Tiruchirappalli

News December 17, 2024

குரூப் 2 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்

image

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், குரூப் 2 மற்றும் 2A தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார். இதில் அனைத்து போட்டி தேர்வர்களும் கலந்து கொண்டு பயனடையலாம் என்றும், இது குறித்த விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 17, 2024

யானை தந்தத்தால் பரிசு: உதவி ஆய்வாளர் கைது

image

விழுப்புரம் வனச்சரக அதிகாரிகளுக்கு யானை தந்தத்தால் ஆன பரிசு பொருட்களை சட்ட விரோதமாக விற்பனை செய்தவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் குற்றவாளிகள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், திருச்சி மாவட்ட ஆயுதப்படை உதவி ஆய்வாளர் மணிவண்ணனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

News December 17, 2024

காவல்துறை வாகனங்கள் பொது ஏலம்: கமிஷனர் அறிக்கை

image

திருச்சி காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 4 சக்கர வாகனம் 1, 2 சக்கர வாகனம் 2 என மொத்தம் 3 வாகனங்கள் பொது ஏலம் மூலம் வரும் 23ஆம் தேதி ஆயுதப்படை மைதானத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோர் 19ஆம் தேதி ஆயுதப்படை வளாகத்திற்கு சென்று வாகனங்களை பார்வையிட்டு, ரூ.5 ஆயிரம் செலுத்தி முன் பதிவு செய்துகொள்ளலாம் என மாநகர காவல் ஆணையர் காமினி தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

News December 16, 2024

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு விருதுநகரில் மாநில அளவில் வரும் 28ஆம் தேதி அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான வினாடி வினா நிகழ்வு நடைபெற உள்ளது. இதற்காக மாவட்ட ஆட்சியரகத்தில் வரும் 21ஆம் தேதி மாவட்ட அளவிலான எழுத்து தேர்வு நடக்க உள்ளது. எனவே இதில் பங்கேற்க விரும்புபவர்கள் திருச்சி தமிழ் வளர்ச்சி துறை இயக்குனரை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

News December 16, 2024

பொதுமக்களிடமிருந்து குவிந்த 547 மனுக்கள்

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாற்றுதல், ஜாதி சான்றுகள், இதரச் சான்றுகள், முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 547 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News December 16, 2024

திருச்சியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

image

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து நேரடியாக மாவட்ட ஆட்சியர் மனுக்களை பெற்று அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பயனாளிகளுக்கு உறுதியளித்தார்.

News December 16, 2024

திருச்சியில் அய்யாக்கண்ணு கைது

image

திருச்சி ரயில் நிலையம் முன்பு தென்னிந்திய தேசிய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும் அய்யாக்கண்ணு உட்பட பல நிர்வாகிகளையும் போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

News December 16, 2024

திருச்சியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: பரபரப்பு

image

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலையை நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேலும் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

News December 16, 2024

கார் மீது டூவீலர் மோதி விபத்து: ஒருவர் பலி

image

கள்ளக்குறிச்சியை சேர்ந்த முத்துராமலிங்கம் நேற்று தனது குடும்பத்தினருடன் காரில் திருச்சி மதுரை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மட்டப்பாறைபட்டி அருகே எதிரே டூவீலரில் வந்த ரமேஷ் குமார் என்பவர் வேகமாக வந்ததில் முத்துராமலிங்கம் கார் மீது மோதி காயமடைந்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து மணிகண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News December 15, 2024

சுழலில் சிக்கியவர்களை மீட்க சென்ற இளைஞர் பலி

image

காணக்கிளியநல்லூரைச் சேர்ந்த சிவசக்தி(24) நேற்று சிறுவயலூர் பெரிய ஏரி பகுதியில் சென்று கொண்டிருந்த போது 2 பேர் ஏரியில் குளித்துக் கொண்டிருந்தபோது சுழலில் ஒருவர் சிக்கியதை பார்த்தார். உடனே சிவசக்தி தண்ணீரில் குதித்து காப்பாற்ற முயன்ற போது அவர் சுழலில் அடித்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த வந்த மீட்பு படையினர் சிவசக்தியை சடலமாக மீட்டனர். உடல் லால்குடி ஜிஹெச் கொண்டு செல்லப்பட்டது…

error: Content is protected !!