Tiruchirappalli

News November 6, 2024

உதயநிதி ஸ்டாலின் திருச்சி வருகை: அமைச்சர் அறிக்கை

image

மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக இன்று மாலை திருச்சிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தர உள்ளார். எனவே இது தொடர்பாக திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அன்பில் மகேஷ் திருச்சிக்கு வரும் துணை முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளதாகவும் இதில் அனைத்து நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அறிக்கை விடுத்துள்ளார்.

News November 6, 2024

லால்குடி ஏரியில் மூழ்கி தொழிலாளி சாவு

image

லால்குடி அருகே கோவண்டக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த போன்சியாஸ் வயது 42 லால்குடி வெள்ளனூர் பகுதியில் திருமணம் செய்து கொண்டு வசித்து வந்தார். போன்சியாஸ் வெள்ளலூர் பகுதியில் உள்ள முத்து குளம் ஏரியில் குளித்துக் கொண்டிருந்தார். திடீரென்று வலிப்பு ஏற்பட்டது. அவர் தண்ணீர் மூழ்கி இறந்து விட்டார். லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News November 6, 2024

திருச்சியில் தொழில்நுட்ப பணிகள் தேர்வு

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வானது வரும் 9 ம் தேதி சனிக்கிழமை முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெற உள்ளது. திருச்சி மாவட்டத்தில் இந்த தேர்வு 6 மையங்களில் 1840 தேர்வர்கள் முற்பகலில் எழுத உள்ளனர். மேலும், 2 இயங்கு குழுக்கள் மற்றும் தேர்வு மையத்தினை கண்காத்திட 6 ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.

News November 6, 2024

ஓவரா படிக்க சொல்றாங்க… நாடகமாடிய மாணவிகள்

image

துறையூரைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு பயிலும் 2 மாணவிகள் நேற்று அடையாளம் தெரியாத 3 பேர் காரில் மாணவிகளை கடத்தியதாக, சிறுகாம்பூர் அருகே காரை நிறுத்திய போது தப்பி வந்ததாக அப்பகுதியினரிடம் தெரிவித்தனர். பின் தகவலறிந்த முசிறி காவல்துறையினர் விசாரித்ததில் மாணவிகள் கடத்தப்படவில்லை. வீட்டில் படிக்க சொல்லி திட்டியதால் வீட்டை விட்டு வந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பின் மாணவிகள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

News November 5, 2024

துணை முதலமைச்சர் நாளை திருச்சி வருகை

image

மணச்சநல்லூர் தொகுதி உட்பட்ட இருங்கலூர் பகுதியில், நாளை மணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் மகள் திருமணத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தர உள்ளார். அவரை வரவேற்க திருச்சி வடக்கு மாவட்டம் மற்றும் மத்திய மாவட்ட செயலாளர்கள் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்கள்.

News November 5, 2024

முதலமைச்சரும், தவெகெ விஜய்யும் ஒரே மேடையில்: திருமாவளவன்

image

அம்பேத்கர் குறித்தான புத்தக வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் பங்கேற்பார் என ஏற்கனவே கூறப்பட்டது. தற்போது அந்நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசியல் சூழலில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்து எங்கள் கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பேன் என திருச்சியில் இன்று திருமாவளவன் பேட்டி அளித்தார். ஷேர் செய்யவும்

News November 5, 2024

திருச்சி விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

திருச்சி மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். அதில் திருச்சி மாவட்டத்தில் 2024-2025 ஆம் ஆண்டு ராபி பருவத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு தங்கள் பகுதி பொது சேவை மையம், சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கி மற்றும் தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகலாம் என கூறியுள்ளார்.

News November 5, 2024

திருச்சியில் 4 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

திருச்சியில் சமீப காலமாகவே தொடர்ந்து பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் இருந்து வருகிறது. இந்த நிலையில் திருச்சி தனியார் கல்லுரி மற்றும் 4 பள்ளிகளுக்கு இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனால் பள்ளிகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். SHAREIT

News November 5, 2024

திருச்சி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

திருச்சி அருகே மனநலன் பாதிக்கப்பட்ட வடமாநில பெண்ணிடமிருந்து மீட்கப்பட்ட 2 குழந்தைகளின் பெற்றோர், உறவினர்கள் தொடர்பு கொள்ள இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 21 நாள்களுக்குள் உரியவர்கள் வராவிட்டால் குழந்தைகள் தத்தெடுப்பு சட்டத்தின் கீழ், குழந்தை தத்து வழங்குவதற்கான தடையில்லா சான்று வழங்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

News November 5, 2024

தந்தை திட்டியதால் பள்ளி மாணவி தற்கொலை

image

திருச்சி பிராட்டியூரை சேர்ந்தவர் ராமசாமி இவரது அருகிலுள்ள பள்ளியில் மகள் ப்ளஸ் டூ படித்து வந்தார். இந்நிலையில் மாணவியின் தந்தை அவரிடம் மது போதையில் தகராறு செய்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி நேற்று தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!