India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் எழுச்சி மாநாடு மேலப்பாளையம் ஜின்னா தியேட்டரில் இன்று நடைபெற்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மைதீன், தூத்துக்குடி எம்பி கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். முன்னதாக நெல்லை மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர் மற்றும் நிர்வாகிகளுக்கு முஸ்லிம் லீக் சார்பில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடத்திய ‘வளர்ந்து வரும் பாரதத்திற்கான ஜிஎஸ்டி வரி சீரமைப்பு’ எனும் கருத்தரங்கு இன்று (செப்டம்பர் 14) சென்னையில் நடந்தது. இதில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ பங்கேற்றார். பாஜக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தற்போது வாட்ஸ்அப்பில் RTO Traffic Challan.apk அல்லது SBI Aadhar Update.apk என்று தெரிந்த அல்லது தெரியாத நம்பரிலிருந்து பதிவிறக்கம் செய்வதற்கான apk file வந்தால் உடனடியாக அதை தவிர்த்து விடுங்கள். அதை பதிவிறக்கம் செய்தால் உங்கள் புகைப்படங்கள், வங்கி கணக்கில் இருந்து பணம் திருடு போவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இதுபோன்ற குற்றங்களில் சிக்கிக் கொண்டால் 1930 என்ற சைபர் குற்றப்பிரிவு எண்ணை அழைக்கலாம்.

நெல்லையில் கடந்த ஒரு வாரத்தில் இரண்டு அரசு பஸ்கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அவ்வப்போது விபத்தில், சிக்குவது பிரேக் டவுன் ஆவது போன்ற நிகழ்வுகளும் அதிகரித்துள்ளது. இதனை தவிர்க்க பஸ்களின் எண்ணிக்கை அடிப்படையில் போதிய ஓட்டுனர், நடத்துனர்கள் நியமிக்க வேண்டும், பிஎஸ் 6 தொழில்நுட்ப பஸ்களை பராமரிப்பு செய்வதற்கான தொழில்நுட்ப வல்லுநர்களை பணிகளில் நியமிக்க வேண்டும் என தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சேலம் ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக நெல்லையிலிருந்து பிலாஸ்பூருக்கு இயக்கப்படும் விரைவு ரயில்
(எண்: 22620) இன்று மட்டும் கோவையில் நிற்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பாடனூர், இருகூர் வழியாக இந்த ரயில் திருப்பி விடப்படுகிறது. கோவைக்கு பதிலாக பாடனூர் ரயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மக்களே; மத்திய அரசின் புலனாய்வு துறையில் புலனாய்வு அதிகாரிக்கான காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு B.sc முடித்திருந்தால் போதும். இதற்கு மாதம் ரூ. 25,500 – 81,100 வரை சம்பளம் வழங்கப்படும். 18-27 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள்<

திருநெல்வேலி மக்களே உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், திருநெல்வேலி மாவட்ட மக்கள் 8903331912 என்ற எண்ணில் மேற்கண்ட புகார்களை வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். மறக்காம SHARE பண்ணுங்க!

காங்கிரஸ் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்எல்ஏ, தமிழ்நாடு வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை விருதுநகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். தென்காசி பிரிப்புக்குப் பின், நெல்லை மாவட்டத்தில் நெல்லை, சேரன்மகாதேவி கோட்டங்கள் உள்ளன. சேரன்மகாதேவி கோட்டத்தை இரண்டாக பிரித்து, நாங்குநேரியைத் தலைமையிடமாக கொண்டு புதிய கோட்டம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார் .

திருநெல்வேலி திருவள்ளுவர் பேரவை இலக்கிய அமைப்பு சார்பில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கட்டணமில்லா திருக்குறள் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், தமிழக அரசு திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவ மாணவிகளுக்கு நடத்தப்படும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ளவும் வழி காட்டப்படுகிறது என்று பேரவை அமைப்பாளர் ஜெயபாலன் தெரிவித்தார். விபரங்களுக்கு 9842080208 அழைக்கலாம்.

நெல்லை மாநகராட்சி கமிஷனர் டாக்டர்.மோனிகா ராணா அறிவிப்பு: மேலப்பாளையம் மண்டலத்தின் சுத்தமல்லி நீரேற்று நிலையம் அருகில் 600 மி.மீ. பிரதான குழாய் உடைப்பால் நீர் இயக்கம் நிறுத்தப்பட்டு சரிசெய்யும் பணி நடக்கிறது. ஆகவே 40, 41, 42, 51, 53, 54, 55 வார்டுகளுக்கு இன்று மற்றும் நாளை அதாவது செப். 14, 15 ஆகிய நாட்களில் குடிநீர் விநியோகம் இருக்காது; பொதுமக்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தவும். *ஷேர்
Sorry, no posts matched your criteria.