India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருச்சி ஐஓபி வங்கி, ஊரக சுய வேலை வாய்ப்பு நிறுவனம் இணைந்து துரித உணவுகள் தயாரித்தல் குறித்து 12 நாள் இலவச பயிற்சி ஏற்பாடு செய்துள்ளது. இப்பயிற்சிக்கு குறைந்தது 8ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட 18-45 வயதுடைய இரு பாலரும் விண்ணப்பிக்கலாம். இதற்கான பயிற்சிக்கு விண்ணப்பிக்க வரும் ஜன.23ஆம் தேதி கடைசி தேதியாகும். மேலும் விவரங்களுக்கு 8903363396 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் வரும் நாட்களில் 17 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதில் முக்கிய இடங்களாக கருதப்படும் பள்ளப்பட்டி ஜன.25, கருங்குளம் ஜன.25, மஞ்சம்பட்டி பிப்.8, அளுந்தூர் பிப்.22, இருங்களூர் பிப்.23, கல்லக்குடி பிப்.26, அன்பில் மார்ச்.15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த ஸ்கூட் விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை, விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது 2 பயணிகளின் உடைமைகளில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.4.17 கோடி மதிப்பிலான 4.170 கிலோ ஹைட்ரோபோனிக் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.அதனைத் தொடர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த ஸ்கூட் விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை, விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது 2 பயணிகளின் உடைமைகளில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.4.17 கோடி மதிப்பிலான 4.170 கிலோ ஹைட்ரோபோனிக் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.அதனைத் தொடர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி ஐஓபி வங்கி, ஊரக சுய வேலை வாய்ப்பு நிறுவனம் இணைந்து சணல் பொருள்கள் தயாரித்தல் குறித்து 14 நாள் இலவச பயிற்சியை ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு குறைந்தது 8th கல்வி தகுதியுடன், 18-45 வயதிற்கு உட்பட்ட கிராமப்புறத்தினர் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க வரும் ஜன.23-ம் தேதியே கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு 8903363396 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

திருச்சி அரசு சட்ட கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்காக விடுதி கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு, கட்டுமான பணிகள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், கட்டுமான பணிகளை விரைந்து தொடங்க வேண்டுமென கே.கே.நகரை சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள், ஓராண்டுக்குள் விடுதியை கட்டி முடிக்க வேண்டுமென உத்தரவிட்டனர்.

திருச்சி மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு க்ளிக் செய்து, எந்த நிறுவனம்(Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

திருவரங்கம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி நாளை ஜன.21-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் மத்திய சிறைச்சாலை, செம்பட்டு, காஜாமலை, கிராப்பட்டி, எடமலைப்பட்டி புதூர், பஞ்சப்பூர், அரியமங்கலம், மேலகல்கண்டார் கோட்டை, அம்மா மண்டபம், திருவானைக்கோவில், மேலூர் சங்கிலியாண்டபுரம், அரியமங்கலம் ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தெரிவித்துள்ளார். SHARE IT.!

திருவரங்கம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி நாளை ஜன.21-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் மத்திய சிறைச்சாலை, செம்பட்டு, காஜாமலை, கிராப்பட்டி, எடமலைப்பட்டி புதூர், பஞ்சப்பூர், அரியமங்கலம், மேலகல்கண்டார் கோட்டை, அம்மா மண்டபம், திருவானைக்கோவில், மேலூர் சங்கிலியாண்டபுரம், அரியமங்கலம் ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தெரிவித்துள்ளார். SHARE IT.!

திருவெறும்பூர் அடுத்த கூத்தைப்பார் பகுதியில், தனியார் பள்ளி பேருந்து ஒன்று முன்னே சென்று கொண்டிருந்த ஸ்கூட்டர் மீது மோதியது. ஒதில், ஸ்கூட்டரை ஒட்டிச்சென்ற கல்லூரி மாணவி நர்மதா என்பவர் படுகாயமடைந்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், விபத்தை ஏற்படுத்திய பள்ளி பேருந்தை போலீசார் பறிமுதல் செய்து, வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.