India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லையில் மதுரை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை ரெட்டியார்பட்டி அருகே மீண்டும் மருத்துவ கழிவு கொட்டப்பட்டுள்ளது. காலாவதியான மாத்திரைகள், டானிக்கள் அதிகளவு கொட்டப்பட்டுள்ளது. அதை தீ வைத்து எரிக்கவும் முயற்சி செய்யப்பட்ட நிலையில் பாதி எரிந்த நிலையில் உள்ளது. மருத்துவக் கழிவுகளை கொட்டியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் கழிவுகளை உடனே அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

நெல்லை மாவட்டம் முக்கூடல், சுத்தமல்லி பகுதியில் கேரளா மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மதுரை- குமரி நான்கு வழிச்சாலை ரெட்டியார்பட்டியில் மீண்டும் காலாவதியான மாத்திரை, டானிக், ஆயின்மென்ட் உள்ளிட்ட மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை கொட்டிய நபர்கள் அதனை தீ வைத்து எரித்து அழிக்கவும் முயற்சி செய்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலைத் தீர்ப்பதற்காக தாழையூத்தில் தொடங்கி கொங்கந்தான் பாறை வரை மேற்கு புறவழிச் சாலை அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டப் பணிக்காக நிலங்கள் ஆர்ஜீதம் செய்யும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இதன் முதற்கட்ட பணிகளை தமிழக முதலமைச்சர் நெல்லையில் நடைபெறும் விழாவில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். 180 கோடியில் மேற்கு புறவழிச்சாலை அமைய உள்ளது.

பிரபல எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் இன்று (பிப்-5) சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், 3 ஆண்டுகளாக நெல்லை புத்தகக் கண்காட்சியை ஒரு ‘மாடல்’ புத்தகக் கண்காட்சியாக நடத்திய மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அந்த பொறுப்பில் இருந்து விடைபெறுகிறார். அவருடைய தமிழ்ப்பணியை நெல்லை மக்கள் என்றும் நினைப்பார்கள் என தெரிவித்துள்ளார். ஆட்சியர் கார்த்திகேயன் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வரும் 6, 7 ஆகிய தினங்களில் நெல்லை வருகிறார், கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்திற்கு வருகை தருகிறார். அவர் வருகையை முன்னிட்டு கங்கைகொண்டான் பகுதியில் வரும் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை மூன்று நாட்கள் கங்கைகொண்டான் மற்றும் தாழையூத்து அதன் சுற்றுவட்டார பகுதியில் ட்ரோன்கள் பறக்க தடை. விதிக்கப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் நேற்று ( பிப்.4 ) தெரிவித்துள்ளார்.

பழவூர் அருகே வேப்பிலாங்குளம் பஞ்சாயத்து செயலராக இருந்த சங்கர் நேற்று படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு குறித்து இன்று போலீஸ் தரப்பில் கூறுகையில், தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூடிய விரைவில் நடவடிக்கை இருக்கும் என்றும் தெரிவித்தனர். மேலும் கொலையாளிகள் குறித்து இரண்டு மூன்று தடயங்கள் கிடைத்திருப்பதாகவும் அதன் அடிப்படையில் விசாரணை வேகப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறினார்கள்.

திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் இன்று(பிப்-5) பகல் 11 மணிக்கு மிக முக்கிய நிகழ்ச்சியான “திருநெல்வேலி” பெயர் வர காரணமான நெல்லுக்கு வேலியிட்ட வைபவம் நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்திகளுடன் சுனாமி அம்பாள் ரத வீதி உலா நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் ஐயர் சிவமணி செய்துள்ளார்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திருநெல்வேலி வருகையை முன்னிட்டு திருநெல்வேலி மாநகரம் முழுவதும் நாளை புதன்கிழமை 5ஆம் தேதி காலை 6:00 மணியிலிருந்து ஏழாம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணி வரை ட்ரோன்கள் பறக்க தடைவிதித்து திருநெல்வேலி மாநகர காவல் துறை கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அவர் விரிவான செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.

திருப்பரங்குன்றம் கந்தர் மலை (சிக்கந்தர் மலை) விவகாரத்தில் மதுரையில் BJPசார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த மதுரை ஐகோர்ட் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், நெல்லை வடக்கு மாவட்ட பாஜக சார்பில் திமுக அரசை கண்டித்து வண்ணார்பேட்டையில் இன்று மாலை நடத்தப்பட இருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட தலைவர் முத்து தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்திற்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு மலையை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தாமிரபரணியில் இருந்து புனித நீர் எடுத்துச் செல்வதற்கு முயற்சித்த இந்து மக்கள் கட்சி மாநில துணை தலைவர் உடையார் இன்று பிப் (4)வண்ணாரப்பேட்டை அவரது இல்லத்தில் வைத்து போலீசார் அவரை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.