India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாலன் மாவட்ட துணை தலைவர் ரங்கன் மற்றும் நிர்வாகிகள் நேற்று நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் நெல்லை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக 100 நாள் வேலை திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மீண்டும் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர் .
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த பிப்.28ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் திருநெல்வேலி குறுக்குத்துறையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் மூலஸ்தானத்தில் ஒன்றை அடிக்கு மேல் நேற்று வெள்ள நீர் புகுந்தது குறிப்பிடத்தக்கது.
இ.எஸ்.ஐ. திட்ட பயனாளிகளுக்கு குறைகளை நிவர்த்தி செய்யும் சிறப்பு முகாம் நாளை(மார்ச்.5) மாலை 4 மணிக்கு இ.எஸ்.ஐ துணை மண்டல அலுவலகத்தில் நடைபெற உள்ளது. முகாமில் இ.எஸ்.ஐ.சி மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர், துணை மண்டல மருத்துவ துணை இயக்குனர், மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர் & மருத்துவ அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதில் பயனாளிகளும் பங்கேற்று பயனடையலாம் என துணை இயக்குனர் அருண் தெரிவித்துள்ளார். *ஷேர்
களக்காடு பகுதியைச் சேர்ந்த 36 வயது வாலிபரிடம் ஆப் மூலம் பழகி ஓரினச்சேர்க்கை ஆசை காட்டி தேவ நல்லூர் அருகே உள்ள கல்குவாரி பகுதிக்கு மர்ம நபர்கள் அழைத்துள்ளனர். அங்கு சென்ற இந்த வாலிபரிடம் ரூ.11,000 பணத்தை பறித்து விட்டு விரட்டி அடித்தனர். இது குறித்து அவர் அளித்த புகார் அடிப்படையில் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் ,மணிகண்டன், இசக்கி பாண்டி,17 வயது சிறுவனை நேற்று கைது செய்தனர்.
நெல்லை மாநகரப் பகுதியில் உள்ள சொக்கட்டான் தோப்பில் கட்டப்பட்டுள்ள தீண்டாமைச் சுவர் மற்றும் அரசு நில ஆக்கிரமிப்பை அகற்ற அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மார்ச்.17ல் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆமை விடும் போராட்டத்தை நடத்தப் போவதாக தமிழர் விடுதலை களம் அமைப்பு அறிவித்துள்ளது.
நெல்லை, தெற்கு கள்ளிகுளத்தில் 139 ஆண்டுகள் பழமை வாய்ந்த அதியச பனிமாதா ஆலயம் அமைந்துள்ளது. முழுவதும் பதநீர்&கடுக்காய் கொண்டு கட்டப்பட்டுள்ள இக்கோயிலின் கோபுரம் 183 அடி உயரமுடையது. இந்த ஆலயத்திற்கு மாதா சுரூபங்கள் பிரான்ஸ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டவை. திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜுலை 27ல் துவங்கி ஆகஸ்டு 5ல் நிறைவடையும். வெளிமாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.SHARE IT
நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தை சேர்ந்த வாலிபர் விக்னேஷ் நாகராஜன் என்பவர் ஜமைக்கா நாட்டில் கொள்ளையர்களால் சூப்பர் மார்க்கெட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் உடல் 74 நாட்களுக்குப் பிறகு நாளை (மார்ச்.4) மாலை 3 மணிக்கு விமானம் மூலம் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வருகிறது. பின் அங்கிருந்து உடல் நெல்லைக்கு கொண்டு வரப்படுகிறது.
இன்று (மார்ச்.3) தொடங்கும் பிளஸ் 2 தேர்வில் திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 19,816 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். மாவட்டம் முழுவதிலுமாக சேர்த்து 73 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் தெரிவித்துள்ளார். தேர்வு மையங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், தடையில்லா மின்சாரம் ஆகியவை வழங்கிட முறையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கோலி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் வட மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தென் மாவட்டங்களில் கன்னியாகுமரியில் இருந்து மும்பைக்கு சிறப்பு ரயில் மும்பை – கன்னியாகுமரிக்கு வருகிற மார்ச் 10 மற்றும் 17 ஆகிய தேதிகளிலும், மறு மார்க்கத்தில் கன்னியாகுமரி – மும்பை மார்ச் 11 மற்றும் 18 தேதிகளில் இயக்கப்படுவதாக நேற்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
நெல்லை மாவட்டம் உவரி அருகே Tata குடியிருப்பை சேர்ந்த மகாராஜன் மகள் முத்து பிரித்தா (24). இவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வந்த நிலையில் நேற்று அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதிய கடிதம் சிக்கியது. அதில் எனது சாவிற்கு யாரும் காரணம் இல்லை. தொடர்ந்து விக்கல் நோய் காரணமாக வாழ பிடிக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.