Tiruchirappalli

News December 20, 2024

திருச்சியில் நடிகர் சூரி பேட்டி

image

திருச்சியில் நடிகர் சூரி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, விடுதலை 2 திரைப்படம் கமர்சியல் வெற்றியை தாண்டி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அரசியல் ஒன்று இத்திரைப்படத்தில் உள்ளது. மேலும் இந்த படத்திற்கு மக்களிடம் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து விடுதலை 3 எடுப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

News December 20, 2024

திருச்சியில் கலைஞர் நூலக கட்டுமான பணிக்கு டெண்டர்

image

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகில் 4.57 ஏக்கர் பரப்பளவில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை அமைக்க ரூ.175 கோடியில் கட்டுமான பணி மேற்கொள்ள தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. இதற்கு ஜன.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். அரசாணை வெளியான வெறும் இரண்டே நாட்களில் பொதுப்பணித்துறை டெண்டர் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதைப் பற்றிய உங்கள் கருத்து? கமெண்டில் தெரிவிக்கவும்.

News December 20, 2024

திருச்சியில் வினாடி-வினா போட்டி அறிவிப்பு

image

திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 21ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை திருச்சியில் உள்ள அனைத்து அரசு ஊழியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொள்ளும் வினாடி-வினா போட்டி நடைபெற உள்ளது. திருச்சியில் தகுதி பெறும் 3 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு 28ஆம் தேதி விருதுநகரில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என ஆட்சியர் தெரிவித்தார். ஷேர் செய்யவும்

News December 19, 2024

ஜல்லிக்கட்டு போட்டிக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 2025 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான விண்ணப்பங்களை 30 தினங்களுக்கு முன்பு சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் அரசிடம் முன் அனுமதி பெற்று மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும், விதிகளை மீறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

News December 19, 2024

திருச்சி மாவட்டத்திற்கு முதல்வர் அறிவிப்பு

image

ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித் துறையின் சார்பில் 18 மாவட்டங்களில் உயர்மட்ட பாலம் கட்ட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி லால்குடி வட்டத்தில் உப்பாற்றின் குறுக்கே 1 பாலம், நந்தியூர் கால்வாயில் 1 பாலம் மற்றும் மண்ணச்சநல்லூர் வட்டத்தில் வைக்கல் புரந்தங்குடி – ரெத்மாங்குடி சாலையின் குறுக்கே 1 பாலம் என மொத்தம் 3 பாலம் கட்ட சுமார் ரூ.22 கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.

News December 19, 2024

திருச்சி நீதிமன்றத்தில் சீமான் பேட்டி (டிச.19)

image

‘அயோத்தியில் கடவுள் பெயரை கூறி போட்டியிட்டவர் தோல்வி அடைந்தார். ஆனால், அம்பேத்கர் பெயரை கூறியவர் தான் வெற்றி பெற்றார்.
மக்கள் பிரச்சனையை திசை திருப்பவே அம்பேத்கர் குறித்து பேசியுள்ளனர்.
பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழு அமைத்த விவகாரத்தில் தமிழக அரசின் முடிவு சரியானது. மாநில அரசு நிறைவேற்றும் சட்டங்களுக்கு கையெழுத்திட முடியாது என ஆளுநர் கூறுவது தவறு’. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

News December 19, 2024

கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

image

திருச்சி திருவானைக்காவல் கொள்ளிடம் ஆற்றில் நேற்று ஒரு சடலம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த ஸ்ரீரங்கம் போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

News December 18, 2024

469 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்கள்

image

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இன்று நடைபெற்ற சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, சிறுபான்மையினர் நல அமைச்சர் நாசர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி, 469 பயனாளிகளுக்கு ரூ.26.77 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். மேலும் நினைவு பரிசுகளையும் வழங்கினார்கள்.

News December 18, 2024

காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்

image

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திரளான மக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர். அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க எஸ் பி வருண் குமார் உத்தரவிட்டார்.

News December 18, 2024

போக்சோவில் திருப்பைஞ்சீலி வாலிபர் கைது

image

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி பகுதியை சேர்ந்தவர் ராமர் (வயது 20). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் அவரை போக்ஸோ வழக்கின் கீழ் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!