Tirunelveli

News February 8, 2025

தேசிய குடற்புழு நீக்க நாள் முகாம் 

image

தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு நெல்லையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ள்ளிட்ட இடங்களில் பிப்.10 அன்று குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. பள்ளிக்கு செல்லாத சிறார்கள், 20 முதல் 30 வயது வரை உள்ள மகளிர் பயனடையுமாறு கலெக்டர் சுகுமார் இன்று அறிவித்துள்ளார்.

News February 8, 2025

224-வது ஆட்சியராக பொறுப்பேற்றார்

image

நெல்லை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக மருத்துவர் இரா.சுகுமாரன் இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். நெல்லை மாவட்ட ஆட்சியராக இருந்த மருத்துவர் கார்த்திகேயன் எல்காட் சேர்மனாக மாறுதலாகி சென்றதையடுத்து நெல்லையின் 224-வது ஆட்சியராக சுகுமாரன் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அனைத்து துறை அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்

News February 8, 2025

பாளையில் குடிமைப் பணிகள் தேர்வு பலத்த பாதுகாப்பு

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்: ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி II, II A பதவிகளுக்கான முதன்மை எழுத்து தேர்வு பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் இன்று (பிப்-8) நடைபெறுகிறது. தேர்வு மையங்களுக்கு காலையிலேயே தேர்வர்கள் வந்திருந்தனர் அவர்களை பலத்த ஆய்வுக்கு பின்னர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையத்தை பறக்கும் படையினர் கண்காணித்து வருகின்றனர்.

News February 8, 2025

கணவரை கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை

image

நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள ஊர்க்காடு பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து (30)என்பவரை கடந்த 2022 ஆம் ஆண்டு அவரது மனைவி சுதா கழுத்தை நெரித்து கொலை செய்த வழக்கு நெல்லை நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த போது கொலை செய்த சுதாவிற்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ-1000 அபராதம் விதித்து நீதிபதி பன்னீர்செல்வம் தீர்ப்பளித்தார்.

News February 8, 2025

நெல்லையின் புதிய ஆட்சியர் இன்று  காலை பொறுப்பேற்பு

image

நெல்லை மாவட்ட புதிய ஆட்சித் தலைவராக மருத்துவர். இரா.சுகுமார் நாளை காலை பொறுப்பேற்க உள்ளார் என மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நெல்லை ஆட்சியர் மாற்றம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் நெல்லையில் இரண்டு நாட்களாக முதல்வர் பங்கேற்ற அரசு நிகழ்ச்சிக்காக அவரது பதவியேற்பு நிகழ்வு தள்ளி வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

News February 7, 2025

நெகிழ்ச்சியுடன் விடைபெற்ற நெல்லை ஆட்சியர்

image

நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் இடம் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் இன்றுடன் அவர் நெல்லையில் இருந்து விடைபெறுகிறார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் அன்பின் நெல்லைக்கு, நெல்லையில் பணியினை நிறைவு செய்து இன்று விடைபெறுகிறேன். உங்கள் அனைவரின் அன்பாலும், பல துறை அலுவலர்களின் ஒத்துழைப்பாலும் பல தளங்களிலும் நம் மாவட்டம் தொடர்ந்து மேம்பாட்டு வருகிறது. ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

News February 7, 2025

நெல்லை மாநகர டவுன் காவல்துறை உதவி ஆணையர் பொறுப்பேற்பு

image

நெல்லை மாநகர டவுன் காவல்துறை உதவி ஆணையராக K.அஜிகுமார் இன்று பொறுப்பேற்றார். இதற்கு முன் இவர் பணகுடி காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்து பதவி உயர்வும் மூலம் காவல் உதவி ஆணையராக பொறுப்பேற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாகப் பொறுப்பேற்ற அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

News February 7, 2025

நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பதிவு

image

நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு பதிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது அதில் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.அதில் ஆன்லைன் விளையாட்டில் உங்களின் நேரத்தையும் பணத்தையும் இழக்காதீர்கள் என்றும்
நாளடைவில் இந்த பழக்கம் உங்களை அடிமையாக்கலாம்.
ஆகவே பொது மக்கள் விழிப்போடு செயல்பட்டு ஆன்லைன் விளையாட்டை தவிர்த்திடுவீர். என விழிப்புணர்வு பதிவிடப்பட்டுள்ளது

News February 7, 2025

நெல்லை மக்களே தினமும் ரூ.500 வரை சன்மானம் பெற அரிய வாய்ப்பு

image

நெல்லை மக்களே தினமும் ரூ.500 வரை சன்மானம் பெற அறிய வாய்ப்பு. உங்கள் மாவட்டம், தாலுகா, கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகள் மற்றும் கோரிக்கைகளை நமது WAY2NEWS-ல் செய்தியாக பதிவிட்டு சன்மானம் ஈட்டுங்கள். மேலும், விவரங்களுக்கு 6380079317 என்ற எண்ணை அழைக்கலாம் (OR) WHATS APP-ல் மெசேஜ் பண்ணலாம். விருப்பமுள்ளவர்கள் <>(இங்கே கிளிக் செய்து) <<>>உங்கள் தகவல்களை பகிரலாம். *செய்தி ஆர்வம் உள்ள நண்பர்களுக்கு பகிரவு

News February 7, 2025

நெல்லை மாநகரப் பகுதிகளில் கூட்டம் நடத்த தடை

image

நெல்லை மாநகரப் பகுதிகளில் பொதுக்கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ் ஹாதிமணி பிறப்பித்த உத்தரவில், இன்று (பிப் -7) ம்தேதி முதல் 15 நாட்களுக்கு பிப்ரவரி 21ஆம் தேதி வரை திருநெல்வேலி மாநகர பகுதிகளில் ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிப்பதாக மாநகர காவல்துறை ஆணையாளர் சந்தோஷ் ஹாதி மணி ஆணை பிறப்பித்துள்ளார்.

error: Content is protected !!