Tirunelveli

News February 26, 2026

நெல்லை: சிலிண்டர் வாங்குவோருக்கு HAPPY நியூஸ்…!

image

நெல்லை மக்களே, உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை தாண்டி அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது. Indane: 75888 88824, HP Gas: 92222 01122, Bharat Gas: 1800 22 4344. இந்த எண்களில் Gpay, Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பில் பணத்தை செலுத்துங்க.இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேட்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News February 26, 2026

நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

image

நெல்லை மாவட்டத்தை சுற்றியுள்ள அணைகளின் நீர்மட்ட விபரங்கள் மற்றும் நீர் இருப்பு நிலை பாபநாசம் அணை 143/88.80 சேர்வலாறு அணை 156/86.68 மணிமுத்தாறு அணை 118/91.50 வடக்கு பச்சையாறு அணை 49.20/6.00 நம்பியார் அணை 22.96/14.00 கொடுமுடி ஆறு அணை 52.50/7.00 மணிமுத்தாறு சேர்வலாறு பகுதிகளில் மட்டும் மழை பொழிவு உள்ளதால் நீர் மற்றும் சற்று உயர்ந்துள்ளது.

News February 26, 2026

திருநெல்வேலி: டிஜிட்டல் மயத்தில் இனி எல்லாம் சுலபம்

image

நெல்லை மக்களே, பான்கார்டு, வாக்காளர் அட்டை, லைசன்ஸ், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணபிக்கலாம்.

1.பான்கார்டு: <>கிளிக்<<>>

2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in

3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/

4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink

இந்த இணையதளங்களுக்கு சென்று விண்ணப்பியுங்க.. SHARE பண்ணுங்க!

News February 26, 2026

நெல்லை விரைவு ரயில்களின் சேவை மாற்றம்

image

எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டு பணி காரணமாக செங்கோட்டை – நெல்லை விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் நெல்லை – எழும்பூர் நெல்லை விரைவு ரயில் வரும் மார்ச் 1 முதல் 15ம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். எழும்பூர் – செங்கோட்டை பொதிகை விரைவு ரயில் வரும் மார்ச் 2 முதல் 16ம் தேதி வரை தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என அறிவிப்பு.

News February 26, 2026

நெல்லை: பணத்தை திருப்பி பெறலாம்!

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!

News February 26, 2026

திருநெல்வேலி: 21 வயது இளைஞர் குண்டாஸில் கைது

image

நெல்லை மாநகரப் பகுதியில் கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த பேட்டை கலுங்கடி தெருவை சேர்ந்த லெட்சுமணன்(21) என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீசார் பரிந்துரைத்தனர். எனவே காவல் ஆணையர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் லட்சுமணன் கைது செய்யப்பட்டு பாளை சிறையில் அடைக்கப்பட்டார்.

News February 26, 2026

12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சிக்கியது

image

விக்கிரமசிங்கபுரம் கோட்டைவிளைப்பட்டி வடக்கு தெருவில் உள்ள முருகன் கோயில் முன்புள்ள கிணற்றின் அருகே பெரிய மலைப்பாம்பு ஒன்று கோழியை உயிருடன் விழுங்கிய போது அக்கம் பக்கத்தினர் சத்தம் போட்டதால் கோழியை விட்டு மறைந்து சென்றது. இந்நிலையில் இது குறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அந்த மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு பாபநாசம் அடர் வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.

News February 26, 2026

12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சிக்கியது

image

விக்கிரமசிங்கபுரம் கோட்டைவிளைப்பட்டி வடக்கு தெருவில் உள்ள முருகன் கோயில் முன்புள்ள கிணற்றின் அருகே பெரிய மலைப்பாம்பு ஒன்று கோழியை உயிருடன் விழுங்கிய போது அக்கம் பக்கத்தினர் சத்தம் போட்டதால் கோழியை விட்டு மறைந்து சென்றது. இந்நிலையில் இது குறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அந்த மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு பாபநாசம் அடர் வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.

News February 25, 2026

நெல்லையில் இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்.!

image

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <>eservices.tnpolice.gov.in<<>> என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 25, 2026

நெல்லையில் சிறுமியை கடத்திய வாலிபருக்கு 25 ஆண்டுகள் சிறை

image

நெல்லை மாவட்டத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு சிறுமியை கடத்தி திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் கொடுமை செய்த வழக்கு சேரன்மாதேவி காவல் நிலையத்தில் நிலுவையில் இருந்தது. இதில் சுமேஷ் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இன்று மகிளா நீதிமன்றம் அவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மேலும் சிறுமிக்கு நிவாரண நிதியாக 5 லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்

error: Content is protected !!