India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருச்சி மத்திய மண்டல காவல் சரகத்துக்கு உட்பட்ட 9 மாவட்டங்களிலும் உள்ள தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லங்கள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் தங்கியுள்ள, வெளிநாட்டவர் மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் விவரங்களை, அந்தந்த நிறுவனங்கள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்ய தவறினால் வழக்கு தொடர்ந்து அபராதம் விதிக்கப்படும் என மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க <

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (NIT) ஒரு மருந்தாளுநர் காலிப்பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://nittnt.samarth.edu.in/index.php/site/login என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை “தி ரெஜிஸ்டர், தேசிய தொழில்நுட்ப கழகம், திருச்சி – 620015” என்ற முகவரிக்கு வரும் 14-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மக்களே, உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை தாண்டி அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது. Indane: 75888 88824, HP Gas: 92222 01122, Bharat Gas: 1800 22 4344. இந்த எண்களில் Gpay, Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பில் பணத்தை செலுத்துங்க.. இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேட்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

மணச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 4 வயது குழந்தையை அதே பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்படி, அவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்தார். இந்நிலையில் இவரின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் விதமாக, நேற்று ராஜாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க திருச்சி மாவட்ட எஸ்பி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திருச்சி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து காலை 8:40 மணிக்கு புறப்படும், திருச்சி – காரைக்கால் டெமு ரயிலானது வரும் பிப்.4, 5, 6, 7, 8 ஆகிய தேதிகளில், பொறியியல் பணிகள் காரணமாக திருவாரூர் – காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சியில் இருந்து திருவாரூர் வரை மட்டுமே இயங்கும் என, திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் இன்று (பிப்.4) மாதந்தர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக அதவத்தூர், சோமரசம்பேட்டை, குழுமணி, மருவத்தூர், நரசிங்கபுரம், டி.ரெங்கநாதபுரம், செங்கட்டுப்பட்டி, உப்பிலியபுரம், கொப்பம்பட்டி, கோட்டப்பாளையம், மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9:45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை SHARE பண்ணுங்க!

லால்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மனக்கால் பகுதியில் வசித்து வரும் ரவீந்திரகுமார் என்பவரை கமலேஷ் என்பவர் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் கமலேஷை கைது செய்தனர். இந்நிலையில் சிறையில் இருந்து வரும் கமலேசின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் விதமாக, நேற்று அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க திருச்சி மாவட்ட எஸ்பி செல்வ நாகரத்தினம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த மணக்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர் (33). இவர் நேற்று மேலவாளாடியில் இருந்து இருசக்கர வாகனத்தில் லால்குடி நோக்கி சென்று கொண்டிருந்த போது, அரியலூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய பஸ் டிரைவர் சேகர் (50) என்பவரை கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.