India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சண்டிகர் மாநிலத்தில் நடைபெற்ற ஐபிஎஸ் அதிகாரிகளின் மாநாட்டில் திருச்சி எஸ்.பி கலந்துகொண்டு,நாம் தமிழர் கட்சியினரால் தானும் தனது குடும்பத்தினரும் இணையதள குற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று பேசியிருந்தார். இந்நிலையில், இன்று திருச்சி மாவட்ட எஸ்பி மீது தமிழக டிஜிபி-யிடம் நாதகவினர் மீது பொய்வழக்கு பதிந்து தாக்குதல் நடத்துவதாகவும் புகார் அளித்தனர்.
திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாக 108ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் 108ஆம்புலன்சில் காலியாக உள்ள அவசர மருத்துவ உதவியாளருக்கான கடந்த 29ஆம் தேதி வெளியானது. இதற்கு முதற்கட்ட நேர்முகத் தேர்வு இன்றும் நாளையும் (6,7ம் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 1மணி வரை நடைபெற உள்ளது. நேர்முக தேர்வு வருபவர்கள் தங்களது கல்வித்தகுதி, முகவரி, அடையாள சான்றுகளை எடுத்து வர அறிவுறுத்தியுள்ளது.
திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களை பிடித்த தனிப்படை போலீசாரை நேற்று வெகுவாக பாராட்டினர். அதனை தொடர்ந்து திருச்சி மாநகரத்தில், இளைஞர்களின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் போதைப் பொருட்களான கஞ்சா, குட்கா பொருள்களை விற்பனை செய்யும் சமூகவிரோதிகள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் தெடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி கண்டோன்மென்ட் ஆதிதிராவிடா்கள் கல்லூரி மாணவிகளுக்கான விடுதியில் தற்போது 149 மாணவிகள் கடும் இட நெருக்கடிக்கு இடையே தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதே வளாகத்தில் செயல்படும் மற்றொரு பழைய கட்டடத்தில் தங்கியிருந்த பள்ளி மாணவிகள் 105 பேரையும் விடுதி நிா்வாகம் கல்லுாரி மாணவிகளுடன் சேர்ந்து தங்க வைத்தனர். இதை கண்டித்து கல்லூரி மாணவிகள் நேற்று இரவு விடுதி வாசலில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லால்குடியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் 10ஆம் வகுப்பு மாணவி காதலித்து வந்தார். மாணவியின் பெற்றோர் வயதை காட்டி திருமணம் செய்ய மறுத்துள்ளனர். இந்நிலையில், மாணவியை கார்த்திக் கட்டாயத் திருமணம் செய்துள்ளார். பெற்றோர் லால்குடி மகளிர் போலீசில் புகார் கொடுத்ததின் பேரில் கார்த்திக்கை போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர். கார்த்திக்கிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தோழி பெண் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் மாநில அளவிலான பெண் தொழிலாளர்கள் மாநாடு மற்றும் உள்ளக புகார் குழு ஆய்வறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி திருச்சியில் உள்ள டி.எம்.எஸ்.எஸ் ஹாலில் திருப்பத்தூர் சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு மாநாட்டை துவக்கி வைத்து ஆய்வறிக்கை வெளியிட்டார்.
காட்டுப்புத்தூரை அடுத்த ஸ்ரீராமசமுத்திரம் மதுரை காளியம்மன் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்றில் அழுகிய நிலையில் 50 வயதுமதிக்கதக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந் தார். அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர், எப்படி இறந்தார்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் சட்டவிரோத செயல்களில் .ஈடுபட்ட 120க்கும் மேற்பட்ட வெளி நாட்டினர் தங்க வைக்கப்பட்டன. மாநகர ஏ.சி, க்கள் தலைமையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது இலங்கையை சேர்ந்த தினேஷ் என்பவரிடமிருந்து மொபைல் போன், நாகேந்திரன் என்பவரிடம் 100 கிராம் கஞ்சா, ஜேம்ஸ் என்பவரிடம் செல்போன் போலீசாரல் பறிமுதல் செய்யப்பட்டனர்.
திருவெறும்பூர் அருகே காட்டூர் வின் நகர் 4ஆவது தெருவில் காதல் தோல்வியால் மன உளைச்சலில் இருந்த மகன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் அவர்களது பெற்றோர்களும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், தாய் லட்சுமி சிகிச்சை பலன் இல்லாமல் இன்று பரிதாபமாக மருத்துவமனையில் உயிரிழந்தார். இது குறித்து திருவெறும்பூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
லால்குடியை சேர்ந்த கார்த்தி என்ற வாலிபர், அதே பகுதியை சேர்ந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கார்த்தி கைது செய்யப்பட்டார். திருச்சி மகிலா குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் வாலிபருக்கு 25 வருடம் சிறை தண்டனை விதித்து திருச்சி மகிலா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
Sorry, no posts matched your criteria.