Tirunelveli

News March 11, 2025

100 தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு

image

100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் மெகா வேலைவாய்ப்பு முகாம் வருகிற 22ஆம் தேதி பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் ஐந்தாம் வகுப்பு முதல் +2 டிகிரி டிப்ளமோ பட்டதாரிகள் பங்கேற்கலாம். வேலை நாடுபவர்கள் அரசு தனியார் வேலைவாய்ப்பு இணையதளத்தில் (www.privatejob.tn.gov.in) என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

News March 11, 2025

செவ்வாய்க்கு செயற்கைகோள் ஏவியவர் யார் தெரியுமா.?

image

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே கோதைசேரி கிராமத்தைச் சேர்ந்தவர் அருணன். திருக்குறுங்குடி பள்ளியிலும் பயின்ற இவர் 1984ல் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பணியில் சேர்ந்தார். 2013ல் மங்கள்யான் செயற்கைக்கோளை உருவாக்கி முதல் முயற்சியிலேயே விண்கலத்தை நிலைநிறுத்திய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றதற்கு சொந்தக்காரர். அவரின் சாதனை தமிழ்நாடு பாடப்புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. SHARE IT

News March 11, 2025

நெல்லையில் இருந்து சென்ற வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு

image

நெல்லையில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் நேற்று சென்றது.கடம்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள தங்கம்மாள்புரம் கேட் பகுதியில் ரயில் சென்ற போது C-1 பெட்டியில் மர்ம நபர்கள் கற்களை வீசினர். இதனால் பயங்கர சத்தம் கேட்டது ஜன்னல் கண்ணாடியும் உடைந்தது. ரயில்வே கார்டு மதுரை ரயில்வே கண்ட்ரோலுக்கு தகவல் கொடுத்துள்ளார். ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

News March 11, 2025

தந்தை உயிரிழந்த நிலையிலும் தேர்வு எழுத சென்ற மாணவி

image

திருநெல்வேலி மாவட்டம், இட்ட மொழி அருகே உள்ள விஜய அச்சம்பாடு வடலிவிலை பள்ளியில் பயிலும் மாணவி மதுமிதாவின் தந்தை காலமானார். தொடர்ந்து தற்போது மேல்நிலைப்பள்ளி தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இன்று(மார்ச்.11) கணித தேர்வு நடைபெறும் நிலையில் மாணவி மதுமிதா தனது தந்தை உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்குச் சென்றார்.

News March 11, 2025

நெல்லையில் கனமழை பாதிப்பு குறித்து புகார் அளிக்க

image

நெல்லையில் மிக கனமழை பாதிப்புகள் குறித்து மக்கள் தகவல் தெரிவிக்கும் பொருட்டு பேரிடர்கால அவசர கட்டுப்பாட்டு மையம் ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும். கட்டணமில்லா தொலைபேசி எண்:1077 , தொலைபேசி எண்:0462-2501070, வணக்கம் நெல்லை 9786566111 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் தொடர்புகொண்டு எந்த நேரத்திலும் தகவல் தெரிவிக்கலாம். *குழந்தைகளை பாதுக்காப்பாக கவனித்துக்கொள்ள அறிவுறுத்தல்* கட்டாயம் ஷேர்

News March 11, 2025

கோழிக்கு அரிசி எடுத்து சென்றாலும் குற்றம்தான்

image

திருநெல்வேலி கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட துணை பதிவாளர் கௌதம் கார்த்திக் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், ரேஷன் கடைகளில் கீழே கொட்டப்பட்டுள்ள ரேஷன் அரிசிகளை கோழிக்கு கொண்டு சென்றாலும் குற்றம்தான் .எனவே ரேஷன் கடை ஊழியர்கள் இதில் கவனமாக செயல்பட்டு, பொதுமக்களுக்கு சேர வேண்டிய பொருட்களை முறையாக வழங்க வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

News March 10, 2025

கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

image

2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நெல்லை முன்னீர் பள்ளம் அருகே வடுவூர் பட்டி டாஸ்மாக் அருகே சங்கர சுப்பிரமணியன் என்பவரை கொலை செய்த வழக்க்கு கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மகாராஜன்(24), பாண்டி(38) மற்றும் சீதாராமன்(29) ஆகிய மூவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதம் விதித்து  நீதிபதி பன்னீர்செல்வம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News March 10, 2025

மாணவனுக்கு 12 இடங்களில் அரிவாள் வெட்டு

image

ஸ்ரீவைகுண்டம் அருகே இன்று காலை பேருந்தில் வந்த +1 மாணவனுனை மர்ம நபர்கள் அறிவாளால் வெட்டியதில் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மருத்துவமனை டீன் ரேவதி பாலன் கூறுகையில், பேருந்தில் வெட்டப்பட்டு ஆபத்தான நிலையில் வந்த மாணவனுக்கு 12 இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. 5 பாட்டில் ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆக்ஸிஜன் உருளை பொருத்தி கண்காணிப்பில் உள்ளார் என்றார்.

News March 10, 2025

பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு

image

பாளை கிறிஸ்துராஜா பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவன் இன்று ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து பள்ளிக்கு பஸ்ஸில் வரும் போது முன்பகை காரணமாக மர்ம கும்பல் அறிவாளால் வெட்டி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த மாணவன் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 10, 2025

முன்னாள் ஊராட்சி தலைவர் விபத்தில் பலி

image

நெல்லை மாவட்டம், தளபதி சமுத்திரம் ஊராட்சியின் தலைவர் இருந்தவர் ராமசுப்பு. நேற்று(மார்ச்.9) இரவு நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்து மரணம் அடைந்தார். இது குறித்து ஏர்வாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மறைந்த முன்னாள் ஊராட்சி தலைவர் ராமசுப்பு உடலுக்கு அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

error: Content is protected !!