India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்டத்தில் உள்ள உதவி காவல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் எஸ்பி சிலம்பரசன் தலைமையில் நேற்று(அக்.,7) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் போதைப்பொருட்கள் கடத்தல் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே உள்ள தெற்கு விளாசம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன்(56) நேற்று முன்தினம் இரவு முப்புடாதியம்மன் கோயிலுக்கு வழிபட சென்றுள்ளார். அப்போது வேறொரு பிரிவை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து பாலகிருஷ்ணனை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லட்சுமணன், அவரது மகன் ஹரி(19) & 17 வயது சிறுவன் 3 பேரை கைதாகியுள்ளனர்.
நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று (அக்.7) நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளினர்கள், அரசு வழக்கறிஞர்கள், பணியாளர்கள் மற்றும் முதல்வர் கோப்பையில் பதக்கம் வென்ற 90 பேரை எஸ்.பி சிலம்பரசன் நேரில் அழைத்து நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் காவல் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார். இதற்காக துறைவாரியாக அமைக்கப்பட்ட கவுண்டர்களில் பொதுமக்கள் மனுக்கள் பதிவு செய்யப்பட்டன. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு வழங்க ஏதுவாக சிறப்பு கடன் தர மதிப்பீட்டு முகாம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 8ஆம் தேதி நடைபெற உள்ளது. முற்பகல் 10 மணி முதல் 1 மணி வரை அம்பை பகுதியில் உள்ளவர்களுக்கும், 2 மணி முதல் 5 மணி வரை பாப்பாக்குடி பகுதியினருக்கும் நடைபெறும். தொடர்ந்து 9, 10, 16, 17ஆம் தேதிகளிலும் நடைபெறுவதாக நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நாளை (அக்.8) காலை 11 மணிக்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட அவைத் தலைவர் ம.கிரகாம்பெல் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள், மாநில அணி நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் தவறாமல் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்குமாறு மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கிருஷ்ணகுமார் விடுத்துள்ள செய்திக் குறிப்பில்; நெல்லை மாவட்டத்திற்கு பிசான பருவ சாகுபடிக்கு தேவையான ரசாயன உரங்கள் போதுமான அளவு இன்று (அக்.7) ரயிலில் வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. கங்கைகொண்டான் ரயில் நிலையத்திலிருந்து கூட்டுறவு சங்கங்களுக்கு சாலை மார்க்கமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தேவையான உரங்களை பெறலாம் என தெரிவித்துள்ளார்.
நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று(அக்.,7) கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கவும், போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்த்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் அவ்வப்போது மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் வெளியில் செல்வோர் முன்னெசரிக்கையாக குடையுடன் செல்வது நல்லது.
பள்ளிக் கல்வித்துறை சார்பில் நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் நாளை மாணவர்களுக்கு நாடகப் போட்டி விழா நடைபெறுகிறது. அறிவியல் தொடர்பான தலைப்பில் நடைபெறும் இந்த போட்டியில் மாவட்டங்களில் நடந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மாநிலப் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவதற்காக பங்கேற்பர். இதில் அகில இந்திய மண்டல போட்டிக்கு 2 அணிகள் தேர்வு செய்யப்படும்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று(அக்.,7) நெல்லை மாவட்டம் தருவை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தை பார்வையிடுகிறார். இதற்காக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து சுமார் 384 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அவர் சாலை மார்க்கமாக தூத்துக்குடி விமான நிலையம் செல்கிறார்.
Sorry, no posts matched your criteria.