Tiruchirappalli

News March 2, 2025

சிறுகனூர அருகே லாரி மீது கார் மோதி விபத்து

image

திருச்சி அருகே லாரி மீது கார் மோதி விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். சிறுகனூர் அருகே கொணலையில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் தடுப்புக்கட்டையில் மோதி எதிரே வந்த லாரி மீது மோதிய விபத்தில் சூர்யா சக்கரவர்த்தி, யோகேஷ், மன்சூர், தீபக் ராஜ், ஜெயசுந்தர் ஆகிய 5 பேர் காயமடைந்தனர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

News March 1, 2025

இருமொழிக் கொள்கையில் நம்பிக்கை கிடையாது -IJK தலைவர் திருச்சியில் பேட்டி

image

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவிபச்சைமுத்து அளித்த பேட்டியில் இருமொழிக் கொள்கையில் நமக்கு நம்பிக்கை கிடையாது. அவர் அவர்களுக்கு தாய்மொழி முக்கியம். மொழி என்பது தொடர்பு மொழி மட்டும்தான் எந்த மொழி தேவையோ அந்த வகையில் மும்மொழி கொள்கையை காண வேண்டும். ஹிந்தியை திணிக்க வேண்டும் என கூறக்கூடாது என கூறினார்.

News March 1, 2025

மத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை-டிடிவி பேச்சு

image

திருச்சியில் இன்று நடைபெற்ற விழா நிகழ்ச்சியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு, செய்தியாளர்களிடம் பேசியது: சீமான் மீது காவல்துறை எடுத்த நடவடிக்கை சட்டபூர்வமாக எடுத்த நடவடிக்கைதான். அதில் அரசியல் அழுத்தம் எதுவும் இல்லை.அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் அமமுக கலந்து கொள்ளும்.மத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை. விருப்பமுள்ளவர்கள் 3வது மொழியை கற்றுக்கொள்ள தான் கூறியுள்ளார்கள்.

News March 1, 2025

திருச்சி அருகே 200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

image

திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையத்தில் மண்ணச்சநல்லூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த காரை சோதனை செய்தனர். அப்போது அதில் 200 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தஞ்சை அருகே திருக்கோடிகாவல் மேலத்தெருவை சேர்ந்த ராஜா, ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பாலமுருகன் ஆகிய 2 பேரை கைது செய்து புகையிலை பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

News March 1, 2025

தனியார் கல்லூரியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை

image

திருச்சி திண்டுக்கல் சாலையில் தாயனூர் அருகே திருச்சி கேர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கான விடுதிகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் மலமிக்கல்பட்டி இருளர் தெருவைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் திவ்யா என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானதை அடுத்து, இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News March 1, 2025

ரூ.78,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை

image

பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் மாதம் ரூ.23 000 முதல் 78 000 வரையிலான சம்பளத்தில் காலியாக உள்ள 246 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 18 முதல் 26-க்குள் இருக்கும் தகுதியானவர்கள் <>ioci.com<<>> என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க…

News February 28, 2025

திருச்சி காவல்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது

image

பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தலை தடுக்க காவல்துறை இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், சட்டம்- 2013 PoSH சட்டம், பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குகிறது. பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் பெண்கள் இந்த சட்டத்தின்படி நேரடியாக புகார் தெரிவிக்கலாம். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க 181 & 1091 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்.

News February 28, 2025

திருச்சி அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

image

திருச்சி காமராஜ் நகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று (பிப்.28) மக்கும் குப்பை, மக்காத குப்பை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இப்பள்ளியில், மாணவர்கள் பயன்படுத்தும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பேனாவிற்கு பதிலாக, மறுபடியும் பயன்படுத்தக்கூடிய மை பேனா வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.

News February 28, 2025

பிச்சைக்காரர்கள் பற்றி தகவல் தெரிவிக்க அறிவிப்பு!

image

திருச்சியில் சுற்றித்திரியும் பிச்சைக்காரர்கள் குறித்து தகவல் தெரிவிக்க செல்போன் எண்களை திருச்சி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, பொது இடங்களில் பிச்சை எடுக்கும் முதியவர்கள், உடல்நலம் குன்றியவர்கள், குழந்தைகளை வைத்துக்கொண்டு பிச்சை பெறுபவர்கள் குறித்த தகவல்களை மாவட்ட குழந்தை பாதுகாப்பு 63691 83413 என்ற செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News February 28, 2025

வெல்லமண்டி நடராஜன் மனைவி  உடலுக்கு ஓபிஎஸ் அஞ்சலி 

image

ஓபிஎஸ் அணி மாநில பொருளாளரும் அதிமுக முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் மனைவி சரோஜாதேவி நேற்று (பிப்.27) இறந்த நிலையில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வருகை தந்தார். தற்போது சரோஜாதேவி உடலுக்கு மாலை அணிவித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!