Tirunelveli

News March 6, 2025

நெல்லை கொலையில் குற்றவாளிக்கு மரண தண்டனை

image

பாளையங்கோட்டை பகுதியில் 2022 இல் வைகுண்டம் என்பவர் உள்ளாட்சி தேர்தல் முன்விரோதத்தால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு நெல்லை மாவட்ட நிதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் குற்றவாளி செல்வராஜ் என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தோணி ராஜ், ராஜன், லீலா, பாபு அலெக்சாண்டருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

News March 6, 2025

பெரியார் சந்திப்பு நிலையம் கழிப்பிடங்கள், வாகன நிறுத்தம் ஏலம் 

image

திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரியார் சந்திப்பு நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கழிப்பிட அறைகள், வாகன நிறுத்தங்கள் ஏலம் விடப்படுகிறது. மாநகராட்சி ஆணையாளர் (அ) அவரது அதிகாரம் பெற்ற மாநகராட்சி அலுவலர் தச்சநல்லூர் மண்டல அலுவலகத்தில் வைத்து 20ம் தேதி நடைபெறும். ஏலத்திற்கு அனைவரும் கலந்து கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையர் கேட்டுக்கொண்டார். *ஷேர் பண்ணுங்க

News March 6, 2025

திருநெல்வேலி தமிழ்நாடு ஹோட்டலுக்கு ஏலம் அறிவிப்பு

image

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் ஹோட்டல் தமிழ்நாடு திருநெல்வேலி கிளைக்கு கோழிக்கறி, முட்டை, காய்கறி உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்வதற்கும் வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்கும் ஏலம் விடப்படுகிறது. இதற்கான படிவத்தை கொக்கர குளத்தில் உள்ள ஓட்டல் தமிழ்நாடு மேலாளர் அலுவலகத்தில் பெற்று இன்று முதல் 21 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கிளை மேலாளர் இன்று தெரிவித்துள்ளார். *மறக்காம ஷேர் பண்ணுங்க 

News March 6, 2025

நெல்லையில் மார்ச்.11ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு 

image

நெல்லை மாவட்டத்தில் 4 தினங்கள் கோடை மழை அடித்து நொறுக்கியது. கடந்த 2 தினங்களாக வெயில் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்திய பெருங்கடல் பகுதியில் பூமத்திய ரேகை ஒட்டி புதிய காற்று சுழற்சி உருவாகிறது. வரும் 11ம் தேதியை ஒட்டிய நாட்களில் இலங்கை, குமரி கடலை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. இதனால் மாவட்டத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்தார். *ஷேர் பண்ணுங்க

News March 6, 2025

கடைசி நேரத்தில் ரயிலில் பயணிப்பவர்களுக்கு முக்கிய தகவல்

image

நெல்லை, கொல்லம், குருவாயூர் ரயிலில் நெல்லை, நாகர்கோவில் இடையே உள்ளிட்ட தென்னக ரயில்வேயின் 35 முக்கிய விரைவு ரயில்களில் டி ரிசர்வ் டிக்கெட் வசதி உள்ளது. இதன் மூலம் காலியாக செல்லும் படுக்கை பெட்டியில் பயணிக்க வசதி கிடைக்கிறது. இந்த வசதியை விரைவில் மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிக்கு விரிவுபடுத்த வாய்ப்பு உள்ளதாக தென்னக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. *எல்லோரும் தெரிந்து கொள்ள மறக்காம ஷேர் பண்ணுங்க*

News March 6, 2025

மது போதையில் நண்பனை கொலை செய்த நண்பன்

image

பணகுடி, சாத்தான்குளத்தை சேர்ந்த ராஜ்குமாரும்(30) இவரது நண்பர் சங்கரும்(24) நேற்று இரவு ஒன்றாக அமர்ந்து மது அருந்திய போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ராஜ்குமாரை சங்கர் தாக்கியுள்ளார். இதில் ராஜ்குமார் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சங்கரை கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை.

News March 5, 2025

நெல்லை: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விபரம்

image

நெல்லை மாவட்டத்தில் இன்று இரவு முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. துணை கண்காணிப்பாளர் சம்பத் மேற்பார்வையில் நெல்லை, நாங்குநேரி, வள்ளியூர், சேரன்மகாதேவி, அம்பை உட்கோட்ட பகுதிகளில் பணியாற்றும் காவல் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

News March 5, 2025

பாலம் வேலையால் பஸ் வசதியின்றி மாணவர்கள் அவதி

image

ஆனைக்குளத்தில் பாலம் பணிகள் நடைபெறுவதால் மாற்றுப்பாதை இல்லாமல் வைத்திலிங்கபுரம், தங்கையம், வில்வனம்புதூர் ஆகிய 3 ஊர்களுக்கு முற்றிலுமாக பஸ் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் வள்ளியூரில் இருந்து ஆனைகுளம் வரைக்கும் பஸ் இயக்கப்படுகிறது. அரசு பொது தேர்வு நடைபெறுவதால் பள்ளி மாணவ மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.ஆகவே உடனடியாக நடவடிக்கை எடுத்து வில்வனம்புதூர் வரைக்கும் பஸ் இயக்க கோரிக்கை

News March 5, 2025

தனியார் வேலைவாய்ப்பு முகாம் – ஆட்சியர் தகவல்

image

பாளையங்கோட்டை புனித யோவான் கல்லூரியில் வரும் 22.03.2025 அன்று காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் சுகுமார் இன்று தெரிவித்துள்ளார். முகாமில் 5-ஆம் வகுப்பு முதல் டிகிரி கல்வித்தகுதியுடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். 100க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு வேலைநாடுநர்களை தேர்வு செய்யவுள்ளனர். <>இந்த <<>> இணையதளத்தில் பதிவு செய்வது அவசியம்.SHARE IT

News March 5, 2025

பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அப்ரண்டிஸ் வேலை வாய்ப்பு – உடனே அப்ளை பண்ணுங்க

image

பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடாவில் அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 4000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழகத்தில் 223 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நெல்லைக்கு 6 பணியிடங்களும் உள்ளன. டிகிரி படித்திருந்தால் போதும். தேர்வு ஆன்லைனின் நடைபெறும். விண்ணபிக்க <>இங்கே <<>> க்ளிக் செய்யவும். 11.03.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். SHARE IT

error: Content is protected !!