்றனர். பார்வையாளர்கள் அமரும் கேலரி வசதியுடன் நடைபெறும் இந்த போட்டிக்கான ஏற்பாடு முழுவீச்சில் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
நெல்லை ஆட்சியர் அலுவகத்திற்கு இன்று காலை மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனையில் ஈடுபட்ட நிலையில் அது புரளி என தெரியவந்தது. இந்நிலையில் மிரட்டல் விடுத்த பேட்டையை சேர்ந்த அப்துல்ரகுமான் என்பவரை போலீசார் கைது செய்தனர். பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 வழங்காததால் மது போதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக விசாரனையில் தெரியவந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.