Tirunelveli

News October 3, 2025

நெல்லை வந்தே பாரத் ரயில் இனி கோவில்பட்டியில் நிற்கும்

image

நெல்லை – சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது முதலில் எட்டு பெட்டியுடன் இயங்கிய நிலையில் பின்னர் 16 பெட்டிகளாகவும் தற்போது 20 பெட்டிகளாகவும் இணைக்கப்பட்டு இயங்குகிறது. கோவில்பட்டி பயணிகளின் கோரிக்கையை ஏற்று வந்தே பாரத் ரயில் பரிச்சாத்த முறையில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

News October 3, 2025

நெல்லையில் ஒரே இடத்தில் 12 சப்பரங்கள் அணிவகுப்பு

image

பாளையங்கோட்டையில் நடைபெறும் தசரா பண்டிகையின் மிக முக்கிய நிகழ்ச்சியான அம்மன் சப்பரங்கள் ஒரே இடத்தில் அணிவகுக்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. பாளையங்கோட்டை ராமசாமி கோயில் திடலில் அடுத்தடுத்து சப்பரங்கள் வந்து நின்றன. தொடர்ந்து அனைத்து சப்பரங்களுக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை நடைபெற்றன. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து சப்பரங்கள் வீதி உலா சென்றன.

News October 3, 2025

நெல்லையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

image

கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் விடுத்துள்ள செய்தி குறிப்பில்; கல்லிடைக்குறிச்சி கோட்டம், வீரவநல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை (4-10-25) காலை மணி 9 முதல் மாலை 5 வரை மற்றும் ஓ.துலுக்கப்பட்டி, அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, கடையம் துணைமின் நிலையங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும். *ஷேர் பண்ணுங்க

News October 3, 2025

நெல்லை: 2 ஆண்டுகளில் 200 கைதிகளுக்கு சிகிச்சை

image

சமூக ஆர்வலர் மகாராஜன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலின் படி கடந்த 2023 முதல் 25 ஆம் ஆண்டு வரை நெல்லை அரசு மருத்துவமனையில் 200க்கும் மேற்பட்ட சிறை கைதிகள் உள்நோயாளிகளாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தெரியவந்துள்ளது. 18 வயது முதல் 28 வயதுடைய கைதிகள் இதில் இடம் பெற்றுள்ளனர்.

News October 3, 2025

நெல்லை வழியாக செல்லும் ரயில்; நாளை மாற்று பாதை

image

நாகர்கோவில்-கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் (16321) நாளை நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு, நெல்லை, விருதுநகர் வழியாக திருச்சி, காரைக்குடி, மானாமதுரை மாற்றுப் பாதையில் இயக்கப்படும். இந்த ரயில் திருமங்கலம், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட நிலையங்களைத் தவிர்க்கும். அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டையில் தற்காலிக நிறுத்தம் உண்டு.

News October 3, 2025

நெல்லை: தசரா திருவிழா 100 பேருந்துகள் இயக்கம்

image

திருநெல்வேலியில் இருந்து குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழாவிற்காக 100 சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய இடங்களில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பக்தர்கள் நெரிசலின்றி பயணிக்க, போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

News October 3, 2025

நெல்லை: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <>க்ளிக்<<>> செய்து Grievance Redressal, நெல்லை மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க.. SHARE பண்ணுங்க..

News October 3, 2025

நெல்லை: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

image

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். Share பண்ணுங்க..

News October 3, 2025

நெல்லை போலீசார் அதிரடி – 105 பேர் கைது

image

நெல்லை போலீஸ் சுப்பிரண்டு சிலம்பரசன் தெரிவித்துள்ளாதவது: சாதி சார்ந்த பிரச்னைகளை கட்டுப்படுத்த போலீசார் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். சமூக ஊடகங்களில் சாதிய உணர்வுகளை தூண்டி சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கிறது. ஆபத்தான ஆயுதங்களை காட்டும் பதிவுகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கபட்டு 108 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 105 பேர் கைது செய்யபட்டுள்ளனர் என்று குறிப்பிட்டு இருந்தார்.

News October 3, 2025

நெல்லையில் வெயில் 100

image

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று நெல்லை பாளையங்கோட்டையில் நேற்று 103.1 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது. தமிழகத்தில் நேற்று பாளையங்கோட்டையில்தான் அதிகபட்ச வெயில் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நெல்லை மக்களே இனி எங்க போனாலும் குடையை மறக்காதீங்க. இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

error: Content is protected !!