India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் இருந்து 40 பயணிகளுடன் நாகர்கோவில் சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ் இன்று அதிகாலை யாகபுரம் பிரிவு ரோட்டில் விபத்துக்குள்ளாகி திடீரென தீப்பற்றி எரிந்ததில் ஆறு பயணிகள் காயம் அடைந்த நிலையில் கன்னியாகுமரி நெடுவிலை பகுதியைச் சேர்ந்த புஷ்பம் என்ற மூதாட்டி படு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்., பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி – ஈரோடு பயணிகள் ரயிலானது (56809) வரும் பிப்ரவரி 1, 3, 6, 8, 10 ஆம் தேதிகளில் கரூா் – ஈரோடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. திருச்சி – பாலக்காடு விரைவு ரயிலானது (16843) பிப்.1 ஆம் தேதி கரூா் – பாலக்காடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மணப்பாறை அருகே சிப்காட் வளாகத்தில் பாரத சாரணர் சாரணர் இயக்கத்தின் வைர விழா மற்றும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு பெருந்திரள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதன் நிறைவு விழா நாளை மாலை 5 மணி அளவில் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
திருச்சி மாவட்ட காவல்துறை இன்று எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி முன்பின் தெரியாத நபர்கள் உங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வாட்ஸ்ஆப் ஆக்டிவேஷன் எண் அல்லது OTP கேட்டால் சொல்ல வேண்டாம் எனவும், வாட்ஸ் ஆப்பை ஹேக் செய்து அதன் மூலம் நூதன முறையில் பணம் பறிக்கும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. SHARE NOW !
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 02.02.2025 அன்று மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் வைர விழா, பெருந்திரளணி (Jamboree) மற்றும் கருணாநிதி நூற்றாண்டு பெருந்திரளணி நிறைவு விழாவில் கலந்து கொள்ள உள்ளார். இதையடுத்து திருச்சி மாவட்டத்தில் ட்ரோன் பறக்க தடை விதித்து ஆட்சியர் பிரதீப் குமார் இன்று (31.01.2025) உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி மன்னார்புரத்தை தலைமையிடமாக கொண்டு எல்பின் நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனம் பல கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடம், ரூ.500 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அந்த நிறுவனத்தின் முக்கிய ஏஜென்டாக விளங்கிய சுந்தர்ராஜன் (60) என்பவரை நேற்று முன்தினம் சிவகாசியில் கைது செய்துள்ளனர்.
திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சரகம், வேலை வாய்ப்பு பயிற்சி துறை சாா்பில், திருச்சி மாவட்டத்தில் மண்டல அளவிலான தொழிற்பழகுநர் சோ்க்கை முகாம் நாளை (ஜன.31) காலை 10 மணி அளவில் திருச்சி அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறுகிறது. இந்தப் பயிற்சியின்போது, உதவித் தொகையாக மாதம் ரூ.7,700 முதல் ரூ.12,000 வரை நிறுவனத்தினரால் வழங்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். SHARE NOW !
தமிழகத்தில் 83 காவல் ஆய்வாளர்கள் பணி இட மாறுதலுடன் டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதன்படி நவல்பட்டு காவல் நிலைய ஆய்வாளர் நிக்சன் மற்றும் திருச்சி விமான நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் உள்பட தமிழகத்தில் 83 காவல் ஆய்வாளர்களுக்கு டிஎஸ்பியாக பதவி உயர்வு வழங்கி தமிழக கூடுதல் செயலாளர் தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார். SHARE NOW !
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று இரவு (ஜன.29) ஏர் ஏசியா விமானம் மூலம் திருச்சி வந்த பயணிகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணி ரூ.94.53 லட்சம் மதிப்பிலான 1141 கிராம் எடை கொண்ட பசை வடிவிலான தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் இருந்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமயபுரம் மாரியம்மன் கோயில் தைப்பூச திருவிழாவானது வரும் 2 ஆம் தேதி தொடங்கும் நிலையில், வரும் 10 ஆம் தேதி தெப்பத் திருவிழாவும், விழாவின் முக்கிய நிகழ்வான அரங்கநாதரிடம் சீர்பெறும் நிகழ்வு வடத்திருக்காவிரிப் பகுதியில் வரும் 11 ஆம் தேதி இரவும் நடைபெறுகிறது. இந்த விழாவுக்கான முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் வி.எஸ்.பி. இளங்கோவன், அலுவலர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
Sorry, no posts matched your criteria.