Tiruchirappalli

News March 24, 2026

திருச்சி: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

திருச்சி மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2) அல்லது <>pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
3) விண்ணப்பித்த 10-15 நாட்களில் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 24, 2026

திருச்சி: வாராந்திர ரயில் நிரந்தர ரயிலாக மாற்றம்!

image

கச்சிகுடாவில் இருந்து திருச்சி வழியாக தூத்துக்குடிக்கு இயக்கப்பட்டு வரும் வாராந்திர விரைவு ரயில், வரும் ஏப்.6 ஆம் தேதி முதல் நிரந்தர ரயில் சேவையாக மாற்றப்பட உள்ளது. இந்த ரயிலில் நீண்ட தூர பயணத்தை கருத்தில் கொண்டு ஒரு சமையல் பெட்டி இணைக்கப்பட உள்ளது. மேலும் 1 முதல் வகுப்பு ஏசி பெட்டி, மூன்று 2-ம் வகுப்பு ஏசி பெட்டிகள், ஐந்து 3-ம் வகுப்பு ஏசி பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 24, 2026

தமிழ்நாடு முதலிடம் – திருச்சி எம்எல்ஏ அறிக்கை!

image

திருச்சி எம்எல்ஏ இனிகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “இந்தியாவிலேயே அதிக அளவிலான நடமாடும் மருத்துவ வாகனங்களை இயக்கும் மாநிலங்களின் பட்டியலில், 425 வாகனங்களுடன் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த நடமாடும் மருத்துவ வாகனங்களில் 31% தமிழகம் மட்டுமே தனித்து இயக்குவது, மாநில அரசின் மக்கள் பணிக்கு கிடைத்த மாபெரும் இமாலய வெற்றி” என தெரிவித்துள்ளார்.

News March 24, 2026

திருச்சி: அமைச்சர் தலைமையில் இணைந்த தவெகவினர்

image

தமிழக வெற்றிக் கழக திருச்சி மண்டல அமைப்பாளர் பாஷா, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் திமுக-வில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் திருச்சி திமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் அவருடன் தவெகவினர் ஏராளமான தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். புதிய உறுப்பினர்களுக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி சால்வை அணிவித்து வரவேற்றார்.

News March 24, 2026

திருச்சி: அமைச்சர் தலைமையில் இணைந்த தவெகவினர்

image

தமிழக வெற்றிக் கழக திருச்சி மண்டல அமைப்பாளர் பாஷா, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் திமுக-வில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் திருச்சி திமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் அவருடன் தவெகவினர் ஏராளமான தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். புதிய உறுப்பினர்களுக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி சால்வை அணிவித்து வரவேற்றார்.

News March 24, 2026

திருச்சி: போக்சோவில் இளைஞருக்கு 20 ஆண்டு சிறை

image

கொடியாலம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 17 வயது சிறுமியை, அதேபகுதியைச் சேர்ந்த தமிழரசன் சிறுமியின் வீட்டினுள் புகுந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், தமிழரசன் போகோ வழக்கில் கைதுசெய்யப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால், தமிழசனுக்கு 20ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி சண்முகப்பிரியா உத்தரவிட்டார்.

News March 24, 2026

திருச்சி: மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவிப்பு

image

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குபதிவு வரும் ஏப்.23ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் திருச்சி மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள், தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டையை காண்பித்து வாக்களிக்கலாம். புகைப்பட அடையாள அட்டை இல்லாத பட்சத்தில், ஆதார், ஓட்டுனர் உரிமம், பான் கார்டு உள்ளிட்ட 12 விதமான அடையாள அட்டைகளை காண்பித்து வாக்களிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News March 24, 2026

திருச்சி: மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவிப்பு

image

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குபதிவு வரும் ஏப்.23ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் திருச்சி மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள், தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டையை காண்பித்து வாக்களிக்கலாம். புகைப்பட அடையாள அட்டை இல்லாத பட்சத்தில், ஆதார், ஓட்டுனர் உரிமம், பான் கார்டு உள்ளிட்ட 12 விதமான அடையாள அட்டைகளை காண்பித்து வாக்களிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News March 24, 2026

திருச்சி: மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவிப்பு

image

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குபதிவு வரும் ஏப்.23ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் திருச்சி மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள், தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டையை காண்பித்து வாக்களிக்கலாம். புகைப்பட அடையாள அட்டை இல்லாத பட்சத்தில், ஆதார், ஓட்டுனர் உரிமம், பான் கார்டு உள்ளிட்ட 12 விதமான அடையாள அட்டைகளை காண்பித்து வாக்களிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News March 24, 2026

திருச்சி: மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவிப்பு

image

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குபதிவு வரும் ஏப்.23ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் திருச்சி மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள், தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டையை காண்பித்து வாக்களிக்கலாம். புகைப்பட அடையாள அட்டை இல்லாத பட்சத்தில், ஆதார், ஓட்டுனர் உரிமம், பான் கார்டு உள்ளிட்ட 12 விதமான அடையாள அட்டைகளை காண்பித்து வாக்களிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!