India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை, அம்பாசமுத்திரம் வட்டம் மணிமுத்தாறு அருகே செட்டிமேடு பகுதியை சேர்ந்த விவசாயி மிக்கேல் என்பவரது மகன் ஆரோக்கியம் நேற்று இரவு இந்திரா காலணியில் இருந்து வீட்டிற்கு வரும்போது மலையடிவாரப் பகுதியிலிருந்து குடியிருப்பு பகுதியில் புகுந்த கரடி தாக்கியதில் ஆரோக்கியம் காயம் அடைந்தார். கரடியை பிடிக்க வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நெல்லையில் ஒரு வாரம் முன்பு வரை சின்ன வெங்காயம் கிலோ 20 ரூபாய்க்கு தரமான வெங்காயம் மற்றும் பல்லாரி கிடைத்தது. கடந்த வாரம் சில இடங்களில் ரூ.100க்கு 5 கிலோ பல்லாரி, சின்ன வெங்காயம் என கூவி அழைத்து விற்றனர். தீபாவளி நெருங்கும் நிலையில் தற்போது முதல் ரக சின்ன வெங்காயம் இன்று ரூ.60 முதல் 70 ரூபாயை கடந்து விட்டது. அதே நேரம் தரம் குறைந்த சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.25 விலையில் விற்கப்படுகிறது.

நெல்லை மக்களே, உங்க ஆண்டு வருமானம் 10 லட்சம் கீழ் இருந்தும் கேஸ் மானியம் வரலையா? எப்படி விண்ணபிக்கன்னும் தெரியலையா? முதலில் Aadhaar எண்ணை உங்கள் பேங்க் கணக்கு மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். இங்கு <

நெல்லை, தச்சநல்லூர் மண்டல பகுதியில் உள்ள ஒரு தனியார் மைதானத்தில் கடந்த வாரம் பெங்களூரை சேர்ந்த நிறுவனம் ஹெலிகாப்டர் ரைட் நடத்தியது. தினமும் 30 முறை 4 பயணிகள் வீதம் அனைத்து செல்லப்பட்டனர். ஒரு பயணிக்கு 6 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஹெலிகாப்டர் ரைடுக்காக அந்த நிறுவனம் ஆறு நாட்கள் ரெய்டு முடிந்ததும் மாநகராட்சிக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு வரி செலுத்தியதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

நெல்லை மக்களே RTE 2025 – 2026 இன்று முதல் தொடங்க உள்ளதாக பள்ளிக்கல்வி துறை அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. LKG முதல் 8ம் வகுப்பு வரை உங்க குழந்தைகள் தனியார் பள்ளியில் கல்வி கட்டணம் இல்லாமல் படிக்கலாம். விண்ணப்பிக்க இங்கு <

நெல்லை மாவட்ட மின் விநியோகம் பகிர்மான வட்ட சார்பில் இன்று அக்டோபர் ஐந்து விடுத்துள்ள செய்தி குறிப்பு: மழைக்காலம் தொடங்க உள்ளதால் மின்சாதனங்களை கையாள்வதில் உரிய முன்னெச்சரிக்கையுடன் பொதுமக்கள் நடந்து கொள்ள வேண்டும் மழை நேரத்தில் டிரான்ஸ்பார்மர் மற்றும் மின் கம்பங்கள் போன்ற இடங்களில் அருகே குழந்தைகளை விளையாட பெற்றோர் அனுமதிக்ககூடாது. கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர்!

பாளை மார்க்கெட் அருகில் மதர் ஹாஸ்பிடல் சமீபம் உணவு பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கி வரும் உணவு பாதுகாப்பு துறை ஆய்வக கட்டடத்தில் நவீன பகுப்பாய்வு உணவு பரிசோதனை இயந்திரங்களை (அக்.06) காலை 11 மணி அளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார். தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சியில் கலெக்டர் சுகுமார், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை, டவுன், தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [அக்.5] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் நிக்சன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

திருநெல்வேலி மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் MTS, Security, OT Assistant என மொத்தமாக 44 காலி பணியிடங்கள் உள்ளன. 10th, 8th, B.Com, BE/B.Tech, BNYS, Diploma, ITI, M.Sc, MA, MSW படித்த தகுதியான நபர்களுக்கு ரூ.6,000 முதல் ரூ.40,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில்<

பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் 1101 பயிற்சி காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வயது: 18 வயது பூர்த்தி
2. சம்பளம்: ரூ.10,000 – ரூ15,000
3. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு மற்றும் ITI
4. கடைசி தேதி: 21.10.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
6. பயிற்சி முடித்த பின் முன்னணி நிறுவனங்களில் பணிபுரியவும், கை நிறைய சம்பாதிக்கவும் வாய்ப்பு கிடைக்கும்.. ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.