Tirunelveli

News March 5, 2025

பாலம் வேலையால் பஸ் வசதியின்றி மாணவர்கள் அவதி

image

ஆனைக்குளத்தில் பாலம் பணிகள் நடைபெறுவதால் மாற்றுப்பாதை இல்லாமல் வைத்திலிங்கபுரம், தங்கையம், வில்வனம்புதூர் ஆகிய 3 ஊர்களுக்கு முற்றிலுமாக பஸ் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் வள்ளியூரில் இருந்து ஆனைகுளம் வரைக்கும் பஸ் இயக்கப்படுகிறது. அரசு பொது தேர்வு நடைபெறுவதால் பள்ளி மாணவ மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.ஆகவே உடனடியாக நடவடிக்கை எடுத்து வில்வனம்புதூர் வரைக்கும் பஸ் இயக்க கோரிக்கை

News March 5, 2025

தனியார் வேலைவாய்ப்பு முகாம் – ஆட்சியர் தகவல்

image

பாளையங்கோட்டை புனித யோவான் கல்லூரியில் வரும் 22.03.2025 அன்று காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் சுகுமார் இன்று தெரிவித்துள்ளார். முகாமில் 5-ஆம் வகுப்பு முதல் டிகிரி கல்வித்தகுதியுடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். 100க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு வேலைநாடுநர்களை தேர்வு செய்யவுள்ளனர். <>இந்த <<>> இணையதளத்தில் பதிவு செய்வது அவசியம்.SHARE IT

News March 5, 2025

பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அப்ரண்டிஸ் வேலை வாய்ப்பு – உடனே அப்ளை பண்ணுங்க

image

பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடாவில் அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 4000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழகத்தில் 223 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நெல்லைக்கு 6 பணியிடங்களும் உள்ளன. டிகிரி படித்திருந்தால் போதும். தேர்வு ஆன்லைனின் நடைபெறும். விண்ணபிக்க <>இங்கே <<>> க்ளிக் செய்யவும். 11.03.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். SHARE IT

News March 5, 2025

தாமதமாக புறப்படும் வந்தே பாரத் ரயில்

image

புதிய பாதை இறுதி கட்ட பணிகளால் நெல்லை ரயில் சேவைகளில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நெல்லை – எழும்பூர் விரைவு ரயில் வரும் 8ஆம் தேதி செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும். எழும்பூர்-நெல்லை வந்தே பாரத் ரயில் நாளை 6,7ஆம் தேதிகளில் 15 நிமிடங்கள் தாமதமாக மாலை 3 மணிக்கு புறப்பட்டு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 5, 2025

மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்ட நிலவரம்

image

நெல்லை மாவட்ட அணைகளில் இன்று காலை 7 மணி நிலவரப்படி நீர்மட்ட விவரம் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. பாபநாசம் அணை நீர் இருப்பு 88.25 அடியாக உள்ளது. அணைக்கு 595 கன அடி வருகிறது. 200 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு நீர் இருப்பு 101.18 அடி. மணிமுத்தாறு 89.72 அடி. வடக்கு பச்சையாறு 8.25 அடி. நம்பியாறு 13 அடி. கொடுமுடியாறு 5.75 அடி என நீர் இருப்பு உள்ளது.

News March 5, 2025

900 ஆண்டு பழைமையான உச்சிஷ்ட கணபதி

image

நெல்லை தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கும் மணிமூர்த்தீஸ்வரம் ஆலயம் 900 வருடங்கள் பழைமை வாய்ந்தது. இங்கு தங்கம் போல் ஜொலிக்கும் கணபதியை தரிசித்து வழிபட சகல துன்பங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. விநாயகர் தன் தேவியுடன் இருந்து அருள்பாலிப்பதால் இங்கு வந்து வேண்டிக்கொண்டால் கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். திருமணத்தடைகள் நீங்கும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள் என்பது நம்பிக்கை.

News March 5, 2025

மணிமுத்தாறு அருவியில் 10ஆவது நாளாக குளிக்க தடை

image

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இயல்பை விட அதிக அளவில் நீர்வரத்து காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக அருவியில் குளிக்க 10 ஆவது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

News March 4, 2025

நெல்லை மாவட்ட இரவு நேர காவல் அதிகாரிகள் பட்டியல்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமுள்ள 5 காவல் உட்கோட்டங்களில், இன்று (மார்ச் 04] இரவு ரோந்து காவல் அதிகாரிகளின் பெயர், அவர்களின் உட்கோட்டம் மற்றும் செல் நம்பர் ஆகியவற்றை, திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ரகுபதி ராஜா மேற்பார்வையில், இவர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 4, 2025

நெல்லை கடற்கரை சாலையில் இந்த கோயிலுக்கு போயிருக்கீங்களா.?

image

உவரி கடற்கரையில் செல்வமாதா தேவாலயம் அமைந்துள்ளது.இது ஒரு விமானத்தை சுமந்து செல்லும் கப்பலின் வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. ECR சாலையில் அமைந்துள்ள இந்த தேவாலயத்தில் 4 சன்னதிகளும் பல குகைகளும் உள்ளன.தேவாலயத்தில் படிக்கட்டுகளுடன் கூடிய ஒரு சிறிய கடற்கரை உள்ளது. இந்த தேவாலயம் கடலை நோக்கி உள்ளது.அது அலைகளில் பயணிப்பது போல் தெரிகிறது.செப்டம்பர் கடைசி வெள்ளியில் திருவிழா நடக்கிறது. SHARE IT

News March 4, 2025

நெல்லையில் 11ம் வகுப்பு தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

image

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று தொடங்கிய நிலையில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்க இருக்கிறது. நெல்லை மாவட்டத்தில் 20ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுத உள்ளனர். இதற்கான தேர்வு வையுங்கள் தயார் செய்யும் பணி இன்று நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வகுப்பறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு ஏற்பாடு பணிகளை முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் கண்காணித்து வருகிறார்.

error: Content is protected !!