India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மாநகராட்சி 42வது வார்டு பகுதியில் உள்ள மளிகை கடை முன்பு, அதன் உரிமையாளர் துணியை வைத்து செய்து கொண்டிருந்தார். அப்போது சாலையில் சுற்றி திரிந்த ஒரு ஜல்லிக்கட்டு காளை திடீரென அவரை முட்டியது. இதில், அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
ஒவ்வொரு ஆண்டும் மாட்டு பொங்கல் தினத்தன்று திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்த ஆண்டு சூரியூர் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின் போது, ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் அமைப்பதற்கான அரசாணையை அமைச்சர் அன்பில் மகேஷ் விழா குழுவினரிடம் வழங்கினார். இந்த ஸ்டேடியம் அமைப்பதற்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டெண்டர் கோரியுள்ளது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் பேசுகையில், இந்திய சுதந்திரத்திற்கு பின் வந்த ஆட்சியாளர்கள் மக்களிடையே பிரிவினை தான் உருவாக்கி இருக்கிறார்கள். குறிப்பாக ஜாதியின் பெயரால் பிரிவினையை உருவாக்கி இருக்கிறார்கள். ஒரு தலித்தால் பஞ்சாயத்து தலைவராக முடிவதில்லை. அப்படி ஆனாலும் மரியாதை கிடைப்பதில்லை. இது போன்ற நிலை நாட்டில் மாற வேண்டும் என தெரிவித்தார்.
திருச்சி மாவட்ட காவல்துறை இன்று பொது மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் உங்களுக்கு வெகுமதியாக ரூ.6500 கிடைத்துள்ளதாகவும், apkவை Install செய்து உடனடியாக பணத்தை பெற்றுக் கொள்ளலாம் எனவும், வாட்ஸ்ஆப் குழுவில் வரும் செய்திகளை நம்பி எந்த ஒரு apkவையும் Install செய்ய வேண்டாம். இதனால் செல்போனில் உள்ள தரவுகள் திருடப்பட்டு வாட்ஸ்ஆப் ஹேக் செய்யப்படலாம் என எச்சரித்துள்ளது. SHARE IT
திருச்சி மாவட்டத்தில் வருகின்ற 25ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவெறும்பூர், ஸ்ரீரங்கம், மணப்பாறை, தொட்டியம், லால்குடி, மணச்சநல்லூர், முசிறி, மருங்காபுரி ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளில் பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைய மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் (26/01/2025) குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கிராம சபை கூட்டத்தில் அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு தங்களது பகுதி குறைகள் குறித்தும், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் கிராம வளர்ச்சி திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல் போன்றவற்றை விவாதிக்க மாவட்ட ஆட்சியர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திருச்சி ஜங்ஷன் ரயில்வே நிலையத்திற்கு இன்று வருகை தந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது டங்ஸ்டன் விவகாரத்தில் அண்ணாமலை எங்கு போய் பேசினாலும் அதனை நடைமுறைப்படுத்துகின்ற அதிகாரம் மாநில அரசுக்கு தான் உள்ளது. அதை தமிழக முதலமைச்சர் தான் முடிவு எடுக்க வேண்டும். அனைத்தையும் ஒன்றிய அரசை செய்ய முடியாது என தெரிவித்தார்.
மணப்பாறையில் வருகின்ற ஜனவரி 28ஆம் தேதி முதல் பிப்ரவரி 3 ஆம் தேதி வரை சர்வதேச அளவிலான சாரண, சாரணீய ஜாம்போரி விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிற்கு, தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று அழைப்பு விடுத்தார்.
திருச்சியைச் சேர்ந்த சாலமன் (எ) பிரவீன் நேற்று முன்தினம் தெப்பக்குளம் பகுதியில் எலக்ட்ரீசியன் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துபாயிலிருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று (ஜன.22) இரவு திருச்சி வந்தது. இதில், வந்த பயணிகளை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது, ஆண் பயணி ஒருவரின் ஆடையின் உள்பகுதிகளில் பழுப்பு, மஞ்சள் நிற பேஸ்ட் வடிவில் 325 கிராம் தங்கத்தை 2 சிறிய கட்டிகளாக கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.