India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடும் பனிப்பொழிவு காரணமாக திருச்சி மாவட்டத்திற்கு பூக்களின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் பூக்கள் பல மடங்கு விலை உயர்ந்துள்ளது. இன்று (ஜன.10) காலை நிலவரப்படி காந்தி மார்க்கெட்டில் ரூ.1000 வரை விற்கப்பட்டு வந்த மல்லிகைப்பூ மதியம் ரூ.3500 – ரூ.4000 வரை விற்பனை ஆகிறது. முல்லை ரூ.1500, கனகாம்பரம் ரூ.800, ஜாதிப்பூ ரூ.800, காக்கரட்டான், ரூ.800 ஆகிய விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

திருச்சி மக்களே.. முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, 2 குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். தகுதி, தேவையான ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்களை அறிய திருச்சி மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம். SHARE பண்ணுங்க.

திருச்சி மக்களே, இனி கேஸ் சிலிண்டர் புக் செய்ய சிரமப்பட வேண்டாம். அதனை வாட்ஸ்அப் மூலமே எளிதாக புக் செய்யலாம். அதற்கு இண்டேன் (Indane): 7588888824, பாரத் (Bharat Gas): 1800224344, ஹெச்பி (HP Gas): 9222201122. மேற்கண்ட உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

திருச்சி மாவட்ட மக்கள் வெளிநாட்டில் வேலைவாய்ப்புகளை பெற அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபடும் போலி ஏஜெண்ட்களால் ஏமாறாமல் இருக்க, அரசு அங்கீகரித்த ஏஜெண்ட்களை தொடர்பு கொண்டு, பாதுகாப்பான முறையில் வெளிநாடு வேலைவாய்ப்புகளைப் பெறவும். உங்கள் பகுதி ஏஜென்ட்கள் விவரங்களை பெற <

பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி – காரைக்கால் டெமு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி – காரைக்கால் டெமு ரயிலானது வரும் 11, 14, 20 ஆகிய தேதிகளில், திருவாரூர் – காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சியில் இருந்து திருவாரூர் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி துறையூரை சேர்ந்த அப்பாதுரை என்பவர் “ஸ்ரீ மாரியம்மன் சிட்ஃபண்ட்ஸ்” என்ற பெயரில் தீபாவளி சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக, அவர் மீது பொருளாதார குற்றப்பிரிவு மூலம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே மேற்கண்ட சிட்பண்ட்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டவர்கள், திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மக்களே, பொங்கல் பண்டிக்கைக்கு வெளி ஊர்களில் இருந்து சொந்த ஊருக்கு அரசுப் பேருந்துகள் மூலம் செல்ல உள்ளீர்களா? இத எண்களை நோட் பண்ணி வச்சிக்கோங்க!
1. பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் – 1800 599 1500
2. Luggage தொலைந்து போனால் – 044-49076326
3. ஓட்டுநர் / நடத்துநர் குறித்த புகார் – 1800 599 1500
4. இந்த தகவல் மற்றவர்களுக்கு பயன்பெற SHARE பண்ணுங்க!

தமிழ்நாடு முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா “இது நம்ம ஆட்டம் – 2026” ஒன்றிய அளவிலான போட்டிகள் வரும் 22 ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையிலும், மாவட்ட அளவிலான போட்டிகள் வரும் 30ஆம் தேதி முதல் பிப்.1ஆம் தேதி வரையிலும் திருச்சியில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் வரும் 21 ஆம் தேதிக்குள் https://sdat.tn.gov.in என்ற தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டுமென ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவராக (ஐஜி) இருந்து வந்த நிர்மல் குமார் அண்மையில் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக சென்னையில் நிர்வாக பிரிவு ஐஜி ஆக இருந்து வந்த பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவராக பாலகிருஷ்ணன் நேற்று (ஜன.9) பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவராக (ஐஜி) இருந்து வந்த நிர்மல் குமார் அண்மையில் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக சென்னையில் நிர்வாக பிரிவு ஐஜி ஆக இருந்து வந்த பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவராக பாலகிருஷ்ணன் நேற்று (ஜன.9) பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.