Tiruchirappalli

News February 3, 2026

திருச்சி: பாதி வழியில் பெட்ரோல் காலியா ?

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் <>’Fuel@Call<<>>’ என்ற ஆப்பின் மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிப்பொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!

News February 3, 2026

திருச்சி: 70% மானியத்தில் பம்புசெட் வேண்டுமா?

image

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரியநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு உழவன் App மூலமாக விண்ணப்பித்து, பெயரை ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. இந்த 70 சதவீதத்தில், 40 % முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அறிய உங்கள் மாவட்ட வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகவும். பிறரும் பயன்பெற SHARE செய்து உதவுங்கள்.

News February 3, 2026

திருச்சி – பாலக்காடு டவுன் விரைவு ரயில் ரத்து

image

பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி – பாலக்காடு டவுன் விரைவு ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி – பாலக்காடு டவுன் விரைவு ரயிலானது வரும் பிப்.6, 8, 10 ஆகிய தேதிகளில் ஊத்துக்குளி – பாலக்காடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சியில் இருந்து ஊத்துக்குளி வரை மட்டுமே இயக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 3, 2026

திருச்சி கலெக்டர் அறிவிப்பு

image

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் வேளாண்மை பொறியியல் துறை சார்பில், கிராமப்புற இளைஞர்களுக்கான “வேளாண் இயந்திரங்கள் செயல் விளக்க பயிற்சி” வரும் பிப்.10 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை திருச்சியில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் திருச்சி வ.உ.சி சாலையில் உள்ள இயந்திர கலப்பை பணிமனையில் நேரில் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News February 3, 2026

திருச்சி: ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

image

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் திருச்சி மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார்.

News February 3, 2026

திருச்சி: ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

image

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் திருச்சி மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார்.

News February 3, 2026

திருச்சி: அரசு பஸ் மோதி சம்பவ இடத்திலேயே பலி

image

திருச்சி நம்பர்-1 டோல்கேட்டில் இருந்து லால்குடி செல்லும் சாலையில், மேலவாளாடி பகுதியில் லால்குடி நோக்கி சென்ற இருசக்கர வாகனம் மீது எதிரே வந்த அரசு பேருந்து இன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்தவர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து நம்பர்1 டோல்கேட் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

News February 3, 2026

திருச்சி: WhatsApp-ல் சான்றிதழ்கள்! HI சொல்லுங்க

image

திருச்சி மாவட்ட மக்களே, இனி இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ் போன்றவற்றை பெற அரசு அலுவலகங்கள் அல்லது இ-சேவை மையங்களுக்கு நேரில் அலைய வேண்டிய அவசியமில்லை. இனி அவற்றை வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இதனை SHARE பண்ணுங்க.

News February 3, 2026

திருச்சி: ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு

image

திருச்சி மன்னார்புரம் காஜாநகர் நேற்று மாலை ஆட்டோ சவாரி ஏற்றுவது தொடர்பாக, ஓட்டுநர்களான ராஜேஷ் கண்ணா – ரத்தினம் ஆகியோர் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜேஷ் கண்ணா, ரத்தினத்தை அரிவாளால் வெட்டியதில், அவர் படுகாயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து கேகே நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News February 3, 2026

திருச்சி: 8-ம் வகுப்பு மாணவன் பரிதாப பலி

image

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மஞ்சம்பட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் நிஷாந்த் ஆண்டணி (13) என்பவர் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய போது, நிஷாந்த் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மணப்பாறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!