Tirunelveli

News September 1, 2025

மனோன்மணியம் பல்கலை இன்று முதல் செயல்படும்

image

அபிஷேக பட்டியில் உள்ள MSபல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 29ம் தேதி மாணவர்கள் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பு மாணவர்கள் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் இருவர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். மாணவர்கள் மோதல் சம்பவத்தை தொடர்ந்து பல்கலைக்கழக வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கபட்டது. இந்த நிலையில் இன்று முதல் வகுப்புகள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கபட்டது.

News September 1, 2025

நெல்லை: பான்கார்டு உங்ககிட்ட இருக்கா??

image

நெல்லை மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் எதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATE ஆக வாய்ப்புள்ளது. இங்கு <>கிளிக் <<>>செய்து உங்க பான்கார்டு விவரங்களை பதிவு செய்து பான்கார்டு STATUS பார்த்து DEACTIVATEல் இருந்தால் 1800 222 990 எண் அல்லது இந்த tinpan.proteantech.in புகார் செய்து ACTIVATE செய்யுங்க… PAN CARD தற்போது அத்தியாவாசியமான ஓன்றாக உள்ளது.SHARE செய்யுங்

News September 1, 2025

மாநகரில் இரவு காவல் பணி அதிகாரி விபரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (ஆக.31) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

News August 31, 2025

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [ஆக.31] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் கணேசன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

News August 31, 2025

நெல்லை: இனி எளிதில் சான்றிதழ் பெறலாம்!

image

நெல்லை மக்களே; உங்களுக்கு தேவையான
▶️சாதி சான்றிதழ்
▶️வருமான சான்றிதழ்
▶️முதல் பட்டதாரி சான்றிதழ்
▶️கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
▶️விவசாய வருமான சான்றிதழ்
▶️சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
▶️குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற இந்த லிங்கில் <>CLICK<<>> செய்து அப்ளை செய்யவும் *மறக்காம ஷேர் பண்ணுங்க

News August 31, 2025

நெல்லை: மனோன்மணியம் பல்கலை திறப்பு தேதி அறிவிப்பு

image

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில் பைக் நிறுத்துவது தொடர்பாக இரு மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியது. இதனால் அங்கு காலவரையற்ற விடுமுறை விடுக்கப்பட்டது. இந்த விடுமுறை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. முதுநிலை பட்டப்படிப்பு, ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாணவர்கள் அனைவரும் நாளை (செப்.1) கல்லூரிக்கு வரவேண்டும் என்றும், இனிமேல் வழக்கம் போல வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 31, 2025

நெல்லை: B.E முடித்தால் ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் வேலை

image

மத்திய அரசின் பவர்கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள 1,543 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E, B.Tech முடித்திருக்க வேண்டும். கள பொறியாளர், கள மேற்பார்வையாளர் பதவிக்கு ரூ.30,000 முதல் ரூ.1.20 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> செப்.17 வரை விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு இந்த செய்தியை SHARE பண்ணுங்க.!

News August 31, 2025

நெல்லையில் தாயை அடித்துக் கொன்ற மகன்

image

மூலைக்கரைபட்டி அருகே எடுப்பல் கிராமத்தை சேர்ந்தவர் பூல்பாண்டி மனைவி ரெஜினா(43). பூல்பாண்டி 6 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில் ரெஜினாவுக்கு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டிற்கு வந்த ரெஜினாவின் மகன் கொம்பையா தனது தாய் அந்த வாலிபருடன் உல்லாசமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இரும்பு பைப்பை எடுத்து தாயாரை சரமாரியாக அடித்து கொலை செய்துள்ளார்.

News August 31, 2025

விநாயகர் சிலைகள் விஜர்சனம் 2500 போலீஸ் பாதுகாப்பு

image

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கடந்த 27-ம் தேதி நெல்லை மாநகரில் 100 விநாயகர் சிலைகளும், மாவட்டத்தில் 200 சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த சிலைகள் இன்று விஜர்சனம் செய்யப்படுகிறது. இதற்காக அனுமதிக்கப்பட்ட இடங்களில் ஊர்வலமாக எடுத்துச் சென்று விமர்சனம் செய்யப்பட உள்ளன. இதை முன்னிட்டு நெல்லை மாநகர், மாவட்ட முழுவதும் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

News August 31, 2025

மாநகரில் இன்று இரவு காவல் பணி அதிகாரி விபரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (ஆகஸ்ட் 30) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!