Tiruchirappalli

News May 25, 2024

திருச்சியின் இயற்கை வரமான புளியஞ்சோலை!

image

திருச்சியில் உள்ள புளியஞ்சோலை கொல்லிமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கு சாலைவசதியுடன் கூடிய புளியஞ்சோலை அருவியும் உள்ளது. பித்துக்குளி குகைக்கு நடந்து செல்லலாம். அழகிய கற்களுடன் உள்ள ஓடையும் அமைந்துள்ளது. இயற்கை கொஞ்சும் பசுமை வாய்ந்த இந்த இடம், மலையேற்றம் செய்பவர்களுக்கும், சாகசத்தில் ஈடுபடுபவர்களுக்கும் இது சிறந்த இடமாகும்.

News May 25, 2024

திருச்சியில் சாலை பணி தீவிரம்

image

திருச்சி, தில்லைநகர் மேற்கு குறுக்கு தெருக்களில் பாதாள சாக்கடை சீரமைக்கும் பணி இன்று நடந்து வருகிறது.சாலைகளின் நடுவே ஜேசிபி மூலம் கீறி இலகுவாக பள்ளம் பறிக்கும் பனி நேற்றும்,இன்றும் நடைபெற்று வருகிறது.இந்த பணியால் அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்த இடம் இன்றி அவதியடைகின்றனர். விரைவில் இப்பணி முடியவேண்டும் வியாபாரிகள் என்று எதிர்பார்க்கின்றனர்.

News May 25, 2024

திருச்சி அருகே கோவில் திருவிழா 

image

திருச்சி மலைக்கோட்டை மட்டுவார்குழலம்மை   உடனுறை தாயுமானவர் திருக்கோயில்  அம்பாள்  திருஞானசம்பந்தர் பெருமானுக்கு ஞானப்பால் அளித்த  ஐதீகம் நந்தவனம் அருகில் நேற்று இரவு நடைபெற்றது. அதனை தொடர்ந்து ரிஷப வாகன காட்சி அளித்து பஞ்ச மூர்த்திகள் திருவீதியுலா மிகச் சிறப்பாக நடைபெற்றது மற்றும் பக்தர்கள் பொது மக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது

News May 24, 2024

திருச்சியில் வழிப்பறி செய்த நபர் மீது குண்டாஸ்

image

திருச்சி கடந்த 23.4.2024ம் தேதி நின்று கொண்டிருந்த ஒருவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் கத்தியை காட்டி மிரட்டி, வாகனத்தை வழிப்பறி செய்வதாக பிரவீன் குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.மேலும் விசாரணையில் பிரவீன் குமார் மீது திருட்டு அடிதடி உட்பட 5 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்ததால், அவரை,இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவிட்டார்.

News May 24, 2024

திருச்சியில் இனி தினமும் குடிநீர் விநியோகம்

image

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் இன்று முதல் தினசரி குடிநீர் வழங்கப்படவுள்ளது என மாநகராட்சி ஆணையர் வே.சரவணன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். திருச்சி மாநகராட்சி பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையத்தில் உள்ள ஆழ் குழாயில் (Radial Arm) மண்துகள்கள் அடைப்பு சரி செய்யப்பட்டதை அடுத்து இனி தினமும் குடிநீர் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

News May 24, 2024

திருச்சியில் மழைக்கு வாய்ப்பு

image

திருச்சி மாவட்டத்தில் இன்று (மே.24) இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருச்சியில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சமீபத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 24, 2024

திருச்சியில் 4 இடங்களில் ஆணையர் ஆய்வு

image

திருச்சி காவிரி நகர் பகுதியில் மழை நீர் வடிகால் சரி செய்யும் பணியினை இன்று மாநகராட்சி ஆணையர் சரவணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அதன்பின்,
அமெரிக்கன் மருத்துவமனை பகுதியில் சுற்றி உள்ள கழிவுநீர் அடைப்பினை சரி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பிறகு அண்ணாநகர் பகுதியில் சேதம் அடைந்த சாலை, மழை நீர் வடிகால்களையும், பர்மா காலனி பகுதியில் உள்ள பூங்காவினையும் ஆய்வு மேற்கொண்டார்.

News May 24, 2024

திருச்சி: வாக்கு எண்ணிக்கை மையத்தை “விசிட்” அடித்த ஆட்சியர்.!

image

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள, திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரதீப் குமார் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் காவல்துறையினரிடமும் , ராணுவ துறையினரிடமும் தீவிரமாக வாக்கு எண்ணிக்கை மையத்தை கண்காணிக்க உத்தரவிட்டார்.

News May 23, 2024

மணச்சநல்லூர்: பெண் தர மறுப்பு! மார்பிங் செய்த இளைசர்

image

மணச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் திருவேங்கைநாதன் . இவர் அப்பகுதியில் உள்ள குடும்பத்தில் பெண் கேட்டு தர மறுத்த நிலையில், அந்த பெண்ணின் புகைப்படத்தை எடுத்து மார்பிங் செய்துள்ளார். மேலும் அவருக்கும் அந்தப் பெண்ணுக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக திருமண பத்திரிகை அடித்து இரு வீட்டாரின் உறவினர் மற்றும் நண்பர்களிடம் அழைப்பிதழ் கொடுத்ததாக எழுந்த புகாரில் இன்று(மே 23) கைது செய்யப்பட்டார்.

News May 23, 2024

திருச்சி: புரோட்டா மாஸ்டர் குத்திக் கொலை

image

திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் முகமது அலி. இவர் கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள டிபன் கடையில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடும்ப பிரச்னை காரணமாக வீட்டுக்கு செல்லாமல் வெளியே தங்கி உள்ளார். இந்நிலையில், நேற்று(மே 22) இரவு மர்ம நபர்களால் முகமது அலி கத்தியால் குத்தப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து பாலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!