India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வரலாற்று சிறப்புமிக்க திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 13-ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நாளை(டிச.,12) மாலை 6.30 மணிக்கு மேல் சுவாமி சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட உள்ளது. சொக்கப்பனை ஏற்றுவதற்காக 23 அடி உயர பிரம்மாண்ட பனை மரத்தில் பனை ஓலைகள் சொருகி சொக்கப்பனை அமைக்கும் பணி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகின்றனர்.
#நெல்லையில் இன்று(டிச.,11) காலை 10 மணிக்கு காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.#காலை 7.30 மணிக்கு பாரதியார் சிலைக்கு உலக பொது சேவை நிதியம் சார்பில் மாலை அணிவிக்கப்படுகிறது.#காலை 10 மணிக்கு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
நெல்லை, டோனாவூரை சேர்ந்த அந்தோணி தாஸ்(44) தலையில் காயத்துடன் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வந்தனர். இதில், அவரது மனைவி சுபா(41), மகன்கள் எபனேசர், ஜெனிபர், மகள் சோபனா பிரியங்கா ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் தினமும் குடித்துவிட்டு தகராறு செய்ததாகவும், சம்பவத்தன்று அவதூறாக பேசியதால் கழுத்தை நெரித்தபோது இறந்து விட்டதாகவும் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியளிக்கிறது.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்திரவின்படி நெல்லை மாவட்ட காவல் சரக பகுதிகளில் இன்று (டிச.10) இரவு முதல் நாளை காலை வரை காவல் பணியில் உள்ள காவல் அதிகாரிகள் விபரம் அறிவிக்கப்பட்டது. அதன்படி இரவு நேர காவல் சேவை தேவைப்படும் பொதுமக்கள் இதில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
நெல்லை மாவட்டத்தில் செயல்படும் அரசு சேவை இல்ல மேல்நிலைப்பள்ளி இளநிலை இல்லக்காப்பாளர் பணியிடத்திற்கு ரூ.18,000 – ரூ.56,900 ஊதியத்தில் நேர்முக தேர்வில் அடிப்படையில் ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதில் அரசு சேவை இல்ல மேல்நிலைப்பள்ளியில் தங்கி பயின்ற பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆர்வமுள்ளவர்கள் பாளையங்கோட்டை அரசு சேவை இல்ல மேல்நிலைப்பள்ளியில் நேரடியாக அல்லது அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
களக்காடு அருகே திருக்குறுங்குடி கீழூரை சேர்ந்த விவசாயி ஆனந்தராஜுக்கும் லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்த நடராஜன் மற்றும் அவரது மகனுக்கும் இடையே ஏற்பட்ட முன் பகை காரணமாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் நடராஜனும் அவரது மகனும் சேர்ந்து ஆனந்தராஜை அரிவாளை கொண்டு நேற்று தாக்கினர்.இது குறித்து ஆனந்தராஜ் களக்காடு போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நொச்சிகுளத்தைச் சேர்ந்தவர் ஸ்டீபன்(21), இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த வழக்கில் நீதிபதி சுபத்ரா தேவி ஸ்டீபனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.6,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதியின் உடல் நிலை நன்றாக உள்ளது. யானை குறித்து சமூக வலைதளத்தில் தவறான தகவல் பரப்பப்படுகிறது. யானைக்கு 10 நாட்கள் நடைபயிற்சி அளிக்க வேண்டாம் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். மேலும் காந்திமதிக்கு ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. யானை உணவு எடுத்துக் கொள்ளும் நிலையில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு கடற்கரை ரயில்வேயில் கருடா கோட்டத்தில் இம்மாதம் இன்டர் லாக்கிங் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதால் அந்த வழியாக செல்லும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், தென் மாவட்டத்தை பொருத்தவரையில் வரும் டிச.14ஆம் தேதியன்று கன்னியாகுமரியில் இருந்து ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக இன்று(டிச.10) ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி உருவாகும் பகுதியான அகஸ்தியர் அருவி பகுதியில் கழிவு நீர் கலப்பதால் தாமிரபரணி தண்ணீர் குடிநீருக்கு உகந்ததல்ல என்பது அதிர்ச்சி அளிப்பதாக நேற்று(டிச.10) மதுரை உயர் நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது .தொடர்ந்து இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.