India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள லாட்டரிகளை,”மொபைல் லாட்டரி” என்ற பெயரில் நூதன முறையில் திருச்சி மாவட்டம் முழுவதும் விற்பனை செய்து, தினமும் பல லட்ச ரூபாய் பணத்தை சம்பாதித்த, திருச்சியை சேர்ந்த தொழிலதிபர்கள் எஸ்விஆர் மனோகரன், எஸ்என்ஆர் ரங்கராஜன் மற்றும் பெரியண்ணன் ஆகியோரை இன்று கோட்டை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த திருச்சி எம்பி துரை வைகோ பேசுவையில், திமுக கூட்டணி, 200 தொகுப்புகளில் வெற்றி பெறும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறிய கருத்து சரியானது. 200 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது, அவரது கட்சிக்காக (பாஜக) இருக்கும் என அவர் தெரிவித்தார்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு திருச்சி வழியாக தாம்பரம், கன்னியாகுமரி வாராந்திர சிறப்பு ரயில் டிசம்பர் 24 மற்றும் டிசம்பர் 31 அதிகாலை 12.35க்கு தாம்பரத்தில் புறப்பட்டு காலை 5.15க்கு திருச்சி வந்தடையும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதேபோன்று மறு மார்க்கத்தில் டிசம்பர் 25ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. ஷேர் செய்யவும்
தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்கள் கம்போடியா, தாய்லாந்து, மியன்மார் போன்ற நாடுகளில் வேலைக்கு அதிக சம்பளம் என்ற பெயரில் அழைத்து செல்லப்பட்டு மோசடியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க, வெளிநாடுகளுக்கு செல்லும் இளைஞர்கள் தமிழக அரசு அயலாக தமிழர் நலத்துறை கட்டணமில்லா 24 மணி நேரம் அழைப்பு உதவி மையத்தின் 8069009901 எண்னை தொடர்பு கொள்ளுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
மதுரையைச் சேர்ந்தவர் வட்ட சூரியா. இவர் திருச்சியில் ஒரு குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசாரால் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்று சிறையில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது வட்ட சூர்யாவிடம் கஞ்சா இருந்தது தெரிந்து. அவரிடம் விசாரித்ததில் சிறை வார்டன் எழில்ராஜிடம் வாங்கியதாக கூறினார். பிறகு, சிறைவார்டன் எழில்ராஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து நேரடியாக மாவட்ட ஆட்சியர் மனுக்களை பெற்று அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பயனாளிகளுக்கு உறுதியளித்தார்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உள்நாட்டு சேவையான மும்பையில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு இயக்கப்படும் இண்டிகோ விமானத்தின் பயண கட்டணம் கிறிஸ்மஸ் விடுமுறையை முன்னிட்டு பன்மடங்கு உயர்ந்திருப்பது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மும்பையில் இருந்து திருச்சிக்கு ரூ.19,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூரை சேர்ந்த இப்ராம்ஷா (50), இராமநாதபுரத்தை சேர்ந்த சுக்ரீவன் (54), ஆதம் மாலிக் (55) ஆகியோரை திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்தபோது, குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். சோதனையில் போலி கடவுச்சீட்டில் பயணித்தது தெரியவந்தது. இதுகுறித்து அறிந்த திருச்சி விமான நிலையப் போலீசார் வழக்குப் பதிந்து, மேற்குறிப்பிட்ட மூவரையும் கைது செய்தனர்.
மண்ணச்சநல்லூர் அருகே இருசக்கர வாகனத்தில் இன்று ரூ.2 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். இருசக்கர வாகனம் மற்றும் 2 செம்மர கட்டைகளை மண்ணச்சநல்லூர் போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வனத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து, செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்ட 2 நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்மலை ரயில்வே பணிமனையில் உற்பத்தித் திறனை மேம்படுத்தி பல கண்டுபிடிப்புகளுக்கு முன்னோடியாகவும், செயல் திறனை மேம்படுத்தி செலவுகளை குறைத்ததற்காகவும், பொன்மலை ரயில்வே பணிமனையில் பணிபுரியும் மூத்த பொறியாளர் டி.எம்.கோபால கிருஷ்ணனுக்கு இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் நேற்று விருது வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்வில் ரயில்வே உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.