India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை மக்கள் அனைவரும் பெற வேண்டும் என்பதற்காக மாதம் தோறும் இரண்டாவது சனிக்கிழமையில் அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதன்படி நாளை(டிச 14) நடைபெறும் இந்த முகாமில் குடும்ப அட்டை தொடர்பான சேவைகளை உரிய ஆவணங்களோடு தாலுகா அலுவலகங்கள் சமர்ப்பித்து பொதுமக்கள் பயன் பெறலாம்.
நெல்லையில் விடிய விடிய மழை பெய்யும் நிலையில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 76.500 அடியாகவும் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 97.34 அடியாகவும் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 87.28 அடியாகவும் உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 6656 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பாபநாசம் மணிக்கு 6427 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இன்று(டிச.13) நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் கனமழையின் காரணமாக ஒத்திவைப்பட்டுள்ளது. தேர்வு நடக்கும் மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என நெல்லை மனோன்மணியம் சுந்தரனார்பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு ஆணையர் இன்று(டிச.13) தெரிவித்துள்ளார்.
கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.13) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஷேர் பண்ணுங்க
நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் இரவு நேரங்களில் ஏற்படும் குற்றங்களைத் தடுக்க நாள்தோறும் போலீசார் உதவி காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (டிச.12) இரவு ரோந்து அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவில் ஏதேனும் காவல் உதவி தேவைப்பட்டால் இவர்களை அணுகலாம்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மற்றும் பாபநாசம் பகுதிகளில் இன்று (டிச.12) காலை முதல் பெய்து வரும் தொடர் மழையால் அகத்தியர் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். தண்ணீர் வரத்து குறைந்த பின்னர் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் தொடர் கனமழையின் காரணமாக மணிமுத்தாறு அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நாளை (13.12.2024 ) முதல் மணிமுத்தாறு அருவி மற்றும் குதிரைவெட்டி வன ஓய்வு விடுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என வனத்துறையினர் இன்று தெரிவித்தனர்.
நெல்லை மாவட்டத்தில் இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பெய்த மழை விபரம் மாவட்ட நிர்வாகத்தால் தற்போது அறிவிக்கப்பட்டது. மொத்தம் 242 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக அம்பாசமுத்திரத்தில் 61.40 மில்லி மீட்டர் மழை, சேரன்மகாதேவி 55 மிமீ, மணிமுத்தாறு 45 .20 மிமீ, நாங்குநேரி 24 மிமீ, நெல்லை 15 மீ, பாளையங்கோட்டை 14 மில்லிமீட்டர் மழை பெய்தது.
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் விடுத்துள்ள அறிக்கையில் வானிலை மையம் நெல்லையில் கனமழை இருக்கும் என முன்னெச்சரிக்கை விடுத்துள்ளதால் பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆங்காங்கே உள்ள ஓடைகள், காட்டாற்று மூலம் வரப்பெறும் மழை நீர் ஆற்றில் செல்ல வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் எந்த ஒரு நீர் நிலையிலும் இறங்கி வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் இன்று காலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை நேரத்தில் மிக கனமழை பல்வேறு இடங்களில் பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக நாளை(டிச.13) நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். SHARE பண்ணுங்க மக்களே
Sorry, no posts matched your criteria.