India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லையில் கடந்த வாரம் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் காவலர் ஜாகிர் உசேன் பிஜிலி வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது மகன் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்துள்ளார். மனுவை விசாரித்த நீதிபதிகள் விசாரணை நிலையை அறிக்கையாக தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு 8 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நெல்லை டவுனில் முன்னாள் எஸ்ஐ ஜாகீர் உசேன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. இது தொடர்பாக நெல்லை கலெக்டர், தமிழ்நாடு டிஜிபிக்கு விளக்கம் கேட்டு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் 4 வாரங்களுக்குள் முழு அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

திசையன்விளையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள பேரூராட்சிக்கு சொந்தமான 6 கடைகளை பகிரங்க ஏலம் விடாமல் அதிமுக திசையன்விளை பேரூராட்சி செயலாளரும், பேரூராட்சி துணைத் தலைவருமான ஜெயக்குமார், திமுக நகர செயலாளர் சேர்ந்து ஏலம் எடுத்துக் கொண்டனர். இதனால் மக்களிடத்தில் பதில் சொல்ல முடியாமல் கிளைச் செயலாளர்கள் 6 பேர் நேற்று ராஜினாமா செய்து எடப்பாடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன் இன்று காலை உடல் நலக்குறைவு காரணமாக திருநெல்வேலியில் உயிரிழந்தார். இவர் தற்போது அதிமுக அமைப்புச் செயலாளராக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவிற்கு அதிமுக நிர்வாகிகள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது மறைவு நெல்லை அரசியல் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

களக்காடு அருகே உள்ள கீழக்கள்ளிகுளம் யாதவர் குடியிருப்பை சேர்ந்த விவசாயி கானியாளன் (40) கள்ளிகுளம் கிராம பஞ்சாயத்து ஏழாவது வார்டு உறுப்பினராக உள்ளார். இவருக்கு தொடர்ந்து ஏற்பட்ட கடன் சுமை காரணமாக மார்ச்.22 அன்று விஷம் குடித்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படும் நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் நேற்று வழக்குப்பதிந்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் நாளை முதல் மெயில் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்துள்ளார். மேலும் மறு நாட்களில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வெப்ப பதிவு 100 டிகிரியை தாண்டும். இது இம்மாத இறுதிவரை நீடிக்கும் ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கு பின்னர் வெப்பத்தாக்கம் படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.

நெல்லை உட்பட 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் ஏற்பட்டுள்ள 315 காலிப் பதவியிடங்களுக்கும் தற்செயல்/இடைக்காலத் தேர்தல்களை எதிர்வரும் மே மாதத்தில் நடத்துவதற்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ளது. மாவட்ட அளவில் மேற்படி தேர்தல் முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்க தொடர்புடைய அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். *ஷேர்

திருநெல்வேலி மாநகர பகுதியில் மாநகர காவல் துறை சார்பில் தடை உத்தரவு 15 தினங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது நேற்று 24 ஆம் தேதி முதல் வருகிற 7ம் தேதி வரை அமலில் இருக்கும். இந்த உத்தரவின் படி பொது இடங்களில் முன் அனுமதியின்றி கூடுவது, பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டம், தர்ணா நடத்த அனுமதி கிடையாது என மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் அறிவித்துள்ளார்.

நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவராக மூர்த்தி பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தமிழக அரசு ஐபிஎஸ் அதிகாரிகள் சிலரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி நெல்லை காவல் சரக காவல்துறை துணை தலைவர் மூர்த்தி ராமநாதபுரம் சரகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். எனவே மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி கூடுதலாக கவனிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் செயல் அலுவலராக முருகன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கோவில் பகுதியில் முறையாக பராமரிப்பு மேற்கொள்ளவில்லை, வரவு, செலவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்தது. இந்நிலையில் இந்து அறநிலையத்துறை அதிகாரி பிரியதர்ஷினி இன்று அவரை பணியிட நீக்கம் செய்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.