India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொகுப்பு வீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 663 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

எடமலைப்பட்டி புதூர் ஜே.ஜே நகர் பகுதியைச்சேர்ந்த கோபால் என்பவர் குடும்ப பிரச்சனையில், தனது மனைவியை தாக்கி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், கோபால் மீது குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி விஷ்ணு பிரியா உத்தரவிட்டார்.

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <

தமிழகத்தில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர், கிளை மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்:2019
3. வயது – 18 – 40
4. சம்பளம்: ரூ.29,380
5. தகுதி: 10 ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 16.02.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

திருச்சி மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.

திருச்சி மாவட்டம் அதவத்தூர், சிறுகனூர் துணை மின் நிலையங்களில் நாளை (பிப்.3) மாதந்தர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன்படி, வாசன் நகர், குழுமணி, வயலூர், சோமரசம்பேட்டை, புலியூர், போதாவூர், சிறுகனூர், ஆவாரவள்ளி, திருப்பட்டூர், வாழையூர், குமுளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை SHARE பண்ணுங்க!

திருச்சி, துவாக்குடி பெல் நகர் கலைஞர் தெருவை சேர்ந்த தம்பதி குணசேகரன் (59) – லட்சுமி (55). இவர்கள் இருவரும் நேற்று துவாக்குடி செல்வதற்காக பெல் நகர் பகுதியில் இருந்து திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் டூவீலரில் திரும்பிய போது வேதாரண்யத்தில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற கார் மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து பெல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், அணியாப்பூர் கிராமம், வீரமலைபாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில், வரும் பிப்.2 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை, துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளது. இதனால் இப்பகுதியில் காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரையும், மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையும், பொதுமக்கள் நடமாடவோ, கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஈடுபடுத்தவோ கூடாது என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் கடந்த 19.12.25 முதல் 30.01.26 வரை நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமில், மொத்தம் 1,37,308 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட விண்ணப்பங்களை வாக்காளர் பதிவு அலுவலர்கள் பரிசீலனை செய்து, வரும் 10-ம் தேதிக்குள் இறுதி முடிவு செய்வார்கள். பின்னர் பிப்.17-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.