India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை நெல்லையப்பர் கோவிலில் ஆருத்ரா தரிசன திருவிழா இன்று காலை கொடியேற்றுடன் தொடங்கியது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் மற்றும் திரு நடன காட்சி சிவபெருமான் நடனமாடிய ஐந்து சபைகளில் ஒன்றான தாமிர சபையில் ஜன.13 அன்று நடைபெற உள்ளது.
நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குனர் மரிய சகாய ஆண்டனி செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார் அதில் கூறியிருப்பதாவது: நெல்லை மாவட்டத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வரும் 10ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது, இதில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
நெல்லை நெல்லையப்பர் கோவிலில் ஆருத்ரா தரிசன திருவிழா இன்று காலை கொடியேற்றுடன் தொடங்கியது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் மற்றும் திரு நடன காட்சி சிவபெருமான் நடனமாடிய ஐந்து சபைகளில் ஒன்றான தாமிர சபையில் ஜன.13 அன்று நடைபெற உள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர் என் ரவியை நெல்லை மாவட்டம் ராதாபுரம் எம்எல்ஏ தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நேற்று நேரில் சந்தித்தார்.தொடங்கு ஆங்கில புத்தாண்டின் முதல் பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் ஆளுநர் ரவியை வருமாறு பேரவையின் உரையாற்ற அழைப்பு விடுத்துள்ளார்.
மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வெங்கடேசன் விடுதுள்ள அறிக்கை அரசு மானிய விலையில் வழங்கப்படும் யூரியாவை விவசாயம் அல்லாமல் பிற தேவைகளுக்கு பயன்படுத்தினால் 7 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும். முறையற்ற முகவர்களிடம் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான உரங்களை வாங்க கூடாது தரமற்ற போலியான உரங்களை விற்பனை செய்யக் கூடாது. விதிகள் மீறப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகின்ற 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையொட்டி நெல்லை – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சேரன்மகாதேவி, அம்பை,தென்காசி, ராஜபாளையம், சிவகாசி உள்ளிட்டவைகள் வழியாக இந்த ரயில் இயக்கப்படுகின்றன. இதற்கான முன்பதிவு வருகின்ற ஜனவரி 5ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. *ஷேர்*
நெல்லை மாவட்டத்தில் நேற்று முதல் பொங்கல் பரிசுக்கான டோக்கன் வழங்கும்பணி நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட அளவிலும் வட்ட அளவிலும் கண்காணிக்க கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குறைகள் இருந்தால் பொதுமக்கள் கட்டுப்பாட்டு அறை எண் 9342471314 மற்றும் 1967 மற்றும் 1800 425 5901 என்ற எண்களுக்கு புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். *ஷேர்*
தாமிரபரணியில் கழிவு நீர் கலப்பதை தடுக்ககோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முத்தாலங்குறிச்சி காமராசு வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கில் இன்று சொரிமுத்து அய்யனார் கோவிலில் திருவிழா நாட்களில் பக்தர்கள் கோவில் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றை பயன்படுத்துவதால் கழிவு ஏற்படுகின்றது என தெரிவிக்கப்பட்டபோது, பக்தர்கள் கோவிலில் தங்காமல் தரிசனம் செய்துவிட்டு வீட்டிற்குச் செல்லலாமே என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்தவர் வழக்கறிஞர் ஜிப்ரில் என்பவர் கடந்த 2023 ஆம் ஆண்டு சென்னையில் இருந்து திருநெல்வேலி வருவதற்காக அரசு விரைவு பேருந்தில் முன் பதிவு செய்து பயணம் செய்துள்ளார். அப்போது அவதூறாக பேசிய நடத்துனர் மீது வழக்கு தொடர்ந்த நிலையில் இன்று நடந்த விசாரணையில் நடத்துனருக்கு 15,000 அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வுக்கான அனைத்து முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதில் பிளஸ் 2 மையங்களை தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள யூசர் ஐடி பாஸ்வேர்டை பயன்படுத்தி தேர்வு மையங்களின் பெயர் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் இன்று (ஜன3) தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.