India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி காவல் சரகத்தில் உள்ள திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் பணிபுரியும் காவலர்கள், முதல் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் வரை உள்ள அதிகாரிகள் உள்ளிட்ட 93 நபர்களுக்கு மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திக்கேயன் நேற்று நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். நிகழ்வில் காவல் சரகத் துணைத் தலைவர் மனோகர் மற்றும் 5 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் கொட்டும் நிகழ்வு பல ஆண்டுகளாக நடைபெறுகிறது, தொர்ந்து நாம் கட்சியை சார்ந்தவர்கள் அதனை தடுத்து வருகின்றனர். மேலும் குப்பைகள் எவ்வாறு சோதனை சாவடியை தாண்டி வருகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார். உங்கள் கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்-கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி டிச.24 & 31 ஆகிய தேதிகளில் சென்னை தாம்பரத்தில் இருந்து நள்ளிரவு 12.35 மணிக்கு புறப்படும் ரயில்கள் (06039/06040) விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, மதுரை, நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரிக்கு நண்பகல் 12.15 மணிக்கு சென்றடையும். செய்தியை பகிரவும்!
இந்தியாவில் முதல் பயணிகள் ரயில் இயக்கியதை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் ரயில்வே வார விழா கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நாட்டின் 69 ஆவது ரயில்வே வாரவிழாவை முன்னிட்டு சிறந்த ரயில்வே பணிமனையாக பொன்மலை ரயில்வே பணிமனை தேர்ந்தெடுக்கப்பட்டது. இதனால் பொன்மலை ரயில்வே பணிமனையில் வேலை பார்த்து வரும் ரயில்வே ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மணப்பாறை சிப்காட் வளாகத்தில் தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் இயக்க வைர விழா மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளனி நடைபெற உள்ளதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமார் இன்று மணப்பாறை சிப்காட் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை, நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை சிறப்பாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், யுடிஎஸ் கைப்பேசி செயலி மூலம் முன்பதிவு செய்யப்பட்ட பயணச் சீட்டுகளுக்கு, 3 சதவீத தொகை திரும்ப பெறும் திட்டம் நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் இதனை பயணிகள் தங்களுடைய வீடுகளில் இருந்தோ அல்லது பயணத்தின் போதோ பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளார்.
செம்மை நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிகள் திரு நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்திக்கான விருது பெற விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். இதில் கலந்து கொள்ளும் விவசாயிகள் குறைந்தபட்சம் 2 ஏக்கர் விவசாய நிலம் சொந்தமாகவோ அல்லது குத்தகையாவோ வைத்திருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க தங்கள் பகுதியில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனரை அணுகலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்த விவசாயிகள்,2024-2025ம் ஆண்டுக்கு ராபி பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய அறிவிப்பு வெளியாகியுள்ளது. வெங்காய பயிருக்கு ரூ.2062.46ம், வற்றல் மிளகாய்க்கு ரூ.1220.18ம், வாழைக்கு ரூ. 3460.48-ம், மரவள்ளி பயிருக்கு ரூ.1632.68ம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது இ-சேவை மையங்களில் செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயன்பெற மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
பர்மா, இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியோர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு கடன்களுக்கு அடமானம் செய்யப்பட்ட நிலஆவணங்கள், கடவுச்சீட்டுகள் தொடர்பான விவரங்கள் அனைத்தையும் நீக்கிவிட்டு, சம்பந்தப்பட்ட தாயகம் திரும்பியோர்களிடம் அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்க அரசு அறிவுரை வழங்கியுள்ளது. சம்பந்தப்பட்ட பயணிகள் தகுந்த ஆவணங்களுடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை அணுகுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 27ம் தேதி வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் திருச்சியைச் சேர்ந்த வேலை நாடுனர்கள் கலந்து கொண்டு பயன்பெற, இது ஒரு நல்ல வாய்ப்பு என்பதால் இதனை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு, மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.