India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ இன்று நெல்லைக்கு வருகை தந்தார். வண்ணார்பேட்டையில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு வருகை தந்த நயினார் நாகேந்திரனுக்கு, பாஜகவை சேர்ந்த மகளிர் அணியினர் மலர்தூவி வரவேற்றனர். பாஜக மாவட்ட தலைவர் முத்து பலவேசம் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் மாநில அணி பிரிவு நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘9498794987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம், தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!
பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று விடுத்துள்ள பதிவு: தேர்தல் வெற்றி என்பது தேர்த் திருவிழா போல, ஊர் கூடி இழுக்க வேண்டிய உற்சாகத் திருவிழா. அனைவரின் ஒத்துழைப்புடன் வெற்றிக்கான தடம் பதிக்க, வடம் பிடிக்க நான் ரெடி. என் மீது நம்பிக்கை வைத்த மத்திய மாநிலத் தலைவர்களுக்கும், பேராதரவு நல்கி பெருமகிழ்ச்சி வெளிப்படுத்திய கட்சியின் நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் என் நன்றி அறிதலை தெரிவிக்கிறேன்.
தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மாலை 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று IMD தெரிவித்துள்ளது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவ வாய்ப்புள்ளது. SHARE பண்ணுங்க.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியேற்பு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய தமிழிசை சௌந்தரராஜன் நெல்லை எப்போதுமே தொல்லை தான் என்று கலைஞர் அன்று ஒரு அரசியல் நிகழ்வில் கூறினார். இன்று நெல்லையிலிருந்து திமுகவிற்கு தொல்லை புறப்பட்டு வந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும் என்று பேசியுள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில வாரமாக தொடர்ச்சியாக கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டத்தில் பதிவான மழை அளவு வெளியிடப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சம் சேர்வலாறு அணை பகுதியில் 5 மி.மீட்டர் மலையும் பாபநாசம் மற்றும் கன்னடியன் கால்வாய் பகுதியில் இரண்டு மி.மீ. மழையும் பதிவாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பாஜக மாநிலத் தலைவராக நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நயினார் நாகேந்திரன் நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள தண்டையார்குளத்தை சேர்ந்தவர், இவர் 1989-ல் அதிமுகவில் சேர்ந்து பணகுடி நகர செயலாளரானார். 2001ல் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை, தொழில் துறை அமைச்சராக பணியாற்றினார். 2017-ல் பாஜகவில் இணைந்தார். தற்போது நெல்லை எம்எல்ஏவாக உள்ளார்.
மாநில அளவில் தேசிய வருவாய் வழி திறனறிவு தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது. சுமார் 2 லட்சத்து 65 ஆயிரம் பேர் எழுதி, இந்த தேர்வில் மாநில அளவில் 6595பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 508 பேர் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடம் சாதனை பிடித்துள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, பிளஸ் 2 பயிலும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
மானூர் அருகே சங்குப்பட்டியைச் சேர்ந்த வேல்முருகன் அங்குள்ள பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகிறார். படித்து முடித்த கல்வி சான்றிதழ் பெறுவதற்காக தனது தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். ஒரு வாரம் கழித்து தருவதாக தெரிவித்துள்ளார். சக நண்பர்கள் சான்றிதழ்கள் வாங்கி விட்டதால் மனமுடைந்த வேல்முருகன் விஷம் குடித்தார். பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பாஜக தலைவர் பொறுப்புக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனு அளித்த நிலையில் இவருக்கு மட்டுமே விருப்ப மனு தாக்கல் செய்ய கட்சி தலைமை அனுமதி வழங்கியது. இதன் மூலம் தமிழ்நாடு பாஜகவின் 13வது தலைவரானார் நயினார் நாகேந்திரன். அதற்கான சான்றிதழை கட்சி அவருக்கு வழங்கியது.
Sorry, no posts matched your criteria.