Tirunelveli

News September 15, 2025

நெல்லை: மாணவர்களுக்கு புதிதாக திறன் வினாத்தாள்

image

காலாண்டு பொதுத் தேர்வு 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நெல்லை மாவட்டத்தில் இன்று தொடங்கியது. இட்டேரி அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் மாணவ மாணவிகள் தேர்வை ஆர்வமாக எழுதினர். இதில் மெல்ல கற்கும் மாணவர்களுக்கு முதல் முறையாக “திறன்” என்ற தலைப்பில் சிறப்பு வினாத்தாள் தயாரித்து வழங்கப்பட்டது. மெல்ல கற்க்கும் மாணவர்களை ஊக்குவிக்க கல்வித்துறை முதல் முறையாக இந்த நடைமுறை அமல்படுத்ததியது.

News September 15, 2025

நெல்லை: நீங்க பட்டதாரியா? ரூ.35,000 வேலை ரெடி!

image

நெல்லை மக்களே, தமிழ்நாடு கிராம வங்கியில் காலியாக உள்ள் 7,972 அலுவலக உதவியாளர்கள் பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி முடித்து 18 முதல் 28 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,000 வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் இங்க <>க்ளிக் <<>>செய்து வருகிற 21ம் தேதிக்குள் விண்ணப்பியுங்க. டிகிரி முடித்தவர்களுகு SHARE செய்து உதவுங்க.

News September 15, 2025

நெல்லையில் இன்று அன்பு கரங்கள் திட்டம் தொடக்கம்

image

பெற்றோரை இழந்து உறவினர்கள் ஆதரவில் வாழும் குழந்தைகளின் கல்வி மற்றும் பிற வாழ்வாதார தேவைக்கு மாதம் 2000 வழங்கும் அன்பு கரங்கள் திட்டங்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி மூலம் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து இன்று காலை பாளை நேருஜி கலையரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சுகுமார் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News September 15, 2025

நெல்லை: குழந்தை இல்லாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

image

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முருகன் (34), குழந்தை இல்லாத மனவேதனையால் விரக்தியில் நேற்று விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி இந்துமதி, உறவினர்களுடன் மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தார், ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்துமதியின் புகாரின் பேரில் விஜயநாராயணம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

News September 15, 2025

நெல்லை: எடப்பாடிக்கு எதிராக போஸ்டர்கள்

image

மதுரை விமான நிலையம் குறித்து இரு சமூகத்தினர் இடையே பிரிவினையை தூண்டி அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் எடப்பாடி பேசியதாக சொல்லபடுகிறது. அரசியல் ஆதாயம் தேடும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை வன்மையாக கண்டிக்கிறோம் என தேவேந்திரர் பண்பாட்டு கழகம் சார்பில் நெல்லை மாநகரப் பகுதி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

News September 15, 2025

காவல் நிலையத்தில் திருட்டு: இருவர் கைது

image

பணகுடி காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள் விசாரணைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களில் டயர்கள் திருடுபோனது தெரியவந்தது. விசாரணையில் வேல்முருகன், ராகுல் மற்றும் ஜெகதீஷ் ஆகிய 3 பேரும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. வேல்முருகன், ராகுல் இருவரையும் நேற்று கைது செய்தனர். ஜெகதீஷை தேடி வருகின்றனர்.

News September 15, 2025

நெல்லை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா??

image

நெல்லை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <>க்ளிக்<<>> செய்து நெல்லை மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் மொபைல் எண் குறிப்பிட்டு REGISTER பண்ணுங்க..மாதம் எவ்வளவு கரண்ட் பில் தகவல் உங்க போனுக்கே வந்துடும். கரண்ட்பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை இல்லை. தகவல்களுக்கு: 94987 94987 அழையுங்க.இந்த அருமையான தகவலை உங்களுக்கு தெரிஞ்சுவங்களுக்கு SHARE பண்ணுங்க.

News September 15, 2025

நெல்லை: ஆட்டோ டிரைவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை

image

கீழ வைராவிகுளத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் (55). இவர் ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவர் 6ம் வகுப்பு படிக்கும் பத்து வயது சிறுமியை தனது ஆட்டோவில் பள்ளியில் விடுவதாக அழைத்து சென்று ஆட்டோவில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி தெரிவித்த தகவலின் படி பெற்றோர் புகார் அளித்தனர். அனைத்து மகளிர் போலீசார் போக்ஸோ மற்றும் 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து தலைமறைவான ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர்.

News September 15, 2025

நெல்லையில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள்

image

# இன்று காலை பத்து முப்பது மணிக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.

# திருநெல்வேலி மாநகராட்சி 55 வார்டுகளிலும் இன்று காலை 10 மணி முதல்பகுதி சபா கூட்டம் நடைபெறுகிறது.

# அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு அண்ணா சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி காலை 9 மணி முதல் நடக்கிறது. மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE….

News September 15, 2025

முஸ்லிம் லீக் மாநாட்டில் விருது வழங்கி கௌரவிப்பு

image

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் எழுச்சி மாநாடு மேலப்பாளையம் ஜின்னா தியேட்டரில் இன்று நடைபெற்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மைதீன், தூத்துக்குடி எம்பி கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். முன்னதாக நெல்லை மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர் மற்றும் நிர்வாகிகளுக்கு முஸ்லிம் லீக் சார்பில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

error: Content is protected !!