India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லையை சேர்ந்தவர் பெரியசாமி (46). இவர் திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்தார். நேற்று மாலை அப்பகுதியில் உள்ள கோயிலுக்கு டூவீலரில் சென்று விட்டு திரும்பி வந்துள்ளார். ராமதாஸ்புரம் பகுதியில் வந்த போது பின்னல் வந்த கண்டெய்னர் லாரி மோதி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். ஆவடி போலிசார் உடலை மீட்டு திருவள்ளூர் GH-க்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின்படி இன்று ஜன. 28 ஆம் தேதி திங்கள் கிழமை இரவு முதல் நாளை காலை 6 மணி வரை நெல்லை மாநகரப் பகுதியில் போலீஸ் சரகம் வாரியாக காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் விபரத்தை மாநகர காவல் துறை இன்று இரவு வெளியிட்டுள்ளது. அவரது கைபேசி எண் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் உதவிக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம்.

நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் பொருநை புத்தகத்தில் உள்ள பிரம்மாண்டமாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா விரைவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் இன்று ஜனவரி 28 மாவட்ட கலெக்டர் சுகுமார் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அரசு துறை அலுவலர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நெல்லை மக்களே, ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இங்கு <

நெல்லை மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

கூடன்குளத்தை சார்ந்த வீராங்கனை பார்கவி மாநிலங்களுக்கு இடையே நடைபெற்ற பூப்பந்தாட்ட போட்டியில் தமிழக அணிக்காக விளையாடி தேசிய அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். ஏற்கனவே மாணவி மாவட்ட மற்றும் மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்தார். இந்நிலையில் தமிழக அணிக்காக விளையாடி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். நெல்லைக்கு பெருமை சேர்த்த மாணவியை நீங்களும் வாழ்த்தலாமே…

யூகோ வங்கியில் (UCO Bank) காலியாக உள்ள Generalist and Specialist Officers பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 173
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.48,480 – 93,960/-
5. கல்வி தகுதி: B.E/B.Tech, MBA, CA, M.Sc, MCA
6. கடைசி தேதி: 02.02.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!

நெல்லை மாவட்டம் விகே புரம் வடக்கு கார் தெருவை சேர்ந்தவர் பரமசிவன் இவர் மகன் பேச்சி சொர்ணராஜ். இவர் தனது நண்பர் கார்த்திக் என்பவருடன் நேற்று விக்கிரமசிங்கபுரத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லோடு ஆட்டோ மோதி இருவரும் படுகாயமடைந்தனர். இருவரையும் மீட்டு பாளை அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் பேச்சி சொர்ணாராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நெல்லை மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைய விரும்புவோர் குடும்ப அட்டை, ஆதார் மற்றும் வருமானச் சான்றிதழுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மையத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு 1800 425 3993 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.