India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பள்ளி கல்லூரி மாணவர்கள் பணியில் நின்று ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து காவல்துறை தரப்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டும் தொடர்ச்சியாக உள்ளது. இன்று முனஞ்சிப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் கல்லூரி மாணவர் ஒருவர் படியில் நின்று ஆபத்தான பயணம் மேற்கொண்டார். நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நெல்லை அஞ்சலக முதுநிலைக்கோட்ட கண்காணிப்பாளர் முருகன் நேற்று வெளியிட்டுள்ள செய்தி பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம் மார்ச் 24 அன்று நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், திருநெல்வேலி கோட்டத்திற்குட்பட்ட திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் பகுதி வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை நிவர்த்தி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை வழியாக நலகொண்டா, குண்டூர், திருத்தணி, காட்பாடி, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சாவூர், விருதுநகர் வழியாக கோடைகால சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சார்லப்பள்ளி – கன்னியாகுமரிக்கு புதன்கிழமையும், கன்னியாகுமரி – சாரலப்பள்ளிக்கு வெள்ளிக்கிழமையும் ஏப்ரல் மாதம் முதல் வாரம் முதல் ஜூன் மாதம் இறுதி வரை இயக்க ரயில்வே நிர்வாகம் நேற்று பரிந்துரைத்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [மார்ச்.19] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். வள்ளியூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஷ், இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.

நெல்லையில் நடந்த முன்னாள் காவல் அதிகாரி கொலை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி முகமது டௌபிக் (எ) கிருஷ்ணமூர்த்தியை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடந்தது. நெல்லை ரெட்டியார்பட்டி பகுதியில் பதுங்கி இருந்த குற்றவாளியை சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது, தலைமை காவலர் ஆனந்தை அரிவாளால் தாக்க முற்பட்ட போது கொலை குற்றவாளி முகமது தவுபிக் (எ ) கிருஷ்ணமூர்த்தியை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்தனர்.

நெல்லையில் நேற்று முன்னாள் காவலர் ஜாகிர் உசேன் பிஜிலி வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து இன்று அவரது உறவினர்கள் ஆணையாளருடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் சம்பந்தம் ஏற்பட்டு உடலை பெற்று கொள்ள சம்மதம் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் நடவடிக்கை மேற்கொள்ளாத டவுன் காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் தற்காலிக பணியிட நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நெல்லையில் நேற்று அதிகாலை ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜாகிர் உசேன் கொலை செய்யப்படார். இதற்கு இபிஎஸ் பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த நிலையில் இதில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது என்றும், பாரபட்சமின்றி விசாரனை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் 1.1.2020 முதல் 31.12.24 வரை திருநெல்வேலி புறநகரில் 211, திருநெல்வேலி மாநகரில் 74 கொலைகளும் பதிவாகியுள்ளது. இந்த கொலை சம்பவங்களில் தொடர்புடையவர்களில் 60 இளம் சிறார்கள்,1045 பேர் கைது செய்யப்பட்டு 392 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் உள்ளனர் என ஆர்டிஐயில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதில் ஜாதி ரீதியான கொலைகளே அதிகம் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நெல்லையில் நேற்று அதிகாலை ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜாகிர் உசேன் கொலை செய்யப்படார். ஜாகிர் உசேன் தனக்கு கொலை அச்சுறுத்தல் இருக்கும் என கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் உரிய நடவடிக்கை எடுக்காத காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இபிஎஸ் பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சுந்தர பரிபூரண பெருமாள் திருக்கோவில் பழுது பார்த்தல், சீரமைத்தல் பணிக்கு ஏப்.15 அன்று ஏலம் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. மார்ச்.27 முதல் மர்ச்.14 வரை https://tntenders.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கோவில் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
Sorry, no posts matched your criteria.