India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை மக்களே, நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் உங்க பண பரிவர்த்தனை சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதா? கீழே உள்ளே எண்கள் மூலமா Whatsapp-ல் உங்க வங்கி பரிவர்த்தனைகளை தொடருங்க..
1. SBI : 90226 90226
2. Canara Bank : 90760 30001
3. Indian Bank : 87544 24242
4. IOB : 96777 11234
5. HDFC : 70700 22222. மற்றவர்கள் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

கீழப்பாட்டம் கிருபா நகர் பகுதி பொதுமக்கள் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு திரண்டு வருகை தந்து மாவட்ட கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் நாங்கள் வசிக்கும் பகுதியில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவம் நடைபெற்று வருகிறது. உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையும் உள்ளது. எனவே எங்கள் பகுதிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என தெரிவித்தனர்.

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <

நெல்லை மக்களே, போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். ( நல்ல தகவலை SHARE பண்ணுங்க)

பாளையங்கோட்டை அருகே கிருபாநகரை சேர்ந்த மனோரஞ்சிதம் என்பவர் வீட்டில் பீரோவில் இருந்த ரூ.70,000 ரொக்கத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. அதே போல் பக்கத்து வீட்டை சேர்ந்த கல்லூரி உதவி பேராசிரியர் வீட்டில் ரூ.7000, மற்றொருவர் வீட்டில் ரூ.15000, 6 கிராம் தங்க நகைகளை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் அப்பகுதியில் 3 வீடுகளில் மர்ம நபர்கள் திருட முயன்றதும் தெரியவந்துள்ளது.

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (ஜன.26) இரவு ரோந்து பணிகளில் செந்தாமரை ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் சுரேஷ் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

நெல்லை மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்: 1.தீயணைப்புத் துறை – 101 2.ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 3.போக்குவரத்து காவலர் -103 4.பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 5.ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 5.சாலை விபத்து அவசர சேவை – 1073 6.பேரிடர் கால உதவி – 1077 7.குழந்தைகள் பாதுகாப்பு – 1098 8.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 9.மின்சாரத்துறை – 1912. எல்லோரும் தெரிந்துகொள்ள உடனே SHARE பண்ணுங்க

நாங்குநேரி AMRL துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நாங்குநேரி, இராஜாக்கள் மங்கலம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி, ஆச்சியூர், வாகைகுளம், கோவனேரி, AMRL தொழிற்கூடம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன் அரசு தெரிவித்துள்ளார்.

நெல்லை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 Development Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு க்ளிக் செய்து பிப். 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ,32,000 வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE IT.

நெல்லை மக்களே, சீனி அட்டையில் இருந்து அரிசி அட்டைக்கு சுலபமாக மாற்றலாம்.
1 இங்கு <
2. அட்டை வகை மாற்றம் சேவையை தேர்ந்தெடுங்க
3. அரிசி ரேஷன் அட்டையை தேர்ந்தெடுங்க
4. சுயவிவரங்களை பதிவு செய்யுங்க 30 நாட்களில் மாறிவிடும்.
விண்ணப்ப நிலையை 78452 52525 இந்த எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் HI அனுப்பி தெரிஞ்சுக்கலாம். இந்த பயனுள்ள தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணுங்க..
Sorry, no posts matched your criteria.