India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை மது போதையில் பேருந்து இயக்கிய ஓட்டுனர் எதிரே வந்த பள்ளி ஆட்டோ மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் பலத்தை காயமடைந்த 10-ம் வகுப்பு மாணவி செல்வ பாலா என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை மது போதையில் பேருந்து இயக்கிய ஓட்டுனர் எதிரே வந்த பள்ளி ஆட்டோ மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் பலத்தை காயமடைந்த 10-ம் வகுப்பு மாணவி செல்வ பாலா என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (0462-2580908) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க

நெல்லையில் வட்டாட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பாளை தாசில்தார் இசைவாணி சேரன்மகாதேவி கோட்ட கலால் அலுவலராகவும், சேரன்மகாதேவி கோட்ட கலால் அலுவலர் இசக்கி பாண்டி பாளை தாசில்தாராகவும், நெல்லை உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஆவுடையப்பன் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டனர். கலெக்டர் சுகுமார் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsAppல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனத்தில் காலியாக உள்ள 608 Graduate Apprentice Trainees பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18-25 வயதுடைய B.E முடித்தவர்கள் மார்ச் 2ம் தேதிக்குள் இங்கு <

நெல்லை மாவட்டம், கருப்பன்துறை பகுதியில் வசிக்கும் பிரான்சிஸ் ஜவர்கலால் என்பவரது மகளுக்கு வைணவப் பெருமாள் (23) என்பவர் அலைபேசியில் தொடர்பு கொண்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இதனை தட்டி கேட்ட பிரான்சிஸ் ஜவர்கலால் மற்றும் அவரது மனைவியை பெருமாள் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பிரான்சிஸ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வைணவபெருமாளை நேற்று போலீசார் கைது செய்து விசாரணை.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று வருகை தர உள்ளார். இந்நிலையில் முதல்வரின் வருகையை முன்னிட்டு இன்று காலை 6 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை நெல்லை மாநகர காவல் எல்லைப் பகுதியில் ட்ரோன்கள் மற்றும் இதர வான்வழி வாகனங்கள் பறக்க தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பூவண்ணன் விடுத்துள்ள செய்தி குறிப்பில், 13 துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் பல திட்டங்களின் பயன்களைப் பெற விவசாயிகளுக்கு அடையாள எண் அவசியம். இதற்காக சிறப்பு முகாம் நேற்று முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது. எனவே விவசாயிகள் அருகில் உள்ள இ- சேவை அல்லது வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பூவண்ணன் விடுத்துள்ள செய்தி குறிப்பில், 13 துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் பல திட்டங்களின் பயன்களைப் பெற விவசாயிகளுக்கு அடையாள எண் அவசியம். இதற்காக சிறப்பு முகாம் நேற்று முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது. எனவே விவசாயிகள் அருகில் உள்ள இ- சேவை அல்லது வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.